தமிழகத்தில் தனிமைப் படுத்தப் பட்ட வீடுகளில் உணவின்றி தவிக்கும் மக்கள்!
நாகர்கோவில் (20 ஏப் 2020): நாகர்கோவில் அருகே கொரோனாவால் தனிமைப் படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளவர்கள் உணவின்றி தவிப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள வெள்ளாடிச்சிவிளையில், கொரோனா பாதித்த இருவர், கடந்த 2 வாரங்களுக்குமுன் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. இவர்களுக்கு மாநகராட்சி மூலம் உணவு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், வாட்ஸ் அப் மூலம் வீடியோ…