நாடே எதிர் பார்க்கும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

புதுடெல்லி (22 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. முஸ்லிம்களை குறிவைத்து இயற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் பாகுபாடின்றி அனைவரும் போராடி வருகின்றனர். கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் இச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது. ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இச்சட்டத்தை எதிர்த்து முதலில் வழக்கு தொடர்ந்தது அதனை தொடர்ந்து இதுவரை 143 வழக்குகள் உச்ச…

மேலும்...

சவாலை ஏற்க தயார் – மோடி அமித் ஷாவுக்கு கபில் சிபல் அறைகூவல்!

புதுடெல்லி (21 ஜன 2020): குடியுரிமை சட்டம் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோருக்கு கபில் சிபல் அழைப்பு விடுத்துள்ளார். நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறுபான்மையினரின் நலனுக்காக இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனினும், இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருப்பது, பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும்…

மேலும்...

தவறான வாட்ஸ் அப் மெஸேஜால் தரை மட்டமாக்கப் பட்ட 300 முஸ்லிம் வீடுகள்!

பெங்களூரு (21 ஜன 2020): கர்நாடகாவில் பாஜக குழுமத்தில் வெளியான தவறான வாட்ஸ் அப் மெஸேஜால் 300 முஸ்லிம் குடும்பங்களின் வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டுள்ளன. பெங்களூரில் பொலந்தூர் ஏரி அருகே வசித்த சுமார் 300 முஸ்லிம் வீடுகள்தான் இடிக்கப் பட்டுள்ளன. திருத்தப் பட்ட குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டு . நாடு முழுக்க அமலுக்கு வந்துள்ளது. இதற்கு எதிராக நாடு முழுக்க பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் பாஜகவின் வாட்ஸ் ஆப் குழுக்களில் பெங்களூர்…

மேலும்...

குடியுரிமை சட்ட விவகாரத்தில் மோடி அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த சங்கராச்சார்யா பல்கலைக் கழகம்!

கொச்சி (21 ஜன 2020): கொச்சி ஸ்ரீ சங்கராச்சார்யா சமஸ்கிருத பல்கலைக் கழகம் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி மோடி அரசுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பலதரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாடெங்கும் போராட்டம் வெடித்துள்ளது. குறிப்பாக மாணவர்கள் இப்போராட்டத்தை முன்னின்று நடத்திக் கொண்டு உள்ளனர். ஆனால் அவர்கள் மீது கொலை வெறி தாக்குதலை மத்திய அரசு அரங்கேற்றி வருகிறது. இதற்கிடையே கொச்சி ஸ்ரீ சங்கராச்சார்யா சமஸ்கிருத பல்கலைக் கழகம் குடியுரிமை சட்டத்தை…

மேலும்...

அடுத்த மூன்று நாட்களில் அது நடக்கும் – மம்தா பானர்ஜி அதிரடி!

கொல்கத்தா (21 ஜன 2020): “மேற்கு வங்க சட்டப்பேரவையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும்!” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) நிறைவேற்றியதிலிருந்து அதற்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் சி.ஏ.ஏ-வுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் ஒருமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சி.ஏ.ஏ அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக இருப்பதாகத் தெரிவித்ததோடு மத்திய…

மேலும்...

ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் பாஜக ஐ.டி செல் தலைவர் அமித் மால்வியா மீது அவதூறு வழக்கு!

புதுடெல்லி (21 ஜன 2020): ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் பாஜக ஐ.டி செல் தலைவர் அமித் மால்வியா மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர். குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக பெண்கள்…

மேலும்...

ஒழுங்கீனமாக நடந்த பாஜகவினர் கன்னத்தில் பளார் விட்ட கலெக்டர் – (VIDEO)

போபால் (21 ஜன 2020): போபாலில் பெண் கலெக்டரின் முடியை பிடித்து இழுத்து ஒழுங்கீனமாக நடந்த பாஜகவை சேர்ந்தவர் கன்னத்தில் கலெக்டர் அறைந்ததால் பரபரப்பு ஏற்படது. மத்திய பிரதேசம் போபாலில் பாஜக சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஞாயிறன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த ராஜ்கர் கலெக்டர் நிவேதா மற்றும் துணை கலெக்டர் பிரியா வர்மா ஆக்கியோரை சூழ்ந்து கொண்ட பாஜவினர் பிரியா வர்மாவின் முடியை பிடித்து இழுத்து தொல்லை கொடுத்துள்ளனர்….

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கிறிஸ்தவர்கள் போராட்டம்!

கொல்கத்தா (20 ஜன 2020): மேற்கு வங்கத்தில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்திய கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. முஸ்லிம் கள் தவிர்த்து அனைத்து மதத்தினரும் குடியுரிமை பெறும் வகையில் உள்ள இந்த சட்டத்திற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் கொல்கத்தாவில் 8000 கிறிஸ்தவர்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேரணியில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டத்தின்படி கிறிஸ்தவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

வங்கியில் உள்ள முழு பணத்தையும் பொதுமக்கள் திரும்பப் பெறுவதால் பரபரப்பு!

காயல்பட்டினம் (20 ஜன 2020): காயல்பட்டினம் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் வங்கியில் உள்ள பணத்தை திரும்பப் பெற்று வங்கிக் கணக்கை பொதுமக்கள் முடித்துக் கொள்வதாக தெரிவித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் தலைமை அலுவலகம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாளிதழில் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த விளம்பரத்தில் பணம் எடுப்பதற்கோ, பணம் செலுத்துவதற்கோ, கீழ்கண்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வங்கியின் பேங்க்…

மேலும்...

ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம் – ஷஹீன் பாக் போராட்டக்காரர்கள் திட்டவட்டம்!

புதுடெல்லி (20 ஜன 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அஹிம்சை வழியில் போராடி வரும் ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் ஜனவரி 22 உச்ச நீதிமன்ற விசாரணைக்காக காத்திருக்கின்றனர். குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் பல ஆயிரக்கணக்கான…

மேலும்...