கொரோனா மூன்றாவது அலை எப்படி இருக்கும்? – ஆய்வு தகவல்!

Share this News:

புதுடெல்லி (03 ஜூலை 2021): கொரோனா மூன்றாவது அலை பரவினால், அது கொரோனாவின் முதல் அலைக்கு ஒத்ததாக இருக்கும். அல்லது அதைவிட குறைவானதாக இருக்கும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

ஒன்றிய அரசின் கீழ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நிபுணர் குழு நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த மதிப்பீடு அமைந்துள்ளது. கான்பூர் ஐஐடி அகர்வால், ஹைதராபாத் ஐ.ஐ.டி . கனித் கார், வித்யாசாகர் குழுவின் உறுப்பினர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

மூன்றாவது அலையானது நோய் எதிர்ப்பு சக்தி இழப்பு மற்றும் தடுப்பூசி மூலம் பெறப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே அமையும் . என்று அந்த குழு தெரிவித்துள்ளது.

மேலும் இரண்டாவது அலை ஆகஸ்ட் பிற்பகுதியில் அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் அதன் மிகக் குறைவான நிலையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்றும் அந்த குழு தெரிவித்துள்ளது..


Share this News:

Leave a Reply