ஜே.பி.நட்டா கொரோனாவிலிருந்து நிவாரணம்!

புதுடெல்லி (01 ஜன 2021): கொரோனா பாதிப்பில் இருந்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குணமடைந்துள்ளார். கடந்த மாதம் 13ம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். அவரது குடும்பத்தினருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அனைவருக்கும் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து நட்டா குணமடைந்துள்ளார். இத்தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘கொரோனாவில் இருந்து குணமடைய வேண்டி எனக்காக பிரார்த்தனை…

மேலும்...

மரபணு மாற்றப்பட்ட கோவிட் பாதித்தவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 25 ஆக உயர்வு!

புதுடெல்லி (31 டிச 2020): இந்தியாவில் மேலும் ஐந்து பேருக்கு மரபணு மாற்றப்பட்ட கோவிட் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, இதன் மூலம் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையை 25 ஆக உயர்ந்துள்ளது. புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் நேற்று உறுதிப்படுத்தப்பட்ட ஐந்து வழக்குகளில் நான்கு கண்டறியப்பட்டது. இந்த நோய் கண்டறியப்பட்டவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட கோவிட் மாதிரிகள் பல்வேறு ஆய்வகங்களில் சோதனை செய்யப்படுகின்றன. நிம்ஹான்ஸ் பெங்களூர், சி.சி.எம்.பி ஹைதராபாத், என்.ஐ.வி புனே, என்.சி.டி.சி…

மேலும்...

இந்தியாவிற்குள் புகுந்த புதுவகை கொரோனா – 6 பேருக்கு உறுதி!

புதுடெல்லி (29 டிச 2020): இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த ஆறு பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் 25ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை இங்கிலாந்தில் இந்தியா வந்த பயணிகளை கண்டறிந்து தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டு வருகிறது. இதுவரை 33,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அதில் 114 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இவர்களது சளி மாதிரி உள்ளிட்டவற்றை…

மேலும்...

பொது சுகாதாரத்திற்காக முதலீட்டை அதிகரிக்க உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளுக்கு வலியுறுத்தல்!

ஜெனீவா(28 டிச 2020): பொது சுகாதாரத்தில் முதலீட்டை அதிகரிக்க உலக சுகாதார அமைப்பு (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் ஜெப்ரியாஸ் உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். “எதிர்கால தொற்றுநோய்கள் மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும்” என்று டிசம்பர் 27 சர்வதேச தொற்றுநோய் தினத்தில் டெட்ரோஸ் அதானோம் ஜெப்ரியாஸ் தெரிவித்தார். மேலும் “இது கடைசி தொற்றுநோயாக இருக்காது என்று வரலாறு நமக்குக் கூறுகிறது, தொற்றுநோய்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகும்” என்று அவர் வலியுறுத்தினார்….

மேலும்...

கோவிட் மேல் சிகிச்சைக்காக முதல்வர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்!

புதுடெல்லி (28 டிச 2020):: கோவிட் 19 பாதிப்பால் உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், சிறப்பு சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் டெஹ்ராடூன் டூன் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். “ராவத்தின் உடல்நிலை குறித்து நாங்கள் கவலைப்பட ஒன்றுமில்லை” என்று மருத்துவமனையின் முத்த அதிகாரி டாக்டர் நோடல் கூறியுள்ளார் . இதுவரை உத்தரகண்ட் மாநிலத்தில் கோவிட் 19 பாதிப்பால் 89,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,400 பேர் இறந்துள்ளனர்.

மேலும்...

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் ராணுவ வீரர்கள் 150 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்!

புதுடெல்லி (26 டிச 2020): குடியரசு தினம் மற்றும் அணிவகுப்பில் பங்கேற்கவுள்ள 150 வீரர்களுக்கு கொரோனா சோதனையில் பாசிட்டிவ் எனபது உறுதியாகியுள்ளது. அணிவகுப்புக்கான பயிற்சிக்காக டெல்லி வந்த சில வீரர்களுக்கு , பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக கோவிட் பரிசோதிக்கப்பட்டபோது அவர்களுக்கு கோவிட் பதித்திருப்பது கண்டறியப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. சுமார் ஆயிரம் வீரர்கள் மீது இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. இந்நிலையில் கோவிட் உறுதிப்படுத்தியவர்கள் சிறப்பு கண்காணிப்பு மையத்திற்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள்…

மேலும்...

நடிகர் ரஜினி உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை சனிக்கிழமை புதிய அறிக்கை!

ஐதராபாத் (26 டிச 2020): நடிகர் ரஜினி உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை சனிக்கிழமை அன்று புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாய் அடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அப்போது ரஜினிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. ஆனாலும், சென்னை திரும்பாமல் ஐதராபாத்தில் ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில், நேற்று ரஜினிக்கு…

மேலும்...

சவூதி மக்காவில் உம்ரா கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

மக்கா (26 டிச 2020): புதிய கோவிட் வைரஸின் பயம் தொடரும் நிலையில் , மக்காவில் உள்ள ஹராமில் கட்டுப்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனில் புதிய கோவிட் வைரஸின் பரவல் அதிகரித்திருப்பதால் சவூதி அரேபியா சர்வதேச விமான சேவை கடல் போக்குவரத்து ஆகியவற்றை ஒருவாரம் நிறுத்தி வைத்துள்ளது. இதற்கிடையே ஏற்கனவே கோவிட்டின் கட்டுப்பாடு மக்கா ஹரமில் உள்ள நிலையில், புதிய சூழ்நிலைக்கேற்ப மேலும் கட்டுப்பட்டு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் உம்ரா யாத்ரீகர்களின் வருகை தற்காலிகமாக நிறுத்தி…

மேலும்...

நடிகர் ரஜினிகாந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு – அப்பல்லோவில் அனுமதி!

ஐதராபாத் (25 டிச 2020): நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமக ஐதரபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் ரஜினி அண்ணாத்தே படப்பிடிப்பில் இருந்த நிலையில் படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. உடனே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ரஜினிக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. எனினும் கோவிட் பாதிப்பு இல்லை என உறுதியான நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தார். இந்நிலையில் இன்று அவருக்கு இரத்த அழுத்தம் அதிகமாகவே ஐதரபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். எனினும்…

மேலும்...

துபாயிலிருந்து புறப்படும் விமான சேவைகள் இடமாற்றம்!

துபாய் (25 டிச 2020): கோவிட் காட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக துபாயிலிருந்து புறப்படும் விமானங்கள் ராஸல் கைமாவுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் சில ராஸ் அல் கைமாவிலிருந்து புறப்பட்டன. துபாயிலிருந்து கொச்சி, கோழிக்கோடு மற்றும் மங்களூர் ஆகிய விமானங்களுக்கு இன்று ராஸ் அல் கைமாவிலிருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் மதுரை ஆகிய பகுதிளுக்கான விமானங்களும் இன்று ராஸ் அல் கைமாவிலிருந்து புறப்படும். இதன் ஒருபகுதியாக அபுதாபி, துபாய் மற்றும்…

மேலும்...