மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் பணி: முதல்வர் உத்தரவு!
சென்னை (10 ஜூன் 2020): தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி, தொற்று இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், மருத்துவர்களின் பணிக்காலத்தை நீட்டித்தும், கூடுதல் மருத்துவர்களை பணி அமர்த்தியும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக புதிதாக 1,239 மருத்துவர்கள் உள்பட 2,834 மருத்துவ பணியாளர்களை 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்….