பாஜக அரசு தேசவிரோத செயலில் ஈடுபடுகிறது – பாஜக மூத்த தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு!

புதுடெல்லி (27 ஜன 2020): ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்வது முழுக்க முழுக்க தேசவிரோதமானது என்று பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 100 % பங்குகளையும், விற்பனை செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பங்குகளை வாங்குவதற்கான விருப்பத்தை தெரிவிக்க, தனியார் நிறுவனங்களுக்கு வரும் மார்ச் மாதம் 17ஆம் தேதியைக் கெடுவாக அறிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு கடனில் சிக்கித்…

மேலும்...

பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை -திருச்சியில் பரபரப்பு!

திருச்சி (27 ஜன 2020): திருச்சியில் பாஜக நிர்வாகி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டம் பாலக்கரை பகுதி பாஜக மண்டலச் செயலாளராக இருந்தவர் விஜய ரகு. இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் பணியை செய்து வந்தார். இந்நிலையில் இன்று (27-ம் தேதி) காந்தி மார்க்கெட் வாசலில் ஒரு கும்பல் விஜய ரகுவை வெட்டிக் கொலை செய்தது. அக்கம்பக்கத்தினர் சுதாரிப்பதற்குள் அந்தக் கும்பல் தப்பிவிட்டது. அவரது…

மேலும்...

13 வருடங்கள் என்ன செய்தீர்கள்? – ஸ்டாலினுக்கு எடப்பாடிகேள்வி!

சென்னை (26 ஜன 2020): 13 வருடங்கள் மத்தியில் இருந்து தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள்? என்று ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். மொழிப் போர் தியாகிகளுக்கான நினைவுப் பொதுக்கூட்டம் சென்னையில் அதிமுக சார்பாக நடைபெற்றது. இதில் தமிழக முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது- அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு பாஜகவின் அடிமை அரசு என்று செல்லும் இடமெல்லாம் ஸ்டாலின் சொல்லி வருகிறார். அப்படியல்ல….

மேலும்...

குஜராத்தில் பாஜக மாணவர் அணி (ஏபிவிபி) படுதோல்வி!

அஹமதாபாத் (26 ஜன 2020) குஜராத் மத்திய பல்கலைக் கழக தேர்தலில் போட்டியில்ட்ட அனைத்து ஏபிவிபி மாணவர்களும் படுதோல்வி அடைந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில மத்திய பல்கலைக் கழக மாணவர்களுக்கான தேர்தல் நடைபெற்று நேற்று முடிவுகள் அறிவிக்கப் பட்டன. இதில் போட்டியிட்ட பாஜகவின் மாணவர் அணியான ஏபிவிபி படுதோல்வி அடைந்துள்ளது. போட்டியிட்ட ஐந்து மாணவர்களும் தோல்வியை தழுவியுள்ளனர். இவர்களை எதிர்த்து போட்டியிட்ட பிஸ்ரா அம்பேத்கர் புஹ்லே மானவர்கள் அணி, மற்றும் ஃபெடரேஷன்…

மேலும்...

போன் ஒட்டுக்கேட்பு – பாஜக அரசு மீது சிவசேனா தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு!

மும்பை (24 ஜன 2020): முந்தைய பாஜக ஆட்சியில் நான் உட்பட பல தலைவர்களின் போன் ஓட்டுக் கேட்கப் பட்டுள்ளது என்று , சிவசேனா மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “மஹாராஷ்டிராவில், கடந்த, அக்டோபரில் நடந்த சட்டபை தேர்தலுக்குப் பின், ஆட்சி அமைப்பதில் பெரும் குழப்பம் ஏ்றபட்டது. தேர்தலுக்குப் பின், பா.ஜ.,வுக்கு எதிரான கூட்டணி அமைப்பதில், முக்கிய பங்காற்றினேன். அப்போது, எனது போன் பேச்சுக்கள் ஒட்டு கேட்கப்பட்டன. இதை,…

மேலும்...

மத்திய அரசிடம் போராடிக் கொண்டு இருக்கிறோம் – தமிழக அமைச்சர் பரபரப்பு தகவல்!

சென்னை (24 ஜன 2020): மாநிலங்களின் உரிமைகள் மத்திய அரசின் கைக்கு சென்று கொண்டிருப்பதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பாண்டியராஜன், “மாநில அரசுகளுக்கு இருக்கும் அதிகாரம் சிறுகச் சிறுக மத்திய அரசுக்குக் கீழ் செல்வதாகவே தெரிகிறது. இதற்கு ஒரு நல்ல உணாரணம். ஜி.எஸ்.டி வரிமுறை. ஜி.எஸ்.டி வந்ததில் இருந்து நமக்கு சுமார் 4,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதைப் பெற மத்திய அரசிடம் போராடிக் கொண்டிருக்கிறோம். ஜி.எஸ்.டி…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கொந்தளித்த பாஜக தலைவர் – சிஏஏ வை மாற்றி அமைக்க கோரிக்கை!

கொல்கத்தா (24 ஜன 2020): குடியுரிமை சட்ட விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார், மேற்கு வங்க பாஜக துணைத் தலைவரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பேரனுமான சந்திரபோஸ். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்திய நேதாஜி சுபாஷ் சந்திர போஸூன் 123-வது பிறந்தநாள் நேற்று (ஜனவரி 23) நாடு…

மேலும்...

கொந்தளித்த அதிமுக – தடுமாறும் பாஜக!

சென்னை (23 ஜன 2020): பெரியார் குறித்த ரஜினியின் கருத்துக்கு அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அதன் கூட்டணி கட்சியான பாஜகவோ, ரஜினிக்கு ஆதரவு அளித்து வருகிறது. கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50ம் ஆண்டு நிறைவு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். அப்போது, “1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலையை, உடையில்லாமல், செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு” என்று பேசியிருந்தார். இது பெரும்…

மேலும்...

விரைவில் பாஜகவிலிருந்து விலகுவோம் – அமைச்சர் அதிரடி!

இளையான்குடி (22 ஜன 2020): “பாஜகவில் இருந்து அதிமுக விரைவில் விலகும்!” என்று அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் எம்ஜிஆரின் 103வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் வெற்றிவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், அதிமுக பாஜகவிடமிருந்து விலகி தனியாக செல்வதற்கான நேரத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். எங்களின் அமைச்சரவையிலே எல்லாரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். நீங்கள் எங்களை ஒதுக்கி…

மேலும்...

ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் பாஜக ஐ.டி செல் தலைவர் அமித் மால்வியா மீது அவதூறு வழக்கு!

புதுடெல்லி (21 ஜன 2020): ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் பாஜக ஐ.டி செல் தலைவர் அமித் மால்வியா மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர். குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக பெண்கள்…

மேலும்...