இந்துக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றவன் நான் – குலாம் நபி ஆசாத் பரபரப்பு பேட்டி!

புதுடெல்லி (12 பிப் 201): 1979 பொதுத் தேர்தலில், 95 சதவீத இந்து வாக்குகளைப் பெற்று ஒரு இந்து வேட்பாளரையே தோற்கடித்தவன் நான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். குலாம் நபி ஆசாத்தின் பதவிக் காலம் வரும் 15-ல் முடிவடைகிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாக அவர் பாராளுமன்றவாதியாக இருந்தவர். திங்களன்று குலாம்நபி ஆசாத் உட்பட பதவிக்காலம் முடியும் எம்.பி.,க்களுக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய பிரதமர் மோடி குலாம் நபி…

மேலும்...

இந்திய முஸ்லீம் என்பதில் பெருமையடைகிறேன் – குலாம்நபி ஆசாத் உருக்கம்!

புதுடெல்லி (09 பிப் 2021): நான் இந்திய முஸ்லிம் என்பதை நினைத்துப் பெருமை கொள்கிறேன் என்று மாநிலங்களவையில் எதிர்கட்சி தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம்நபி ஆசாத் உருக்கமாக பேசினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக குலாம்நபி ஆசாத், தற்போது மாநிலங்களவையில் எதிர்கட்சி தலைவராக உள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக இந்த பதவியில் இருந்து வருகிறார். குலாம்நபி ஆசாத்தின் பதவிக்காலம் வரும் 15ம் தேதி வாக்கில் முடியவுள்ளது. இந்நிலையில், குலாம் நபி ஆசாத், ஓய்வு பெறுவதால் அவருக்கு…

மேலும்...

பிரதமர் மோடியிடம் மக்கள் கேட்க விரும்பும் கேள்விகள்!

மக்களால் தேர்வு செய்யப்படாதவர்களைப் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் நிதியமைச்சராகவும் நியமிப்பது மக்களாட்சியைக் கேலி செய்வதாக இல்லையா? – ராஜன் மதத்தை வைத்து அரசியல் பண்றதை விட்டு மக்களுக்குத் தேவையானதைச் செய்வதன் பக்கம் எப்போது கவனம் செலுத்தத் தொடங்குவீர்கள்? – ரபீக் ராஜா அத்வானிஜியை ஓரங்கட்டியது குறித்து எப்போதேனும் வருந்தியதுண்டா? – பத்மஜா பிரதமர் என்பவர் நாட்டின் அனைத்து மக்களையும் நலமாக வாழ வைக்கும் பொறுப்பில் உள்ளவர். ஆனால் நமது நாட்டில் மதம், ஜாதி பாகுபாட்டால் அற்பகாரணங்களுக்கெல்லாம் அநியாயமாக…

மேலும்...

ஜெய் ஸ்ரீராம் என கூச்சலிட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அனுமதிக்க மாட்டார்: மஹுவா மொய்த்ரா!

கொல்கத்தா(24 ஜன 2021): “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இப்போது இருந்தால் ஜெய் ஸ்ரீராம் என கூச்சலிட அனுமதித்திருக்க மாட்டார்” என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்தாரா தெரிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125 வது பிறந்த நாளான நேற்று கொல்கத்தாவில் மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த ‘பரக்ரம் திவாஸ்’ விழாவில் கூட்டத்தின் போது பாஜக ஆர்வலர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷங்களை எழுப்பியதை அடுத்து கோபத்தில் மம்தா பானர்ஜி அந்த இடத்தை விட்டு வெளியேறினார். இந்த விழாவில்…

மேலும்...

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி குறித்து பிரதமர் கூறுவது என்ன?

புதுடெல்லி (16 ஜன 2021): இந்தியாவின் கொரோனா தடுப்பூசி வழங்கலை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தடுப்பூசி குறித்த வதந்திகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்றார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மருத்துவ தொழிலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் தடுப்பூசி போட்ட பிறகும் குடிமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். முகமூடிகள் மற்றும் சமூக இடைவெளிகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். என மோடி கேட்டுக்கொண்டார். “எங்கள் தடுப்பூசி உருவாக்குநர்கள் மீது உலகளாவிய நம்பகத்தன்மை உள்ளது. உலகளவில்…

மேலும்...

மோடியின் ரகசியத்தை பொதுவில் போட்டுடைத்த பாஜக தலைவர்!

இந்தூர் (17 டிச 2020):: மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தை கவிழ்ப்பதில் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய பங்கு வகித்துள்ளார் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா தெரிவித்துள்ளார். இந்தூரில் புதன்கிழமை நடைபெற்ற பொது விழாவில் உரையாற்றியபோது விஜயவர்கியா இந்த தகவலை வெளியிட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால் இது யாருக்கும் தெரியாத ரகசியம் என்று உண்மையை போட்டு உடைத்தார். பாஜகவின் ரகசியத்தை பாஜக தலைவரே பொதுவில் சொன்னதுதான் வேடிக்கை கமல்நாத் அரசாங்கத்தை…

மேலும்...

நிவர் புயல் – இரு மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!

சென்னை (24 நவ 2020): நிவர்’ புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார். மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில், “நிவர் புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன்…

மேலும்...

ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்!

ஜெய்பூர் (14 நவ 2020): பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி கொண்டாடினார். பிரதமர் ஆனது முதல் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இருக்கும் லோங்கெவலா ராணுவ மையத்தில் தீபாவளியை கொண்டாட அங்கு சென்றுள்ளார். அவருடன் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே உள்ளிட்டோரும் தீபாவளியை கொண்டாடுகின்றனர். நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து…

மேலும்...

ட்ரம்புக்கு ஏற்பட்ட நிலை மோடிக்கும் ஏற்படும் – மஹபூபா முஃப்தி!

புதுடெல்லி (10 நவ 2020): அமெரிக்க தேர்தலில் ட்ரம்ப் தோல்வியடைந்ததைப் போல மோடி அரசுக்கும் விரைவில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று மஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். பிடிபி தலைவர் மெஹபூபா முப்தி திங்களன்று பாஜகவை கடுமையாக சாடினார். பீகார் தேர்தல் கருத்துக் கணிப்புகள் என்.டி.ஏவின் தோல்வியை முன்னறிவிப்பதாக மெஹபூபாவின் பதில் இருந்தது. “அமெரிக்காவில் என்ன நடந்தது என்று பாருங்கள். டிரம்ப் போய்விட்டார். பாஜகவும் போகும்” என்று ஜம்முவில் பல்வேறு பிரிவுகளுடனான சந்திப்புக்குப் பிறகு மெஹபூபா முஃப்தி கூறினார்….

மேலும்...

பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் : பிரதமர் மோடி!

புதுடெல்லி (31 அக் 2020): உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சர்தார் வல்லபாய் பட்டேலின் 145ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் கெவாடியாவில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடி அப்போது பேசும்போது, “உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும். பயங்கரவாதம் மற்றும் வன்முறையால் யாருக்கும் பலனில்லை. இந்தியா எப்போதும் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடியுள்ளது.. புல்வாமா தாக்குதலின்போது பாதுகாப்புப்படையினர் செய்த…

மேலும்...