ஜே.என்.யூ மாணவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த எதிர் பாராத ஆதரவு – வீடியோ!

புதுடெல்லி (08 ஜன 2020): ஜே.என்.யூ மாணவர்களின் போராட்டத்திற்கு நடிகை தீபிகா படுகோனே ஆதரவளித்துள்ளார். ஜேஎன்யுவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவர்கள் மீது நடத்தப்பட்ட முகமூடி அணிந்திருந்த மர்ம கும்பலின் கொடூரத் தாக்குதலைக் கண்டித்து ஜேஎன்யு முன்னாள் மாணவர்கள் பொதுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்தக் கூட்டதத்தில் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜேஎன்யு முன்னாள் மாணவர்கள் சீதாராம் யெச்சூரி, கண்ணையா குமார், டி. ராஜா மற்றும் யோகேந்திர யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுதவிர பாலிவுட் நடிகை தீபிகா…

மேலும்...

குஜராத்தில் ஏபிவிபி குண்டர்களின் அட்டூழியம் – மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்!

அஹமதாபாத் (07 ஜன 2020): அஹமதாபாத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பினர் கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்‍கழக மாணவர்கள் மீதான தாக்‍குதலுக்‍கு எதிர்ப்பு தெரிவித்து, குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஏபிவிபி அலுவலகம் முன்பு SUCI எனப்படும் தேசிய மாணவர் சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. அப்போது . ABVP அமைப்பினர் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது நடத்திய பயங்கர தாக்‍குதலில் மாணவர்கள் சிலர் காயமடைந்தனர்….

மேலும்...

நிர்பயா வன்புணர்வு கொலை குற்றவாளிகளுக்கு ஜன 22 ல் தூக்கு!

புதுடெல்லி (07 ஜன 2020): நிர்பயா வன்புணர்வு கொலைக் குற்றவாளிகள் நான்கு பேரையும் வரும் ஜனவரி 22 ஆம் தேதி தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு, டிசம்பர் 16-ந் தேதி இரவில் 23 வயதான மருத்துவ மாணவி நிர்பயா பேருந்தில் சென்றார். அப்போது, வெறி பிடித்த ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்து சிதைக்கப்பட்டு, நடு ரோட்டில் வீசப்பட்டார். அவருடன் சென்ற அவரது நண்பரும் கடுமையாக தாக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட…

மேலும்...

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக் கழக தாக்குதல் விவகாரத்தில் திடீர் திருப்பம்!

புதுடெல்லி (07 ஜன 2020): டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தின் திடீர் திருப்பமாக இந்த தாக்குதலுக்கு இந்து ரக்ஷா தள் பொறுப்பேற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (05-01-2020) மாலை ஜே.என்.யூ பல்கலைக்கழத்தின் மாணவ, மாணவிகள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த நூற்றுக்கு மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல், அங்கிருந்த ஜேஎன்யு மாணவர் சங்கத்தலைவர் அய்ஷி கோஷ், கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவ…

மேலும்...

என்னடா கொடுமை இது – தாக்கியவர்களை விட்டுவிட்டு அடி வாங்கியவர்கள் மீது வழக்கு!

புதுடெல்லி (07 ஜன 2020): டெல்லி ஜே.என்.யூ மாணவசங்க தலைவி உள்பட 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (05-01-2020) மாலை ஜே.என்.யூ பல்கலைக்கழத்தின் மாணவ, மாணவிகள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த நூற்றுக்கு மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல், அங்கிருந்த ஜேஎன்யு மாணவர் சங்கத்தலைவர் அய்ஷி கோஷ், கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவ பிரிவான ABVB துணையுடன் இந்த பயங்கரம் நடத்தப்பட்டு…

மேலும்...

டெல்லியைப் போல் மும்பையில் நடந்தால் நடப்பதே வேறு – உத்தவ் தாக்கரே!

மும்பை (07 ஜன 2020): டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் மீதான தாக்குதல் மாணவர்கள் மீதான பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் பேரணியின்போது முகமூடி அணிந்த மா்ம நபா்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து, மாணவா்களைத் தாக்கியது தொடா்பாக முதல்வா் உத்தவ் தாக்கரேவிடம் மும்பையில் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் பதிலளித்ததாவது: ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதல், மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட…

மேலும்...

மேற்கு வங்கத்தில் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி!

கொல்கத்தா (07 ஜன 2020): டெல்லி ஜேஎன்யூ மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கும் விதமாக கொல்கத்தாவில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சபர்மதி விடுதிக்குள் ஆயுதங்களுடன் முகமூடி அணிந்த சிலர் உள்ளே நுழைந்து விடுதியை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அயிஷ் கோஷ் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். அவர் தலை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் காயம் அடைந்த 20 மாணவர்கள் எய்ம்ஸ்…

மேலும்...

டெல்லி ஜே.என். யூ பல்கலைக் கழக தாக்குதலின் பின்னணியில் யார்? – அய்ஷி கோஷ் பரபரப்பு தகவல்!

புதுடெல்லி (07 ஜன 2020): “டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (JNU) மாணவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏபிவிபி அமைப்பினரே உள்ளனர்!” என்று ஜே.என்.யூ மாணவர் சங்க தலைவர் அய்ஷி கோஷ் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (05-01-2020) மாலை ஜே.என்.யூ பல்கலைக்கழத்தின் மாணவ, மாணவிகள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த நூற்றுக்கு மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல், அங்கிருந்த கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினார்கள். ஆர்எஸ்எஸ்…

மேலும்...

வட மாநிலங்களுக்கு 5908 கோடி, தமிழகம் கேரளாவுக்கு நாமம்!

புதுடெல்லி (06 ஜன 2020): வெள்ள நிவாரணமாக வட மாநிலங்களுக்கு 5908 கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்துள்ள மத்திய அரசு தென் மாநிலங்களுக்கு பெப்பே காட்டிவிட்டது. கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு 5,908.56 கோடி ரூபாயை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதில் உத்திர பிரதேசம், கர்நாடகா, அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்கள் அடங்கும். ஆனால் பெரிதும் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட கேரளாவுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கீடு செய்யபப்டவில்லை. அதேபோல கஜா புயலால் மிகப்பெரிய…

மேலும்...

ஒரே மாதத்தில் 219 குழந்தைகள் மரணம் – பதிலளிக்காமல் மழுப்பும் முதல்வர்!

அஹமதாபாத் (06 ஜன 2020): குஜராத்தில் ஒரே மாதத்தில் 219 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் அரசு மருத்துவமனையில் 134 பச்சிளம் குழந்தைகளும், அகமதாபாத் அரசு மருத்துவமனையில் 85 பச்சிளம் குழந்தைகளும் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜ்கோட் மருத்துவ மனையில் 2019 ஆம் ஆண்டில் மட்டும் 1,235 குழந்தைகள் பலியானதாகக் கூறப்படுகிறது. இது குறித்து முதலமைச்சர் விஜய் ரூபானியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். ஆனால் அவர் பதிலளிக்காமல் நழுவிச் சென்றார். ராஜஸ்தான் மாநிலம்…

மேலும்...