அறிகுறிகள் இல்லாத கொரோனா பாஸிட்டிவ் – மருத்துவத் துறைக்கு தொடரும் சவால்கள்!
புதுடெல்லி (19 ஏப் 2020): அறிகுறிகள் எதுவும் இல்லாமல் தற்போது அதிகமாக கொரோனா பாஸிட்டிவ் என தகவல்கள் வருவது மருத்துவத் துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. கொரோனா பாதிப்பில் நாடு தழுவிய அளவில் தலைநகர் டெல்லி 2-வது இடத்தில் உள்ளது. அங்கு ஆயிரத்து 893 பேருக்கு நோய்த்தொற்று உள்ளது. 43 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் கெஜ்ரிவால், தற்போதைக்கு ஊரடங்கை தளர்த்தும் எண்ணம் இல்லை என தெரிவித்தார். நேற்று கொரோனா தொற்று உறுதி…