பாஜகவின் ரகசிய ஆடியோ வெளியாகி பரபரப்பு!

புதுடெல்லி (29 அக் 2022): தெலங்கானாவில் டிஆர்எஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக லஞ்சம் கொடுக்க முயற்சிப்பது தொடர்பான ஆடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா முக்கியமான ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோ பதிவில் நேற்று கைது செய்யப்பட்ட பாஜகவின் புரோக்கர்களில் ஒருவர் எம்.எல்.ஏ.க்களை பாஜகவில் சேருமாறு கேட்பது உள்ளது. தெலுங்கானா மட்டுமின்றி டெல்லியிலும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது ஆடியோ பதிவில் தெளிவாக…

மேலும்...

கோவை முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கவில்லை – பாஜக பதில்!

சென்னை (28 அக் 2022): கோவையில் அக்டோபர் 31 ஆம் தேதி முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு விடுக்கவில்லை என அண்ணாமலை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பாஜக சார்பில் அக்டோபர் 31 ஆம் தேதி கோவையில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த முழு அடைப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் எனவும்,…

மேலும்...

பாஜக ஐடி பிரிவு நிர்மல் குமாருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி நோட்டீஸ்!

சென்னை (28 அக் 2022): யூடூப் சேனலில் அவதூறு பரப்பும் வகையில் தகவல் தெரிவித்ததாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பாஜக ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமாருக்கு ரூ 10 கோடி நஷ்ட ஈடு கோரி செந்தில் பாலாஜி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சமீபத்தில் யூ டியூப் சேனல் ஒன்றில் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு பரப்பும் வகையில் நிர்மல் குமார் பேசி இருந்தார். அதில் டாஸ்மாக் கொள்முதலில் ஊழல் நடைபெற்று உள்ளது. இதன்…

மேலும்...

ரெயிலில் தொழுகை நடத்தியவர்கள் மீது பாஜக தலைவர் புகார் – வீடியோ!

லக்னோ (22 அக் 2022): ரயிலில் தொழுகை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்திர பிரதேச பாஜக தலைவர் ரெயில்வே அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். ரயிலில் நான்கு பேர் தொழுகை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை உத்தரபிரதேச முன்னாள் எம்எல்ஏ தீப்லால் பார்தி படம் பிடித்துள்ளார். கடா ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது நான்கு பேர் தொழுகை செய்துகொண்டு இருந்ததாகவும் மற்ற பயணிகள் செல்ல இடையூறாக வழியை…

மேலும்...

நான் காங்கிரஸ் தலைவரானால் இதெல்லாம் நடக்கும் – சசிதரூர் உறுதி!

கவுஹாத்தி (16 அக் 2022): காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் பாஜகவில் இணையும் காங்கிரஸ் தலைவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசிதரூர் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் வாக்கு சேகரித்து கவுஹாத்தி சென்ற சசிதரூர் கூறுகையில், காந்தி குடும்பம் எப்பொழுதும் காங்கிரஸுடன் இருக்கிறது, நாங்களும் அப்படித்தான். காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் காங்கிரஸின் வெற்றி என்ற…

மேலும்...

தலித் வீட்டில் முதல்வர் திடீர் விசிட் – பிராண்டட் டீதான் வேண்டும்- பகீர் கிளப்பும் வீடியோ!

பெங்களூரு (14 அக் 2022): தலித் சமூகத்தை சேர்ந்தவர் வீட்டில் பிராண்டட் டீதான் வேண்டும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கேட்கும் வீடியோ ஒன்றை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக முதல்வர் பொம்மை, முன்னாள் முதலர் எடியூரப்பா, சுற்றுலாத்துறை அமைச்சர் ஆனந்த் சிங், நீர்வளத்துறை அமைச்சர் கோவிந்த் கர்ஜோல் மற்றும் பாஜக தலைவர்கள் விஜயநகர மாவட்டம் கமலாபுராவில் உள்ள ஒரு வீட்டில் புதன்கிழமை காலை சென்றனர். அங்கு காலை உணவையும் சாப்பிட்டனர். பின்னர்,…

மேலும்...

பாஜக மூத்த தலைவர்களின் கால்களைக் கழுவிய முதல்வர்!

திஸ்பூர் (08 அக் 2022): அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பாஜக மூத்த தலைவர் ஒருவரின் கால்களைக் கழுவிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பதிவிட்டு, பெரியவர்களுக்கு மரியாதை செய்வது பாஜகவின் பாரம்பரியத்தின் அடித்தளம் என்றும், மூத்த தலைவர்களின் கால்களைக் கழுவியதில் பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார். கவுகாத்தியில் கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழாவின் போது, ​​மத்திய உள்துறை அமைச்சர் அமித்…

மேலும்...

விபச்சார விடுதியாக செயல்பட்ட பாஜக தலைவர் மகனின் ரிசார்ட்!

ரிஷிகேஷ் (27 செப் 2022): உத்தரகாண்ட் மாநிலத்தில் இடிக்கப் பட்ட பாஜக தலைவர் மகனின் ரிசார்ட் விபச்சார விடுதியாக செயல்பட்டதாக அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். உத்தரகான்ட் மாநிலம் ரிஷிகேஷ் அருகே செயல்பட்டு வந்த பா.ஜ., தலைவர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யாவின் ரிசார்ட்டில் பணிபுரிந்த ரிஷப்ஷனிஸ்ட் அங்கிதா பண்டாரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்நிலையில் விபச்சாரத்திற்கு விரும்பாததால் அவர் கொலை செய்யப்பட்ததாக எழுந்த புகாரை அடுத்து வினோத் ஆர்யா கைது செய்யப்பட்டு சிறையில்…

மேலும்...

பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீடுகளில் தொடரும் பெட்ரோல் குண்டுவீச்சு!

கோவை (25 செப் 2022): தமிழகத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில், நேற்று முன்தினம் பா.ஜ. க, ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்களின் வீடு, வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி, தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு காரணமாக கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 4,000க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஈரோடு, திண்டுக்கல், ராமநாதபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், நேற்று இரண்டாவது நாளாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது. இதன்…

மேலும்...

ரிசார்ட்டில் பணிபுரியும் இளம் பெண் படுகொலை – பாஜக தலைவர் மகன் கைது!

ஹரித்வார் (24 செப் 2022): உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் அருகே உள்ளார் ரிசார்ட் ஒன்றின் 19 வயது பெண் ரிஷப்சனிஸ்ட் கொலை வழக்கில் பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யாவின் மகனும் ரிசார்ட் உரிமையாளருமான புல்கித் ஆர்யா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது ரிசார்ட் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டுள்ளது. பெண் கடந்த திங்கள்கிழமை காணாமல் போனாதாக அந்த பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். மேலும் இதில் புல்கித் ஆர்யவின் பங்கு இருப்பதாகவும் குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பினர்….

மேலும்...