உலக கால்பந்து நாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியாத் வந்தடைந்தார்!

ரியாத் (03 ஜன 2023): – சவுதி கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணம் வந்துவிட்டது. உலக கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியாத் வந்தடைந்தார். கிறிஸ்டியானோ அண்ணாஸ்ர் கிளப்பில் சேர்ந்துள்ள நிலையில் அவர் ரியாத் வந்துள்ளார். அவருடன் அவரது மனைவியும் வந்துள்ளார். ரியாத்தில் உள்ள அன்னாஸ்ர் கிளப்புடன் இரண்டு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ரொனால்டோ, செவ்வாய்கிழமை ரசிகர்கள் முன்னிலையில் மஞ்சள் ஜெர்சியில் தோன்றுவார். வரும் வியாழன் அன்று ரொனால்டோவின் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என எதிர்…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் மஞ்சள் எச்சரிக்கை!

துபாய் (02 ஜன 2023): ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் இன்று பனிமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால் தேசிய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அபுதாபி காவல்துறை, வாகன ஓட்டிகளை எச்சரிக்கையுடன் செயல்படுமாறும், பல்வேறு சாலைகளில் மங்களாக காணப்படும் என்பதால் வேக வரம்புகளில் மாற்றங்களைக் கவனிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் மலைப்பகுதிகளில் 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளது. அபுதாபியில் அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 18 டிகிரி…

மேலும்...

புனித மக்கா குறித்து பரவும் போலி வீடியோ!

ஜித்தா (02 ஜன 2023): மக்காவின் புனித ஹராமில் பனிப்பொழிவுடன் மழை பெய்யும் போலி வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக சவூதி அரேபியாவில் மழை பெய்து வருகிறது. அதேவேளை இவ்வாறு பெய்து வரும் மழைக்கு வீடியோ எஃபெக்ட்ஸ் சேர்க்கப்பட்டு மக்காவையம் இணைத்து போலியாக பரப்பபட்டு வருகிறது, “பனி பொழிவது போல் வீடியோவில் உள்ளது அவ்வாறு எதுவும் இல்லை வீடியோ போலியானது” என்று தேசிய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்…

மேலும்...

சவூதி அரேபியா ரியாத்தில் ஆடல் பாடலுடன் நடந்த புத்தாண்டு கொண்டாட்டம்!

ரியாத் (02 ஜன 2023): சவூதி அரேபியா ரியாத் நகரில் ஆடல், பாடல் மற்றும் வான வேடிக்கைகளின் வண்ணமயமான காட்சிகளுடன் ரியாத் நகரம் புத்தாண்டை வரவேற்றது. ரியாத்தின் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்வுகளில் இளைஞர்கள் புத்தாண்டுக்கு பெரும் வரவேற்பு அளித்தனர். அரபு உலகின் முன்னணி பாடகர்களை ஒன்றிணைத்து, ரியாத் பவுல்வர்டில் நடைபெற்ற “ட்ரையோ நைட்” இசை நிகழ்ச்சியின் போது புத்தாண்டு கொண்டாடப் பட்டது.  இது சவூதி அரேபியாவின் மிக முக்கியமான புத்தாண்டு நிகழ்வாகவும் இருந்தது. ஜார்ஜ்…

மேலும்...

சவூதி அரேபியா ஜித்தாவில் பாதாள வழிகள் மூடல் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

ஜித்தா (02 ஜன 2023): சவூதி அரேபியா ஜித்தாவில் பெய்த பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பல்வேறு பாதாள சாலைகள் மூடப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது. பாலஸ்தீன சாலையில் இணையும் அமீர் மஜித் சுரங்கப்பாதை வடக்கிலும், அல்ஜாமியா சுரங்கப்பாதை இருபுறமும், கிங் அப்துல்லா சாலை மற்றும் மதீனா சாலையும், கிங் அப்துல்லா சாலை மற்றும் கிங் ஃபஹத் சாலையும் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த பாதாள சாலைகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் மாற்று வழிகளை பயன்படுத்த…

மேலும்...

சவூதியில் கனமழை எச்சரிக்கையை அடுத்து கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை!

ஜித்தா(01 ஜன 2023)- சவூதியில் மழை தீவிரமடையும் என்ற எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, நாளை (திங்கட்கிழமை) ஜித்தா, தாயிப் பகுதிகளில் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கா, ஜுமூம், அல்காமில் மற்றும் பஹ்ரா ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படும் என மக்கா கல்வித்துறை முன்னதாக அறிவித்திருந்தது. நாளை பிற்பகல் 3 மணி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழை…

மேலும்...

சவூதியில் வெளிநாட்டவர்களின் இக்காமா புதுப்பித்தல் மற்றும் ரீ என்ட்ரி விசா கட்டணம் சில மாறுபாடுகள்!

ரியாத் (01 ஜன 2022): சவூதி அரேபியா அரசாங்கத்தின் இகாமா மற்றும் ரீ என்ட்ரி கட்டணம் தொடர்பான முடிவுகளில் வெளிநாட்டவர்களுக்கு சில மாறுபாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டவர்களுக்கு ரீ-என்ட்ரி விசா நீட்டிப்பு மற்றும் இகாமா புதுப்பித்தல் ஆகிய கட்டணங்கள் இரட்டிப்பாகும் என்பது புதிய தகவல் இதனை சவூதி அரேபிய முக்கிய ஊடகங்களான சவூதி கெசட், அல்மதீனா உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி வெளிநாட்டவர் சவுதி அரேபியாவில் இருந்தால், மறு நுழைவு கட்டணம் இரண்டு மாதங்களுக்கு 200 ரியால். ஒவ்வொரு…

மேலும்...

ஜித்தா சிட்டி பார்க் ஃபெஸ்டிவல் பூங்காவில் தீ விபத்து!

ஜித்தா (30 டிச 2022): ஜித்தா பாலஸ்தீன சாலையில் உள்ள சிட்டி பார்க் ஃபெஸ்டிவல் சிட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த பூங்காவில் வெள்ளிக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டது. மின்சார பொம்மைகள், ஆயத்த ஆடைகள் மற்றும் பிற பொருட்களை விற்கும் ஸ்டால்கள் தீயில் கருகின. இந்த தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. மேலும் பூங்கா மற்றும் அருகில் உள்ள கிடங்குகளுக்கு தீ பரவும் முன் குடிமைத் தற்காப்பு படையினர் தீயை அணைத்தனர்.

மேலும்...

சவூதியின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ரியாத் (29 டிச 2022): சவுதி அரேபியாவின் பல்வேறு மாகாணங்களில் நாளை முதல் மழை பெய்யும் என தேசிய வானிலை மையம் கணித்துள்ளது. இடி மின்னலுடன் கூடிய கனமழையால் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நாளை முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும். கடலோரப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை, தூசி நிறைந்த காற்று மற்றும் உயரமான அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மக்கா,…

மேலும்...

குவைத்தில் புத்தாண்டில் பாரம்பரியத்துக்கு பொருந்தாத நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை!

குவைத் (29 டிச 2022): புத்தாண்டை முன்னிட்டு குவைத்தில் உள்துறை அமைச்சகம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்துக்குப் பொருந்தாத நிகழ்ச்சிகளை நடத்துபவர்களை பிடிக்க சோதனை நடத்தப்படும் என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் பிற முக்கிய மையங்களில் பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்படுவார்கள். தெருக்கள், சந்தைகள் போன்றவற்றில் மக்களைக் கண்காணிக்க சீருடை மற்றும் மஃப்டியில் 8,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இப்பகுதியில் உள்ள சிறப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு,…

மேலும்...