சித்திக் கப்பன் சிகிச்சையை உபியிலிருந்து டெல்லிக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (28 ஏப் 2021): பிரபல மலையாள பத்திரிகையாளரான சித்திக் கப்பனின் சிகிச்சையை உத்திர பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்திர பிரதேசத்தில் ஹத்ராஸ் பாலியல் குற்றம் தொடர்பான செய்திகளை சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் சித்திக் காப்பான் உபி அரசால் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவதியுறுகிறார். இந்நிலையில் சித்திக் கப்பனை சிகிச்சைக்காக எய்ம்ஸ் அல்லது ஆர்.எம்.எல் மருத்துவமனைக்கு மாற்ற. சித்திக் கப்பனின் சிகிச்சை உ.பி.க்கு…

மேலும்...

மருத்துவமனைகளுக்கு இலவசமாக ஆக்சிஜன் வழங்கிய பழ வியாபாரி பியாரே கான்!

நாக்பூர் (27 ஏப் 2021): நாக்பூரை சேர்ந்த தொழிலதிபர் பியாரே கான் ரூ 85 லட்சம் செலவில் இலவசமாக ஆக்சிஜன் வழங்கியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த கோடீஸ்வரரான பியாரே கான், 400 மெட்ரிக் டன் மருத்துவ திரவ ஆக்ஸிஜனை நாக்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். நாடெங்கும் கொரோனா இரண்டாவது அலை அதி வேகத்தில் பரவி வரும் நிலையில், இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். மத்திய பாஜக…

மேலும்...

பிச்சை எடுத்தாவது ஆக்சிஜனை கொண்டு வாருங்கள் – மத்திய அரசு மீது நீதிமன்றம் பாய்ச்சல்!

புதுடெல்லி (22 ஏப் 2021): ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் பிச்சை எடுத்தாவது ஆக்சிஜனை கொண்டு வாருங்கள் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வட மாநிலங்களில் போதுமான ஆக்சிஜன் இல்லாததன் காரணமாக நோயாளிகள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனால் உயிரிழப்பும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் , டெல்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று தங்களது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

மேலும்...

ஆக்சிஜன் வாயு கசிந்து 22 கொரோனா நோயாளிகள் மரணம்!

நாசிக் (21 ஏப் 2021): இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாட்டில் பல்வேறு பகுதிகள் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், கொரோனா தடுப்பூசிகள், நோயாளிகளுக்கு வழங்கும் ஆக்சிஜன் உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் வாயுவை அந்தந்த மருத்துவமனைகளேயே சேமித்து வைத்து அங்குள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வாயு சிலிண்டர் மூலம் பயன்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள சாகீர் ஹூசேன் மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு…

மேலும்...

இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் விலை உயர்வு!

புதுடெல்லி (21 ஏப் 2021): கோவிஷீல்டு தடுப்பூசியின் ஒரு டோஸை 250 ரூபாய் என்ற விலைக்கு சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் விற்பனை செய்து வந்தது. இந்நிலையில், தடுப்பூசிக்கான தேவை அதிகரித்து வரும் சூழ்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை சீரம் இன்ஸ்டிடியூட் உயர்த்தியுள்ளது. அதன்படி, இனி கோவிஷீல்டு தடுப்பூசியின் ஒரு டோஸ் மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என்றும் சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. இந்த விலை மத்திய அரசு வெளியிட்ட…

மேலும்...

குஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்காக மருத்துவமனைகளாக மாறிய மசூதிகள்!

வதோதரா (21 ஏப் 2021); இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்குநாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக ஆளும் குஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்கு மசூதிகள் மருத்துவமனைகளாக மாறியுள்ளன. பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலால் குஜராத்தில் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், குஜராத் மாநில மசூதிகள் மருத்துவமமனைகளாக செயல்பட்டு வருகின்றன. குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டம் ஜகாங்கீர்புரா பகுதியில் உள்ள மசூதியில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை…

மேலும்...

ராகுல் காந்திக்கு கொரோனா உறுதி!

புதுடெல்லி (20 ஏப் 2021): காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறி ஏற்பட்டதால் கரோனா பரிசோதனை செய்துகொண்ட அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, சமீபத்தில் தன்னோடு தொடர்பில் இருந்தவர்களை, பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைபிடிக்குமாறும், பாதுகாப்பாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். சமீபத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா பாதிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

இந்திய பயணத்திற்கு உலக நாடுகள் தடை!

புதுடெல்லி (20 ஏப் 2021): இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாலும், இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் பரவி வரும் இரட்டை மரபணு மாற்றமடைந்த கொரோனா, தங்கள் நாட்டில் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் சில உலக நாடுகள், இந்தியர்கள் தங்கள் நாட்டிற்கு வருவதை தடை செய்துள்ளனர். இம்மாத தொடக்கத்தில் நியூசிலாந்து நாடு, இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்குத் தடை விதித்தது. தற்போது ஹாங்காங்கும் இந்திய பயணிகள் விமானத்திற்கு 14 நாட்கள் தடை விதித்துள்ளது. இந்த தடை இன்று…

மேலும்...

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பயன்படுத்தியது குறித்து அதிர்ச்சி தகவல்!

சென்னை (20 ஏப் 2021): இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தடுப்பூசிகளை நாடெங்கும் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசியை வீண் செய்த மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக ஆர்டிஐ (தகவல் அறியும் உரிமை சட்டம்) வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி நாடு முழுவதும் 44 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வீணாகியுள்ளதாகவும், அதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 12.10 சதவீத டோஸ்கள் வீணாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது….

மேலும்...

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை (18 ஏப் 2021): கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் வரும் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கு. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன் அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அதிக அளவில் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் கடந்த 10-ந் தேதி முதல் சில புதிய கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. ஆனாலும் கொரோனா தொடர்ந்து பரவி வருகிறது. இதனால் புதிய கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த…

மேலும்...