ராஜஸ்தானில் இரு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளிகள் கைது!

புதுடெல்லி (09 ஜூன் 2020): ராஜஸ்தானில் இரு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளிகளை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 29 வயதான விகாஸ் குமார் மற்றும் 22 வயதான சிமன் லால் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைதான இருவரில் விகாஸ் குமார் ராஜஸ்தானில் உள்ள ராணுவ வெடிமருந்து கிடங்கில் முழுநேர பணியாளராகவும், சிமன் லால் பிகானீரில் உள்ள ராணுவ துப்பாக்கி சுடும் மையத்தில் ஒப்பந்த பணியாளராகவும் பணிபுரிவதாக கூறப்பட்டுள்ளது மேலும் பாகிஸ்தானின் முல்தானில் இருந்து இயங்கும்…

மேலும்...

பாகிஸ்தான் விமான விபத்து பரபரப்பு காட்சிகள் வீடியோ (UPDATED)

ஜின்னா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கராச்சியின் மாடல் காலனியில் நேற்று மாலை பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) பயணிகள் விமானம் 99 பேருடன் தரையில் விழுந்து நொறுங்கியது. விமான நிலையத்திற்கு 1 கி.மீ தூரம் கூட இல்லாத நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர், அதேவேளை 82 பேர் உயிரிழந்தது உறுதி படுத்தப்பட்டுள்ளது.

மேலும்...

பாகிஸ்தான் விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர் – வீடியோ!

கராச்சி (22 மே 2020): பாகிஸ்தானில், பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்‍கு உள்ளானதில் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். பாகிஸ்தானின் லாகூரிலிருந்து கராச்சி சென்ற ஏர்பஸ் ஏ-320 ரக பயணிகள் விமானம், கராச்சி விமான நிலையம் அருகிலுள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் விழுந்து நொறுங்கியது. விமானம் தரையிறங்கியபோது இந்த கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் 98 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் 57 பேர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இருவர் உயிர்…

மேலும்...

BREAKING: பாகிஸ்தான் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து!

கராச்சி (22 மே 2020): பாகிஸ்தானில், பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்‍கு உள்ளானதில், அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்‍கலாம் என அஞ்சப் படுகிறது. பாகிஸ்தானின் லாகூரிலிருந்து கராச்சி சென்ற ஏர்பஸ் ஏ-320 ரக பயணிகள் விமானம், கராச்சி விமான நிலையம் அருகிலுள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் விழுந்து நொறுங்கியது. விமானம் தரையிறங்கியபோது இந்த கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் 98 பேர் பயணம் செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்‍கலாம் என அஞ்சப்படுகிறது. பயணிகள்…

மேலும்...

இந்து கோவிலில் ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய முஸ்லிம் கிரிக்கெட் வீரர்!

இஸ்லாமாபாத் (15 மே 2020): பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி லாக்டவுன் காலத்தில் இந்து கோவில்களில் ஏழைகளுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை விநியோகித்தார். தனது நிவாரணப் பணிகளின் புகைப்படங்களைப் சமூக வலைதலங்களில் பகிர்ந்து கொண்டுள்ள அப்ரிடி, , “நாங்கள் கொரோனாவை ஒழிப்பதில் ஒன்றாக இருக்கிறோம், அதேபோலை இதில் ஒன்றாகவே வெற்றி பெறுவோம். ஒற்றுமை எங்கள் பலம். அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்காக ஸ்ரீ லட்சுமி நரேன் கோவிலுக்குச் சென்று உதவினேன்” என்று தெரிவித்துள்ளார். அப்ரிடியின்…

மேலும்...

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக விமானப் படைக்கு இந்து விமானி தேர்வு!

இஸ்லாமாபாத் (04 மே 2020): பாகிஸ்தான் வரலாற்றில் விமானப்படைக்கு முதல் இந்து விமானி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் சிந்து மாகானம் தர்பார்க்கார் பகுதியை சேர்ந்த ராகுல் தேவ் என்ற இளைஞர் பாகிஸ்தானின் முதல் இந்து விமானியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பாகிஸ்தான் அனைத்து இந்து பஞ்சாயத்து செயலாளர் ரவி தவானி தெரிவிக்கையில் தேவின் நியமனம் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பலர் சிவில் சேவையிலும் இராணுவத்திலும் பணியாற்றி வருகின்றனர். பல மருத்துவர்களும் இந்து சமூகத்தைச்…

மேலும்...

இந்திய கிரிக்கெட் வீரர்களை சீண்டிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாமுல் ஹக்!

இஸ்லாமாபாத் (23 ஏப் 2020): இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவுக்காக விளையாடவில்லை, அவர்களின் சாதனைக்காக விளையாடினார்கள் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களை சீண்டியுள்ளார். பாகிஸ்தானின் அதிரடி வீரராக இருந்தவர் இன்ஸமாமுல் ஹக், தற்போது பாகிஸ்தான் தேர்வுக் குழு தலைவராக உள்ளார். இவரும் முன்னாள் விரர் ரமீஸ் ராஜாவும் பாகிஸ்தானின் யூடுப் சேனல் ஒன்றின் டாக்‌ஷோவில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய இன்சமாமுல் ஹக், “தற்போதைய பாகிஸ்தான் அணி வீரர்கள் இயல்பாகவே திறன் பெற்றிருந்தாலும் சில சமயம்…

மேலும்...

கொரோனா தொற்று காரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்!

பெஷாவர் (15 ஏப் 2020): கொரோனா தொற்று காரணமாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாஃபர் சர்ஃபராஸ் (50) உயிரிழந்தார். கொரோனா தொற்று காரணமாக ஜாஃபர் சர்ஃபராஸ் கடந்த 3 நாட்களாக பெஷாவரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டரில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அவர் உயிரிழந்ததை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். பாகிஸ்தானில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் கிரிகெட் வீரர் சர்ஃபராஸ். இவர் 1988 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில்…

மேலும்...

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா பாதிப்பு இல்லை – பாகிஸ்தான் அரசு விளக்கம்!

இஸ்லாமாபாத் (28 மார்ச் 2020): பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. உலகை புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைக் காட்டிலும் அதுகுறித்த வதந்திகள் மிக வேகமாக பரவி வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒரு வதந்தி பரவியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், “இம்ரான் கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல்…

மேலும்...

பாகிஸ்தான் ரெயில் படத்தை பயன்படுத்தி அசிங்கப்பட்ட குஜராத்!

அஹமதாபாத் (03 மார்ச் 2020): ரெயில் பயணிகள் பாதுகாப்பு குறித்த செயலி (APP) ஐ அறிமுகப்படுத்திய குஜராத் ரெயில்வே காவல்துறை அந்த ஆப்பில் பாகிஸ்தான் ரெயில் புகைப்படத்தைப் போட்டு அசிங்கப்பட்டுள்ளது. ”Surakshit Safar” என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆந்த ஆப்பில் பாகிஸ்தான் ரெயில் புகைப்படத்தைப் போட்டதோடு அதனை பலருக்கு பகிரவும் செய்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்சி அடைந்து, சமூக வலைதளங்களில் விமர்சிக்கத் தொடங்கினர். இதனை அடுத்து குஜராத் ரெயில்வே போலீஸ் அந்த படத்தை நீக்கியுள்ளது. இந்த…

மேலும்...