உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களின் கல்விக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு!

திருவனந்தபுரம் (14 மார்ச் 2022): கேரளாவின் உக்ரைன் மருத்துவ மாணவர்கள் தங்களின் படிப்பைத் தொடரும் வகையில் அவர்களுக்கு உதவும் பொருட்டு அவர்களின் கல்விக்காக பட்ஜெட்டில் 10 கோடியை அறிவித்தார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன். மேலும், அதற்கான நிதியையும் அவர் ஒதுக்கியிருக்கிறார். மார்ச்11 அன்று நடந்த கேரள அரசின் பட்ஜெட் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியானது. உக்ரைனிலுள்ள பல்வேறு மருத்துவக் கல்லுாரிகளில் கேரளாவின் 2,800 மாணவர்கள் பயின்றுவந்தனர். தற்போது போர் நடைபெற்றுவரும் உக்ரைன் நாட்டிலிருந்து தமிழக மாணவர்கள்…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் 8 சதவீத முஸ்லீம் வாக்குகளை பெற்ற பாஜக!

லக்னோ (13 மார்ச் 2022): நடந்து முடிந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது எட்டு சதவீத முஸ்லிம் வாக்குகளைப் பெறுவதில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. முஸ்லிம்கள் எதிராக வாக்களிக்கிறார்கள் என்ற பொதுவான கருத்து இருந்தபோதிலும் இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. CSDS-லோக்நிதி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் 20 சதவீத முஸ்லிம் வாக்குகளில் சமாஜ்வாடி கட்சி சுமார் 79 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது என்றும், குறைந்தது 8 சதவீத வாக்குகள் பாஜகவுக்கு கிடைத்துள்ளது எனவும், இது 2017ஆம் ஆண்டை விட ஒரு…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் கல்லூரிக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை!

அலிகார் (13 மார்ச் 2022): உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகாரில் உள்ள ஒரு முக்கிய கல்லூரியில் “பரிந்துரைக்கப்பட்ட சீருடை” அணியாமல் வளாகத்திற்குள் மாணவர்கள் நுழைய ‘தடை’ அறிவிக்கப் பட்டுள்ளது. ஹிஜாப் அணிந்திருந்த முஸ்லிம் பெண்களை கல்லூரிக்குள் நுழைய கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது. அலிகார் ஸ்ரீ வர்ஷ்னி கல்லூரியில் சனிக்கிழமையன்று வகுப்பிற்குச் செல்லும் போது மாணவிகள் ஹிஜாப் அணிய வேண்டாம் என்று கல்லூரி நிராகம் வலியுறுத்தியுள்ளது. இதனால் பல மாணவிகள் வகுப்பிற்குச் செல்லாமல் வீடு திரும்பினர். இதுகுறித்து B.Sc. இறுதியாண்டு…

மேலும்...
Sonia Gandhi

ராஜினாமா செய்கிறாரா சோனியா காந்தி? – இன்று பரபரப்பு விவாதம்!

புதுடெல்லி (13 மார்ச் 2022): ஐந்து மாநில தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் நடைபெறுகிறது. நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், தேர்தலில் பெற்ற தோல்விக்கான காரணங்கள் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி இருந்து வரும்நிலையில், அவரால் தீவிரமான தேர்தல் பணிகளை செய்ய…

மேலும்...
Sonia Gandhi

இறங்கி வருமா காங்கிரஸ் தலைமை? – கொந்தளிக்கும் தலைவர்கள்!

புதுடெல்லி (11 மார்ச் 2022): ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியை ஆட்டம் காண வைத்துள்ளது. உள்கட்சிக்குள்ளும் எதிர்க்குரல்கள் எழ தொடங்கியுள்ளன. நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில், நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியமைத்த நிலையில் பஞ்சாப்பில் மட்டும் ஆம் ஆத்மி ஆட்சியமைத்தது. காங்கிரஸ் கட்சி எந்த மாநிலத்திலும் ஆட்சியமைக்க முடியாமல் போனது. தற்போது 2 மாநிலத்தில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. இரண்டு மக்களவைத் தேர்தலில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது காங்கிரஸ்….

மேலும்...

தெலுங்கானா முதல்வருக்கு திடீர் உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி!

ஐதராபாத் (11 மார்ச் 2022): தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சோமாஜிகுடாவில் உள்ள யசோதா மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரும் கடந்த இரண்டு நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இடது கை வலி காரணமாக அவர் அவதிபட்டதாக தெரிகிறது. முதற்கட்ட பரிசோதனைக்குப் பிறகு மருத்துவர்களால் ஆஞ்சியோகிராம் மற்றும் சி.டி ஆகியவற்றிற்கு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். சோதனை முடிவில் முதலமைச்சரின் உடல்நிலை குறித்த இறுதி அறிக்கை ஊடகங்களுக்கு வெளியிடப்படும். அவருடன் அவரது மனைவி ஷோபா,…

மேலும்...

மக்களால் விரட்டியடிக்கப்பட்ட தொகுதியில் பாஜகவினர் வெற்றி பெற்றது எப்படி?

நொய்டா (11 மார்ச் 2022): மக்களால் பாஜகவினர் விரட்டியடிக்கப் பட்ட நிலையில் அதே தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உத்தரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் நொய்டா தொகுதியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் நிறுத்தப்பட்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தீவிர பிரச்சாரத்தில் பாஜகவினர் ஈடுப்பட்டு வந்தனர். மேலும் மூத்த அமைச்சர் மகன் என்பதால் இவரது…

மேலும்...

கடுமையாக உழைத்தோம் – அசாதுத்தீன் ஒவைசி!

புதுடெல்லி (11 மார்ச் 2022): உத்தரப்பிரதேசத் தேர்தலில் கடுமையாக உழைத்தும் மக்கள் மாற்றி தீர்ப்பளித்துவிட்டனர் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், உத்தரபிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூரில் பாஜக நினைத்துப் பார்க்காத வெற்றியை பெற்றது. காங்கிரஸ் வசம் இருந்த பஞ்சாப்பை ஆம் ஆத்மி கைப்பற்றியது. இதனையடுத்து தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும்…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் 36 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி!

லக்னோ (11 மார்ச் 2022): 2017 இல் நடந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் 24 முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 2022 தேர்தலில் 36 முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வெற்றி பெற்ற சில முக்கிய முஸ்லிம் எம்.எல்.ஏக்களில் அசம் கான், அவரது மகன் அப்துல்லா ஆசம் கான் ஆகியோர் அடங்குவர். 19% முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட மாநிலத்தில் மொத்தமுள்ள 403 சட்டமன்ற உறுப்பினர்களில் 8.93% சிறுபான்மை சமூகத்திலிருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் ஆவர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமாஜ்வாதி…

மேலும்...

உவைஸி தலைமையிலான கூட்டணியின் 100 வேட்பாளர்களும் படுதோல்வி!

லக்னோ (10 மார்ச் 2022): உத்திர பிரதேசத்தில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) உ.பி. தேர்தலில் 100 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்த நிலையில் அவர்களில் ஒருவர் கூட வெற்றிபெறவில்லை. ஏஐஎம்ஐஎம் மேலாளரும், ஹைதராபாத் மக்களவை எம்பியுமான அசாதுதீன் ஓவைசி, உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசிக்கள்) மற்றும் தலித்துகள் மத்தியில் ஆதரவு தளத்தைக் கொண்ட கட்சிகளை உள்ளடக்கிய பாகிதாரி பரிவர்தன் மோர்ச்சா என்ற புதிய முன்னணியைத் தொடங்கினார். பாகிதாரி…

மேலும்...