குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ போர்க்கொடி!

போபால் (28 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மத்திய பிரதேச பாஜக எம்.எல்.ஏ நாராயன் திருப்பதி போர்க்கொடி உயர்த்தியுள்ளார். நாடு முழுவதும் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக(சிஏஏ), தேசிய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மத்திய பிரதேச பாஜக எம்.எல்.ஏ நாராயன் திருப்பதி குடியுரிமை சட்டம் நம் நாட்டு இறையாண்மைக்கு எதிரானது என தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவை மதத்தால் பிரிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். “நான் கிராமத்திலிருந்து வந்தவன். அங்கு ஒரு…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பிரபல நடிகை போர்க்குரல்!

மும்பை (28 ஜன 2020): குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு போன்றவற்றை நான் ஆதரிக்கவில்லை என்று பாலிவுட் நடிகை பூஜாபட் தெரிவித்துள்ளார்.. நாடு முழுவதும் ஆங்காங்கே குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு(என்ஆர்சி) ஆகியவற்றுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தெற்கு மும்பையில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிரான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், பாலிவுட் நடிகை பூஜாபட் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: நாம் அமைதியாக இருப்பது நம்மை காப்பாற்றாது….

மேலும்...

பாஜகவின் மதவெறிக்கு எதிராக ஸ்டாலின் கடிதம்!

சென்னை (28 ஜன 2020): குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்தில், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இல்லத்திலும் கையெழுத்துப் பதிவாகிட வேண்டும் என தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு தனக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்கிற அதிகார ஆணவத்தினால் இந்திய ஒன்றியத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் உடைக்கும் வகையில் மொழி-பண்பாடு-இனம்-மதம் எனப் பல தளங்களிலும்…

மேலும்...

இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க மத ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்: மத்திய அரசு!

புதுடெல்லி (28 ஜன 2020): இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க மத ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இயற்றப்பட்ட திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் போராட்டம் வேடித்துள்ளது. மேலும் வெளிநாடுகளிலிருந்தும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இநிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமையை பெறும் அகதிகள் தாங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பது குறித்த சான்றிதழ், விண்ணப்பங்களுடன் இணைப்பது கட்டாயம் என டெல்லி வட்டாரங்களை மேற்கோள்காட்டி…

மேலும்...

பாப்புலர் ஃப்ரெண்ட் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது – பாப்புலர் ஃப்ரண்ட் அறிக்கை!

புதுடெல்லி (28 ஜன 2020): CAA எதிர்ப்பு போராட்டங்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் நிதி உதவி என்ற குற்றச்சாட்டுகள் போலியானது! ஆதாரமற்றது என்று பாபுலர் ஃப்ரெண்ட் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் தேசிய பொதுச் செயலாளர் எம். முஹம்மது அலி ஜின்னா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: CAA போராட்டத்தை தூண்டுவதற்கு பாப்புலர் ஃப்ரண்டின் நிதி உதவி என பல்வேறு செய்தி சேனல்களில் வெளியிடப்படும் செய்தி அறிக்கைகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முற்றிலும் மறுப்பதுடன் வன்மையாக கண்டிக்கவும் செய்கின்றது. முதலில்,…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் கொந்தளிப்பு!

புதுடெல்லி (28 ஜன 2020): குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பா.ஜ.க. முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு யஷ்வந்த் சின்ஹா, தனது ஆதரவாளர்களுடன் யாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த 9-ம் தேதி, மும்பையில் பயணத்தை தொடங்கிய அவர், ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களைத் தொடர்ந்து, தற்போது உத்தரபிரதேசத்தை வந்தடைந்துள்ளார். . இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில், அம்மாநில முன்னாள் முதலமைச்சர் திரு. அகிலேஷ் யாதவுடன், நிகழ்ச்சியில் பங்கேற்ற திரு. யஷ்வந்த் சின்ஹா, குடியுரிமை…

மேலும்...

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்கத்திலும் தீர்மானம் நிறைவேறியது!

கொல்கத்தா (27 ஜன 2020): குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நான்காவது மாநிலமாக மேற்கு வங்கத்திலும் தீர்மானம் நிறைவேறியது. சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றிய கேரளா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக மேற்கு வங்கம் திங்களன்று நான்காவது மாநிலமாக மாறியது. தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (NPR) திரும்பப் பெறவும், குடிமக்களின் தேசிய பதிவேட்டை (NRC) முன்மொழியப்பட்ட பான்-இந்தியா செயல்படுத்தவும் இது அரசாங்கத்தை கோரியது. பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தை மேற்கு வங்க நாடாளுமன்ற…

மேலும்...

பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் வெளியேற்றம்!

ஐதராபாத் (27 ஜன 2020): குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட இருந்த பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத், நேற்று மாலை ஹைதராபாத் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப் பட்டார். அதனைத் தொடர்ந்து, அவர் இன்று காலை டெல்லிக்கு அனுப்பி வைக்கப் படுவதாகவும், தனது ஆதரவாளர்களை போலீசார் தாக்கியதாகவும் சந்திரசேகர் ஆசாத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சந்திரசேகர் ஆசாத் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது: “தெலுங்கானாவில் சர்வாதிகாரம் அதன் உச்சத்தில் உள்ளது. முதலில் எனது ஆதரவாளர்கள்…

மேலும்...

மோடிக்கு மதிப்பு மிக்க பரிசு வழங்கிய காங்கிரஸ் கட்சி!

புதுடெல்லி (27 ஜன 2020): பிரதமர் மோடிக்கு அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை பரிசாக வழங்க ஆர்டர் செய்துள்ளது காங்கிரஸ் கட்சி. பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம், மத அடிப்படையில் நாட்டை பிளவு படுத்துவதாக கூறி எதிர் கட்சிகள், பொதுமக்கள், மாணவர்கள் என இந்தியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினத்தன்று காங்கிரஸ் கட்சி நிர்வாகம், பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தை அமேசானில் ஆர்டர் செய்துள்ளது. அத்துடன், “குடியுரிமை…

மேலும்...

நள்ளிரவில் பரபரப்பு – சென்னை சிந்தாதிரிப் பேட்டை காவல் நிலையம் முற்றுகை!

சென்னை (27 ஜன 2020): சென்னை சிந்தாதிரிப் பேட்டை காவல் நிலையம் நள்ளிரவில் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை ரிச்சி தெருவில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேனா விநியோகிக்கப் பட்டதில் அதனை தடுத்தது காரணமாக 6 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். மேலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப் பேட்டையில் நடைபெற்ற போராட்டத்திலும் சிலர் கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் விடுதலை செய்யக் கோரி சென்னை சிந்தாதிரிப் பேட்டை காவல்…

மேலும்...