டாக்டர் கபீல்கான் மீண்டும் கைது!

மும்பை (30 ஜன 2020): டாக்டர் கபீல்கான் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேசம் அலிகார் பல்கலைக் கழகத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேசியதாகவும், மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டியதாகவும் அவர் மீது சென்ற மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் தற்போது மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு, கோராக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் பல குழந்தைகள் பலியான நிலையில் ஆக்சிஜனுக்கு தன் சொந்த பணத்தில் உதவி புரிந்தபோதும் அவர் மீது வழக்கு…

மேலும்...

நெஞ்சு வலி காரணமாக நெல்லை கண்ணன் மருத்துவமனையில் அனுமதி!

திருநெல்வேலி (30 ஜன 2020): நெல்லை கண்ணன் நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடநத பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டார். பின்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவர் தினமும் காலையும், மாலையும் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில் நெஞ்சுவலி, மூச்சித்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான ஐரோப்பிய யூனியன் தீர்மானம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!

லண்டன் (30 ஜன 2020): இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட ஐரோப்பிய யூனியன் தீர்மானம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிஏஏ.,வுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் பார்லி.,யில் 5 அமைப்புகள் சார்பில் 6 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஐநாவின் மனித உரிமைகள் ஆணையம் கடந்த மாதம் விடுத்த அறிவிப்பில், சிஏஏ என்பது அடிப்படையில் பாகுபாட்டுடன் இருப்பதாகக் குறிப்பிட்டது. மேலும் இந்தச் சட்டம் , சர்வதேச மனித உரிமை விதிகளுக்கும், இந்தியா, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே 2005…

மேலும்...

சிஏஏ விவகாரம்: முஸ்லிம் பெண்ணின் வங்கி கணக்கு புத்தகத்தில் தில்லு முல்லு செய்த வங்கி!

ஈரோடு (30 ஜன 2020): ஈரோட்டில் முஸ்லிம் பெண்ணின் வங்கிக் கணக்கு புத்தகத்தில் புலம் பெயர்ந்தவர் என பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. ஈரோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், ஈரோடு பெரியார் நகரில் வசிக்கும் டாக்டர் சலீம் மனைவி ஜஹானாரா பேகம் என்பவர் வங்கிக் கணக்குத் துவக்கினார். வங்கி மூலம் கணக்கு துவங்கி கணக்குப் புத்தகம் வழங்கினர். அதில் இரு இடங்களில் புலம் பெயர்ந்தவர்(migration)என பதிவாகி உள்ளது. இதை அறிந்து டாக்டர் சலீம்…

மேலும்...

சிஏஏ போராட்டம் – பெண்களை குறி வைக்கும் அரசு!

காஞ்சிபுரம் (29 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோலப் போராட்டம் நடத்திய பெண்கள் கைது செய்யப் பட்ட நிலையில் தற்போது சுவரில் ஓவியம் வரைந்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வருகின்றன. இந்தப் போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரவளித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக துண்டுப்பிரசுரம் விநியோகித்தாலும், கோலம் போட்டு…

மேலும்...

சுடப்படும் இடத்தை சொல்லுங்கள் நான் தயார் – அனுராக் தாக்கூருக்கு அசாதுத்தீன் உவைசி சவால்!

மும்பை (29 ஜன 2020): “குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை சுட வேண்டுமெனில் என்னை சுடுங்கள்” என்று ‘ஆல் இந்தியா மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமிமன்’ (AIMIM) தலைவர் அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் ஆத் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிவருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் தொடர்ந்து நடந்துவருகிறது. டெல்லியில் மாணவர்கள்…

மேலும்...

ஆண்டுவிழா நாடகம் போட்ட பள்ளிக்கூடம் மீது தேச துரோக வழக்கு பாய்ந்தது!

பெங்களூரு (29 ஜன 2020): பள்ளி ஆண்டு விழாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நகைச்சுவை நாடகம் போட்ட பள்ளி நிர்வாகம் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள ஷஹீன் பள்ளியில் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற ஆண்டுவிழாவின் போது மாணவர்களின் கலை நிகழ்ச்சியாக 4 ஆம் வகுப்பு மாணவர்கள் நகைச்சுவை நாடகம் ஒன்றை அரங்கேற்றினர். அந்த நாடகத்தில் குடியுரிமை சட்டத்தை விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் அரசின் சட்டத்தை அவமதிக்கும் விதமாக இருப்பதாக…

மேலும்...

கவர்னருக்கு எதிராக சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் கோஷம்!

திருவனந்தபுரம் (29 ஜன 2020): கேரள சட்டசபையில் கவர்னர் ஆரிப் முஹம்மது கானுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திற்கு எதராக கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றத்திலும் மாநில அரசு வழக்கு தொடர்ந்தது. மாநில அரசு தனக்கு தெரியாமல் வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்த கவர்னர், தன்னிடம் தகவல் தெரிவிக்காததற்கு அதிருப்தி தெரிவித்தார். இது தொடர்பாக மாநில அரசிடமும் அறிக்கை கோரியிருந்தார். இந்நிலையில், இன்று(ஜன.,29) துவங்கும் இந்த ஆண்டின்…

மேலும்...

ஷஹீன் பாக் போராட்டக் களத்தில் பரபரப்பு – துப்பாக்கியுடன் நுழைந்த நபர்: வீடியோ!

புதுடெல்லி (29 ஜன 2020): டெல்லி ஷஹீன் பாக் போரட்டக் களத்தில் துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒருவர் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்த நினைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக…

மேலும்...

ஜே.என்.யூ மாணவர் ஷார்ஜில் இமாம் கைது!

பாட்னா (28 ஜன 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக ஜே.என்.யு மாணவர் ஷர்ஜில் இமாம் கைது செய்யப்பட்டுள்ளார். வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவிலிருந்து பிரித்துவிடலாம் என்று பேசியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஷர்ஜில் இமாம் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் உபி.யில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக உத்தரபிரதேச போலீசாரும் இவர் மீது வழக்கு…

மேலும்...