மற்ற குற்றவாளிகளுக்கும் இதே தண்டனை கொடுங்கள் – கொதிக்கும் நெட்டிசன்கள்!

ஐதராபாத் (06 டிச 2019): இன்றைய ஹாட் டாப்பிக் ஐதராபாத் என்கவுண்டர்தான். தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை எற்படுத்திய நிலையில், எதிர்பாராத திருப்பமாக இந்த சம்பவத்திற்கு காரணமாக குற்றவாளிகள் 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப் பட்டனர். இந்த என்கவுண்டர் சம்பவம் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஒருதரப்பார் இதனை ஆதரித்தும் சிலர் இதனை எதிர்த்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல காஷ்மீர் சிறுமி வன்புணர்ந்து…

மேலும்...

ஐதராபாத் என்கவுண்டர் – தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப் பதிவு!

ஐதராபாத் (06 டிச 2019): பெண் மருத்துவர் வன்புணர்வு கொலை வழக்கில் கைதான நான்கு பேரை என்கவுண்டர் செய்த நிலையில் இச்சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. 26 வயது பொடுலா பிரியங்கா ரெட்டி கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தார். அவர் வன்புணர்வு செய்யப் பட்டு படுகொலை செய்யப்பட்டு எரிந்த நிலையில் உடல் கண்டெடுக்கப் பட்டது. இந்த கொடூர கொலையில் தொடர்புடைய லாரி ஓட்டுநர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்….

மேலும்...

ஐதராபாத் என்கவுண்டர் சம்பவத்திற்கு அசாதுத்தீன் உவைசி கடும் கண்டனம்!

ஐதராபாத் (06 டிச 2019): ஐதராபாத் கூட்டு வன்புணர்வு படுகொலை குற்றவாளிகள் என்கவுண்டரில் கொல்லப்பட்டதற்கு அசாதுத்தீன் உவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 26 வயது பொடுலா பிரியங்கா ரெட்டி கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தார். அவர் வன்புணர்வு செய்யப் பட்டு படுகொலை செய்யப்பட்டு எரிந்த நிலையில் உடல் கண்டெடுக்கப் பட்டது. இந்த கொடூர கொலையில் தொடர்புடைய லாரி ஓட்டுநர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என நாடு முழுவதும்…

மேலும்...

பெண் மருத்துவர் வன்புணர்வு படுகொலை குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை!

ஐதாராபாத் (06 டிச 2019): ஐதராபாத் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டியை வன்புணர்ந்து எரித்துப் படுகொலை செய்த நான்கு பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப் பட்டனர். தெலுங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 26 வயது பெண் மருத்துவரை, லாரி ஓட்டுநர் உள்ளிட்ட நால்வர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றனர். இந்த கொடூர கொலையில் லாரி ஓட்டுநர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என நாடு…

மேலும்...

பெண் மருத்துவர் வன்புணர்ந்து கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்னொரு அதிர்ச்சி!

ஐதராபாத் (30 நவ 2019): தெலுங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவர் எரித்துப் படுகொலை செய்யப் பட்ட நிலையில் இன்னொரு பெண் எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் எரிந்த நிலையில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி (27) உடல் கண்டெடுக்கப்பட்டார். இவர் வன்புணர்ந்து படுகொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கோரச் சம்பவத்தின் தாக்கம் மறைவதற்குள் அடுத்த…

மேலும்...

அஜீத் பவார் திடீர் பல்டி!

மும்பை (27 நவ 2019): நான் மீண்டும் தேசியவாத காங்கிரஸில் இருக்கிறேன் என்று அஜீத் பவார் தெரிவித்துள்ளார். பாஜகவுடன் இணைந்து திடீர் துணை முதல்வரான அஜீத் பவார் நேற்று தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக கட்சி சட்டமன்ற தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உத்தரவிட்டிருந்தார். மேலும் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான எம்.எல்.ஏக்கள் இல்லாததால் முதல்வர் பதவியை பட்னாவிசும் ராஜினாமா செய்தார். இந்நிலையில் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர…

மேலும்...

அதிர்ச்சி: சபரிமலை சென்ற பெண் விரிவுரையாளருக்கு நடந்த கொடூரம் – வீடியோ

திருவனந்தபுரம் (26 நவ 2019): சபரிமலை சென்ற பெண் விரிவுரையாளர் பிந்து ஆம்னி மீது பாஜகவினர் மிளகாய் ஸ்பிரே அடித்து கொடுமைப் படுத்தியுள்ளனர். சபரிமலைக்கு பெண்கள் செல்லும் விவகாரத்தில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இதனை எதிர்த்து இந்துத்வாவினர் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு. ஆனால் இதனை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பை ரத்து செய்யவில்லை. இதனால் பெண்கள்…

மேலும்...

மகாராஷ்டிர அரசியலில் யாரும் எதிர் பாராத அதிரடி திருப்பம் – முடிவுக்கு வந்த இரண்டு நாள் ஆட்சி

மும்பை (26 நவ 2019): மகாராஷ்டிர அரசியலில் மேலும் ஒரு திடீர் திருப்பமாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக அங்கு துணை முதல்வர் அஜித் பவார் ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து முதல்வர் பட்னாவிசும் ராஜினாமா செய்துள்ளார். உச்ச நீதிமன்றம் நாளை மாலைக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி பாஜக அரசுக்கு உத்தரவிட்ட நிலையில் இருவரும் ராஜினாமா செய்துள்ளனர்.. இதற்கிடையே அஜீத் பவார் தற்போது எங்களுடன் இருக்கிறார் என்று…

மேலும்...

அஜீத் பவார் நீக்கம் – மகாராஷ்டிராவில் அடுத்தடுத்த திருப்பங்கள்!

மும்பை (23 நவ 2019): மகாராஷ்டிராவின் சட்டமன்ற தேசியவாத காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து அஜித் பவாரை நீக்கம் செய்து கட்சியின் தலைவர் சரத் பவார் நடவடிக்கை எடுத்துள்ளார். மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக இன்று காலையில் பாஜக – தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் திடீர் கூட்டணி அமைத்து ஆட்சியை ஏற்படுத்தின. முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவீசும், துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாரும் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தெரிவித்த நிலையில்,…

மேலும்...

பாபர் மசூதி தீர்ப்பு தொடர்பான பேச்சு – அசாதுத்தீன் உவைசிக்கு எதிராக வழக்கு!

போபால் (12 நவ 2019): பாபர் மசூதி தீர்ப்பு தொடர்பாக பேசிய அசாதுத்தீன் உவைசிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அயோத்தி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் பாபர் மசூதி இருந்த இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்றும், மாறாக மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. தீர்ப்பை கடுமையாக விமர்சித்த (AIMIM) தலைவர் அசாதுத்தீன் உவைசி, இலவசமாக வழங்கும் ஐந்து ஏக்கர் நிலம் தேவையில்லை என பேசியிருந்தார். இந்நிலையில் அசாதுத்தீன் உவைசிக்கு…

மேலும்...