நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன் விவசாயிகள் பிரச்சனையை தீர்க்க ஒன்றிய அரசு முடிவு!

புதுடெல்லி (21 நவ 2021): விவசாயிகள் போராட்டத்தை, பார்லிமென்ட் கூட்டத்தொடருக்கு முன் தீர்த்து வைக்க, ஒன்றிய அரசு முயற்சியில் உள்ளது. அடுத்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில், விவசாய சட்டத்தை ரத்து செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம். நாளைக்குள் மசோதா தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், சர்ச்சைக்குரிய விவசாயச் சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு, கூட்டு கிசான் மோர்ச்சாவின் முக்கியமான கூட்டம் இன்று நடைபெறுகிறது. பிரதமரின் அறிவிப்பு மற்றும் போராட்ட வழிமுறைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும். நாடாளுமன்றத்தில் சட்டத்தை…

மேலும்...

பாஜக தரப்பில் குறையுள்ளது – யோகி ஆதித்யநாத் பகீர் கருத்து!

லக்னோ (19 நவ 2021): பாஜக தரப்பில் சில குறைபாடுகள் காரணமாக வேளாண் சட்டத்தின் உண்மையான நோக்கங்களை விளக்கத் தவறிவிட்டோம். என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யும் பிரதமரின் முடிவை அடுத்து. இந்த முடிவை வரவேற்றுள்ளஉ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் இதுகுறித்து விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், வேளாண் சட்டத்தின் பலன்களை விவசாயிகள் நம்பவில்லை. “விவசாயிகளுடன் அனைத்து மட்டங்களிலும் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்துள்ளோம். ஆனால் எங்கள் தரப்பில் சில குறைபாடுகள்…

மேலும்...

மோடிக்கு எதிராக வெள்ளை மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம்!

வாஷிங்டன் (25 செப் 2021):  பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வெள்ளை மாளிகைக்கு முன்னால் உள்ள பூங்காவான லாஃபாயெட் சதுக்கத்தில் டஜன் கணக்கான இந்திய அமெரிக்கர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு பல்வேறு தலைவர்களை சந்தித்து மோடி பேச்சுவர்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், மோடிக்கு எதிராக அங்கு போராட்டமும் நடைபெற்றுள்ளது. “இந்தியாவை பாசிசத்திலிருந்து காப்பாற்றுங்கள்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, மனித உரிமை மீறல்கள்,…

மேலும்...

அபுதாபி பட்டத்து இளவரசருடன் பிரதமர் மோடி உரையாடல்!

புதுடெல்லி (03 செப் 2021): அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் உரையாடிக்கொண்டனர். வெள்ளிக்கிழமை அன்று நடந்த இந்த உரையாடலில், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான உறவுகளைப் பற்றி தலைவர்கள் பேசினர் மற்றும் உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றியும் விவாதித்தனர். மேலும் இரு நாடுகளுக்கிடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது….

மேலும்...

மோடி இந்த முறையாவது தொகையை மாற்றி கூறியிருக்கலாம் – எதிர் கட்சிகள் விமர்சனம்!

புதுடெல்லி (16 ஆக 2021): பிரதமர் நரேந்திர மோடி ஏழு ஆண்டுகளாக ஒரே உரையை நிகழ்த்தி வருவதாகவும், திட்டங்களை அறிவிப்பதைத் தவிர அதை செயல்படுத்தவில்லை என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கட்கே தெரிவிக்கையில், “மோடி திட்டங்களை அறிவிக்கிறாரே தவிர பாதிக்கப்பட்ட விவசாயிகள் உட்பட யாருக்கும் எதுவும் செய்யவிலை.மோடி நிறைய விஷயங்களைச் சொல்கிறார். ஆனால் எதுவும் உறுதியாக நிற்கவில்லை” என்று கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவிக்கையில், ” பிரதமரால் அறிவிக்கப்பட்ட…

மேலும்...

பிரதமர் மோடி தலைமையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்!

புதுடெல்லி (09 ஆக 2021): ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்திற்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். வீடியோ கான்ஃபரன்ஸ் வழியாக ஐக்கிய நாடுகள் சபை கவுன்சில் நடைபெற்றது. இதில் தலைமை தாங்கி பேசிய மோடி, “கடல்சார் பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் பயங்கரவாத சக்திகளை எதிர்த்துப் போராட, கூட்டு ஒத்துழைப்பு தேவை!” என்று கருத்து தெரிவித்தார். மேலும் “கடல் வர்த்தகத்தில் உள்ள தடைகள் நீக்கப்பட வேண்டும், கடற்கொள்ளையர்கள் ஆதிக்கம்…

மேலும்...
Rahul and Modi

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தேச துரோக செயல் – ராகுல் காந்தி சாடல்!

புதுடெல்லி (28 ஜூலை 2021): பெகாசஸ் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் தேச துரோக செயல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் எதிர்க்கட்சிகளின் பெகாசஸ் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பான அவசர கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி ‘பணவீக்கம், பெகாசஸ் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் உள்ளிட்ட விவகாரங்களில் நாங்கள் சமரசம் செய்துகொள்ள விரும்பவில்லை. நாங்கள் சபையில் விவாதம் நடைபெறுவதை விரும்புகிறோம். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி குரல் நசுக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடக்கிறது….

மேலும்...

யோகா கண்டுபிடிக்கப்பட்டபோது, இந்தியாவே இல்லை – நேபாள பிரதமர் பரபரப்பு கருத்து!

காத்மண்டு (22 ஜூன் 2021): கா கண்டுபிடிக்கப்பட்டபோது, இந்தியா உருவாக்கப்படவில்லை. என்றும் நேபாளில் தான் யோகா கண்டுபிடிக்கப்பட்டது என்று நேபாள நாட்டின் பிரதமர் கே.பி. சர்மா ஓலி. பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். நேற்று (21.06.2021) சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சிறப்புரையாற்றிய கே.பி. சர்மா ஓலி, யோகாவையும் தங்கள் நாட்டுக்குச் சொந்தமானது என கூறியுள்ளார். இதுதொடர்பாக கூறிய அவர், , “இந்தியா ஒரு தேசமாக உருவாவதற்கு முன்பே, நேபாளத்தில் யோகா பயிற்சி செய்யப்பட்டது. யோகா கண்டுபிடிக்கப்பட்டபோது,…

மேலும்...

சிஏஏ ரத்து – முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் முன்வைத்த கோரிக்கைகள்!

புதுடெல்லி (17 ஜூன் 2021): தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பிரதமர் மோடியை, அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது சிஏஏ ரத்து உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்தார். பிரதமருடனான சந்திப்புக்குப் பின்னர் பிரதமரிடம் முன் வைத்த கோரிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் தெஇவித்ததாவது: * கூடுதலான தடுப்பூசியைத் தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டும். * செங்கல்பட்டு மற்றும் ஊட்டியில் உள்ள தடுப்பூசி தொழிற்சாலைகளை உடனடியாகச் செயல்பட வைக்கவேண்டும். * தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதி…

மேலும்...

பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்!

புதுடெல்லி (17 ஜூன் 2021): தமிழ் நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். மாலை 5 மணியளவில் பிரதமர் மோடி – தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அவருடன், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், டில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள்துறை செயலாளர், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளும் உடனிருந்தனர். அப்போது தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வலியுறுத்தினார். நீட் தேர்விலிருந்து விலக்கு,…

மேலும்...