அஸ்ட்ராஜெனெகா மூன்றாவது டோஸுக்கு ஓமிக்ரனை எதிர்க்கும் சக்தி அதிகம் : ஆய்வு!

லண்டன் (13 ஜன 2022): அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது பூஸ்டர் டோஸுக்குப் பிறகு கோவிடின் மாறுபாடான ஓமிக்ரானுக்கு எதிராக நல்லமுறையில் செயல்படுவதாக ஆங்கிலோ-ஸ்வீடிஷ் பயோஃபார்மா மேஜர் வெளியிட்ட ஆரம்ப தரவு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டு இந்தியாவில் கோவிஷீல்டாக நிர்வகிக்கப்படும் தடுப்பூசியின் தற்போதைய பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்புத் திறன் சோதனையில், மூன்றாவது டோஸாக கொடுக்கப்படும் பூஸ்டர் டோஸ், பீட்டா, டெல்டா, ஆல்பா மற்றும் காமா உள்ளிட்ட கொரோனா வைரசுக்கு உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்தது…

மேலும்...

ஃபைசர் கொரோனா தடுப்பூசி ஒமிக்ரானுக்கு எதிராக 70 சதவீதம் வரை ஆதிக்கம் செலுத்தும்!

கவுடங்க் (31 டிச 2021):தென் ஆப்பிரிக்காவின் கவுடங்க் மாகானத்தின் புதிய ஆராய்ச்சியின்படி ஃபைசர் கொரோனா தடுப்பூசி ஒமிக்ரானுக்கு எதிராக எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்த கூடுதல் தகவலை அளித்துள்ளது. அதன்படி ஃபைசர் கொரோனா தடுப்பூசி ஒமிக்ரானுக்கு எதிராக 70 சதவீதம் வரை ஆதிக்கம் செலுத்தும் என்று நியூ இங்கிலாந்து மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் 75 சதவீதத்திற்கும் அதிகமான கோவிட்-19 சோதனைகளில் ஓமிக்ரான் மாறுபாடு கண்டறியப்பட்டது,…

மேலும்...

பைஸரை தொடர்ந்து மேலும் ஒரு கொரோனா மாத்திரைக்கு அமெரிக்கா ஒப்புதல்!

நியூயார்க் (25 டிச 2021): அமெரிக்காவில் இரண்டாவது கோவிட் மாத்திரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனாவுக்கு பைசர் (Pfizer) நிறுவனம் மாத்திரை கண்டுபிடித்துள்ளது. இதற்கு அங்கிகாரம் கிடைத்த மறுநாளே இரண்டாவது மாத்திரை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. புதிய மாத்திரையை மெர்க் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட ஐந்து நாட்களுக்குள் மாத்திரையை உட்கொள்ள வேண்டும். இது இறப்பு மற்றும் மருத்துவமனையில் தங்குவதை 30 சதவிகிதம் குறைக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. அதேவேளை…

மேலும்...

ஒமிக்ரானுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் பைசர் தடுப்பூசி – ஆய்வாளர்கள் தகவல்!

நியூயார்க் (14 டிச 2021): ஒமிக்ரான் வகை கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தென்னாப்ரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான், தற்போது பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. இந்த நிலையில், ஃபைசர் தடுப்பூசி ஒமிக்ரான் வகை கொரோனாவுக்கு எதிராக சிறந்து செயல்படுவதாக தென்னாப்ரிக்க மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டவர்களில், இரண்டு தவணை ஃபைசர் தடுப்பூசி செலுத்தியிருந்த 70 சதவிகிதம் பேரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை…

மேலும்...

இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!

ஜகார்த்தா (14 டிச 2021): இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள மெளமரே அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 7.6 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இதனால் கடலில் சுனாமி அலைகள் எழும்பக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2004 டிசம்பரில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தமிழக கடலோர…

மேலும்...

ஒமிக்ரான் வகை கொரோனா வைரசுக்கு முதல் பலி!

லண்டன் (13 டிச 2021):ஒமிக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், ஒருவர் உயிரிழந்திருக்கக்கூடும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். மேற்கு லண்டனில் பாடிங்க்டன் என்ற இடத்தில் நடந்த தடுப்பூசி முகாமொன்றில் பேசிய அவர், “வருத்தமளிக்கும் விதமாக, ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழல் உள்ளதுதான். அதேபோல வேதனை தரும்வகையில், இதுவரை ஒமிக்ரான் உறுதியானவர்களில் குறைந்தது ஒருவராவது உயிரிழந்துள்ளார். இதன் பரவும் வேகத்தை நாம் இன்னும் சரியாக கணிக்க வேண்டியுள்ளது. ஆகவே இதிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள…

மேலும்...

ஒரே நாளில் 10 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் – அதிர்ச்சித் தகவல்!

நியூசிலாந்து (13 டிச 2021): நியூசிலாந்தில் ஒரே நாளில் 10 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவை வீழ்த்த தடுப்பூசி ஒன்றே ஆயுதமாக உள்ள நிலையில், உலக நாடுகள் அனைத்தும் தங்கள் குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதே நேரத்தில், புதிய மாறுபாடான ஒமிக்ரானுக்கு எதிராக பாதுகாக்கும் நோக்கில், சில நாடுகள் பூஸ்டர் டோஸ்கள் செலுத்தும் பணியையும் தொடங்கியுள்ளன. ஒமிக்ரான் (Omicron) பீதிக்கு மத்தியில் தடுப்பூசிகள்…

மேலும்...

ஒமிக்ரான் அதி வேகத்தில் பரவக்கூடியது – உலக சுகாதார அமைப்பு!

ஜெனீவா (13 டிச 2021): உலகளவில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த 9-ம் தேதி நிலவரப்படி 63 நாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று பரவி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நாம் செலுத்தி இருக்கும் தடுப்பூசிகளின் செயல்திறனை ஒமிக்ரான் வைரஸ் குறைத்து வேகமாக பரவும் அபாயம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார மையம் கூறிய விளக்கத்தில், “உலகளவில் கிடைக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில் கொரோனா…

மேலும்...

ஒமிக்ரான் வைரஸ் குறித்து ஃபைஸர் நிறுவனம் சொல்வது என்ன?

நியூயார்க் (01 டிச 2021): தங்கள் நிறுவனத்தின் தற்போதைய தடுப்பூசி ஒமிக்ரானுக்கு எதிராக செயல்படாமல் போகலாம் என்பதால், அதற்கு எதிரான ஒரு தடுப்பூசி வெர்சனை உருவாக்கும் பணியை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்கா நாட்டில் 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளுடன் பி.1.1.529 என்ற புதிய கரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இந்த 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளில், 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் வைரஸின் ஸ்பைக் ப்ரோட்டினில் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் என உலக சுகாதார நிறுவனத்தால் பெயரிடப்பட்டுள்ள இந்தப்…

மேலும்...

ட்விட்டர் தலைமை நிர்வாகி திடீர் விலகல்!

நியூயார்க் (29 நவ 2021): ட்விட்டர் தலைமை நிர்வாகி ஜேக் டோர்சி தனது பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) பதவி வகித்தவர் ஜேக் டோர்சி. 45 வயதான டோர்சி, அவரது டிஜிட்டல் பேமெண்ட்ஸ் நிறுவனமான ஸ்கொயர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றுகிறார். இந்நிலையில், ட்விட்டர் தலைமை பொறுப்பில் இருந்து ஜேக் டோர்சி பதவி விலக உள்ளதாகவும், டோர்சி மற்றும் டுவிட்டர் நிர்வாகக்குழு அடுத்த சிஇஓ…

மேலும்...