135 பேர் பலியான தொங்கு பால விபத்து – பாஜகவின் வெற்றியை பாதிக்கவில்லை!

அஹமதாபாத் (08 டிச 2022): குஜராத்தில் 135 பேர் பலியான தொங்கு பால விபத்து நடந்த மோர்பியில் பாஜக முன்னிலை வகிக்கிறது. குஜராத்தில் 182 தொகுதிகளுக்கான சட்டச்சபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. டிசம்பர் 1ம் தேதி முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5ம் தேதி 2ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் குஜராத்தில்…

மேலும்...

ஆம் ஆத்மியால் குஜராத்தில் மண்ணை கவ்விய காங்கிரஸ்!

அகமதாபாத் (08 டிச 2022): : குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸின் பாரம்பரிய வாக்கு வங்கியில் கால் பதித்ததால், காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. முதல் கட்ட முடிவுகளின்படி ஆம் ஆத்மி கட்சி 13 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரசுக்கு 26 சதவீதம். இதற்கிடையில் பாஜகவின் வாக்கு வங்கி அசைக்கப் படவில்லை. 182 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அக்கட்சி முன்னிலையில் உள்ளது. 2017ல் பாஜக 99 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ்…

மேலும்...

காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு தாவிய ஹர்திக் படேல் பின்னடைவு!

ஆமதாபாத் (08 டிச 2022): குஜராத்தில் நட்சத்திர வேட்பாளர்கள் அனைவரும் முன்னேறி வரும் நிலையில், பாஜகவின் அல்பேஷ் தாக்கூர், ஹர்திக் படேல் ஆகியோர் பின்தங்கியுள்ளனர்.ப்ஜிக்னேஷ் மேவானி முன்னிலையில் உள்ளார். குஜராத் முதல்வர் வேட்பாளர் பூபேந்திர படேல் முன்னிலை வகிக்கிறார். வட்காமில் ஜிக்னேஷ் மேவானியும், கம்பலியாவில் ஆப்ஸின் இசுடன் காட்வியும் முன்னேறி வருகின்றனர். காந்தி நகர் தெற்கில் அல்பேஷ் தாக்கூர் பின்தங்கியுள்ளார். விரங்கத்திலும் ஹர்திக் படேல் பின்தங்கியுள்ளார். ஜாம்நகரில் பாஜகவின் ரிவாபா ஜடேஜாவும் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸில் இருந்து…

மேலும்...

குஜராத்தில் பாஜக முன்னிலை!

ஆமதாபாத் (08 டிச 2022): குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முன்னிலை வகிக்கிறது. குஜராத்தில் பாஜக 100ஐ தாண்டியுள்ளது. பாஜக தற்போது 128 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 43 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆம் ஆத்மி கட்சியால் மாநிலத்தில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

மேலும்...

இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னிலை!

புதுடெல்லி (08 டிச 2022): இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 21 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 20 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

மேலும்...

பாஜகவில் விழும் அடுத்த விக்கெட் – நெருக்கடியில் அண்ணாமலை!

சென்னை (06 டிச 2022): பாமகவில் இருந்து சென்று பாஜகவில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிராஜ், பாஜகவில் இருந்து விலகி மீண்டும் பாமகவில் இணையவுள்ளார். பாஜக செயல்பாடுகளில் கடுமையாக அதிருப்தி அடைந்ததால், தீவிர அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்து வந்த முன்னாள் எம்.எல்.ஏ ரவிராஜ் பாமக தலைமையின் அழைப்பை ஏற்று மீண்டும் பாமகவில் இணையவுள்ளார். தமிழக பஜகவின் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றபிறகு பல அதிரடி மாற்றங்களை செய்தார். இது கட்சியின் மூத்த தலைவர்களுக்கே பிடிக்காமல்…

மேலும்...

பாஜகவிலிருந்து விலகுவதாக திருச்சி சூர்யா திடீர் அறிவிப்பு!

சென்னை (06 டிச 2022): சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து தாம் விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா. தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் அவருக்கு மாநில ஓபிசி பிரிவு தலைவர் பதவி வழங்கப்பட்டது. அண்மையில் பாஜக நிர்வாகி டெய்சியை செல்போனில் ஆபாசமாக சூர்யா திட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பாஜக பொறுப்பில் இருந்து திருச்சி சூர்யா நீக்கப்பட்டார். இந்த…

மேலும்...

குஜராத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் பாஜக – கருத்துக்கணிப்புகள் வெளியீடு!

ஆமதாபாத் (05 டிச 2022): பாஜக தற்போது ஆண்டு வரும் மாநிலங்களான இமாச்சல் பிரதேசத்திலும், குஜராத்திலும் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இமாச்சல் பிரதேசத்தில் கடந்த நவம்பர் மாதம் 12ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 1ந்தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று முடிந்துள்ளது. இரு மாநிலங்களில் பதிவான வாக்குகள் வரும் 8ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்நிலையில் வாக்குப்பதிவுக்கு…

மேலும்...

எஸ் எம் எஸ்ஸில் பூத் சிலிப் அனுப்பிய பாஜக – அதிர்ச்சியான வாக்காளர்கள்!

காந்திநகர் (05 டிச 2022): குஜராத்தில் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் பாஜகவினர் எஸ் எம் எஸ் மூலம் பூத் சிலிப் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 2ம் கட்ட சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு பூத் சிலிப் இணைப்புகளுடன் பாரதீய ஜனதா கட்சி எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. எஸ் எம் எஸ் பெற்ற வாக்காளர்களின் மொபைல் எண்களை பாஜக எவ்வாறு பெற்றது என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்த விவரங்களை சமூக ஆர்வலர் ஒருவர்…

மேலும்...

பாஜகவில் காயத்ரி ரகுராம் பொறுப்புக்கு இசையமைப்பாளர் நியமனம்!

சென்னை (04 டிச 2022): தமிழக பாஜகவின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவராக இசை அமைப்பாளர் தீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி சரணை, திருச்சி சூர்யா சிவா ஆபாசமாக பேசிய ஆடியோ விவகாரத்தில் காயத்ரி ரகுராம் கடுமையாக எதிர்வினை ஆற்றியிருந்தார். இதையடுத்து வர் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக கூறி பாஜகவில் இருந்து…

மேலும்...