2022 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு!

புதுடெல்லி (31 மார்ச் 2022): 2022 ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவானது நாளை மறுநாள் தொடங்கி மே 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் இத்தேர்வு நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு 16 லட்சத்து 14ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என…

மேலும்...

குறுகிய காலத்தில் 6,000 கிமீ தூரம் ஓடி கின்னஸ் உலக சாதனை படைத்த சுஃபியா கான்!

புதுடெல்லி (30 மார்ச் 2022): 6,002 கிமீ தூரத்தை 110 நாட்கள், 23 மணி நேரம், 24 நிமிடங்களில் ‘தங்க நாற்கரத்தில்’ கடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார் டெல்லியைச் சேர்ந்த சுஃபியா கான். தங்க நாற்கரம் என்பது டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளின் தொடராகும். தடகள வீராங்கனையான சுஃபியா கான், டிசம்பர் 16, 2020 அன்று தேசியத் தலைநகரில் இருந்து தனது ஓட்டத்தைத் தொடங்கி, ஏப்ரல் 6, 2021க்குள் தங்க நாற்கர…

மேலும்...

முஸ்லிம்களிடம் இறைச்சி வாங்க வேண்டாம் – இந்துக்களுக்கு பஜ்ரங்தள் அழைப்பு!

பெங்களூரு (30 மார்ச் 2022): கர்நாடகாவில் முஸ்லிம் வியாபாரிகளிடம் இறைச்சி வாங்க வேண்டாம் என பஜ்ரங்தளம் இந்துக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. பெங்களூருவில் நடந்த நீலமங்கல உகாதி கண்காட்சியில் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் இந்து விற்பனையாளர்களைச் சந்தித்து முஸ்லிம் வியாபாரிகளிடம் இறைச்சி வாங்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். மேலும் கன்னடத்தில் அச்சிடப்பட்ட அறிவிப்பை பலருக்கும் பஜ்ரங்தள அமைப்பினர் விநியோகித்து வந்தனர். ஹிஜாப் தடையால் கர்நாடகாவில் இஸ்லாமிய வெறுப்பு தலைவிரித்தாடுகிறது. அங்கு முஸ்லிம்கள் கோவில் திருவிழாக்களில் வியாபாரம் செய்ய முடியாத…

மேலும்...

ஹிஜாப் அணிந்த மாணவிகளை தேர்வெழுத அனுமதித்த ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்!

[1:47 PM, 3/30/2022] Sulthan Kuwait: பெங்களூரு (30 மார்ச் 2022): கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த மாணவிகளை தேர்வெழுத அனுமதித்த 7 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு செல்ல கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் ஹிஜாப் இஸ்லாமிய நடைமுறைகளில் அவசியமானதல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பிற்கு முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு நடைபெற்று வருகிறது. ஹிஜாப்…

மேலும்...

ஹிஜாப் தடை காரணமாக தேர்வை புறக்கணித்த 20 ஆயிரம் மாணவிகள்!

பெங்களூரு (29 மார்ச் 2022): கர்நாடகத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சிதேர்வு எழுதாத விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகத்தில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 73 ஆயிரத்து 846 பேர் இந்த தேர்வை எழுதினர். இதில் 4 லட்சத்து 52 ஆயிரத்து 732 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 21 ஆயிரத்து 110 பேர் மாணவிகள். 4 பேர் 3-ம் பாலினத்தவர்கள். 3 ஆயிரத்து 444 தேர்வு மையங்களில் இந்த…

மேலும்...

ஹிஜாபை கழற்ற மறுத்த தேர்வு கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்!

பெங்களூரு (28 மார்ச் 2022): கர்நாடகாவில் ஹிஜாபை கழற்ற மறுத்த தேர்வு கண்காணிப்பாளர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவில் ஹிஜாப் தடைக்கு மத்தியில் எஸ்எஸ்எல்சி (10-ஆம் வகுப்பு) தேர்வு இன்று தொடங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான மாணவர்கள் சீருடையில் பரீட்சைகளை எழுதினர். சிலர் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்ததால் அவர்கள் பள்ளியை விட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்நிலையில் கே.எஸ்.டி.வி மேல்நிலைப் பள்ளியில் தேர்வு நடத்தும் போது ஹிஜாபை கழற்ற மறுத்த தேர்வு கண்காணிப்பாளரை…

மேலும்...

பொது இடங்களில் தொழுகை நடத்துவதற்கு இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு!

குருகிராம் (28 மார்ச் 2022): அரியானா மாநிலம் குருகிராமில் பொது இடங்களில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து சன்யுக்த் ஹிந்து சங்கர்ஷ் சமிதி என்ற இந்துத்துவ அமைப்பு குருகிராமில் உள்ள மில்லினியம் சிட்டி முழுவதும் பொது இடங்களில் தொழுகை நடத்துவதை உடனடியாகத் தடை செய்யாவிட்டால், மாநிலம் முழுவதும் மாபெரும் போராட்டத்தை நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. அதன் தலைவர் மகாவீர் பரத்வாஜ் தலைமையிலான 5 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு,…

மேலும்...

ஹிஜாப் தடை உத்தரவை எதிர்த்து முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

புதுடெல்லி (28 மார்ச் 022): பள்ளி கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை ஆதரித்து உத்தரவிட்ட கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. வழக்கறிஞர் எம்.ஆர்.ஷம்ஷாத் மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் இரண்டு முஸ்லிம் பெண் உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இஸ்லாமிய நூல்கள் குறிப்பாக இஸ்லாமிய சட்டத்தின்…

மேலும்...

முஸ்லிம் நாடுகள் திருப்பி அனுப்பினால் என்.ஆர்.ஐக்களுக்கு வேலை வழங்க முடியுமா? – பாஜக தலைவர் பரபரப்பு கேள்வி!

பெங்களூரு (28 மார்ச் 2022): முஸ்லிம் நாடுகள் திருப்பி அனுப்பத் தொடங்கினால், என்ஆர்ஐகளுக்கு வேலை வழங்க முடியுமா என்று பாஜக மூத்த தலைவரும், கர்நாடக சட்ட மேலவை உறுப்பினருமான (எம்எல்சி) எச்.விஸ்வநாத் கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் சில கோயில் வளாகங்களில் முஸ்லிம் வர்த்தகர்கள் கடைகள் அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு விஸ்வநாத் கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகா கோவில் திருவிழாக்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதிக்கும் நடவடிக்கை, மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கு பரவி பெரும்…

மேலும்...

பாடபுத்தகத்தில் திப்பு சுல்தான் குறித்த அத்தியாயத்தை நீக்க கர்நாடக அரசு முடிவு!

பெங்களூரு (27 மார்ச் 2022): கர்நாடக அரசு பள்ளி பாடப்புத்தகங்களைத் திருத்தவும், திப்பு சுல்தான் உட்பட சில அத்தியாயங்களை நீக்கவும் திட்டமிட்டுள்ளது. மறுஆய்வுக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் இதற்கு பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. கல்வித்துறை அறிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டால் வரும் கல்வியாண்டில் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களில் மாற்றங்கள் அமல்படுத்தப்படும். திப்பு சுல்தான் பற்றிய அத்தியாயங்களை முற்றிலுமாக நீக்க அந்த குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கிடையில், பள்ளி பாடநூல் மறுஆய்வுக் குழு சமீபத்தில் சமர்ப்பித்த…

மேலும்...