அதிமுக தலைமையகத்தில் காரசார விவாதம்!

சென்னை (19 செப் 2020): அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து அதிமுக தலைமையகத்தில் காரசார விவாதம் நடைபெற்றுள்ளது. கொரோனா காலத்திலும் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. பரபரப்பான இந்த அரசியல் காலகட்டத்தில் அ.தி.மு.க.வின் அவசர உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்….

மேலும்...

நீட் தேர்வு தற்கொலை விவகாரம் – ஸ்டாலினை மடக்கிய முதல்வர் எடப்பாடி!

சென்னை (15 செப் 2020): நீட் தேர்வு முறை கொண்டு வருவதற்கு திமுகவே காரணம் என்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். தமிழக சட்டசபை கூட்டம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று இரண்டாம் நாளாக சட்டசபை கூட்டம் நடந்துவரும் நிலையில், இன்றையை கூட்டத்தொடரில் நீட் தேர்வால் மன உளைச்சலில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்பாக திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு…

மேலும்...

எடப்பாடி, ஓபிஎஸ் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியீடு!

சென்னை (12 செப் 2020): முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. வரும் 14-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் 3-ம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் சட்டசபை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபையை நடத்துவதற்கு ஏற்ற வகையில் கலைவாணர் அரங்கம் தயார்படுத்தப்பட்டு வருகிறது. 14, 15 மற்றும் 16 ஆகிய 3 நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுகிறது….

மேலும்...

முதல்வர் எடப்பாடி உட்பட எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை!

சென்னை (11 செப் 2020): தமிழகத்தில் சட்டசபை கூட்டம் கூட உள்ளதையொட்டி எம்.எல்.ஏக்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. எம்.எல்.ஏக்களின் வீடுகளுக்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்களுக்கும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. தமிழக சட்டசபை கூட்டம் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி நிறைவடைந்தது. அதற்கு பிறகு இம்மாதம் 14-ந் தேதி சட்டசபையை மீண்டும் கூட்ட முடிவு செய்யப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக…

மேலும்...

மீண்டும் எடப்பாடி ஓபிஎஸ் யுத்தம் – மதுரை போஸ்டர்களால் பரபரப்பு!

மதுரை (09 செப் 2020): மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் அதிமுகவில் மீண்டும் எடப்பாடி, ஓபிஎஸ் யுத்தம் தொடங்கியுள்ளது. மதுரையில் ராஜேந்திர பாலாஜியின் படத்தோடு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் “மக்களின் முதல்வர் எடப்பாடியாரை குறை சொன்னால் நாக்கு அழுகிவிடும்”- எடப்பாடியாரை புறம் பேசுபவர்கள் இதைப் படித்த பிறகாவது திருந்தட்டும் என்று மதுரை நகரெங்கும் போஸ்டர் ஒட்டப்பட்டது. இதற்கு எதிராக ஓ.பி.எஸ் தரப்பினர் “அரசியலில் முதிர்ச்சி” “அதிகாரத்தில் அடக்கம்” “என்றென்றும் தமிழர் தலைவர் ஓபிஎஸ் வழியில்” என்று…

மேலும்...

அடுத்த நடவடிக்கை என்ன? – மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

சென்னை (29 ஆக 2020): புதிய தளர்வுகள் மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கொரோனா தொற்று பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 25-ந் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளை அனுமதித்து வருகிறது. தற்போது தமிழகத்தில் தொடர்ந்து பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இ-பாஸ் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி மாநில…

மேலும்...

தமிழகத்தில் நீட் தேர்வு எப்போது நடத்தலாம்? – முதல்வர் தகவல்!

சென்னை (27 ஆக 2020): கொரோனா கட்டுக்குள் வந்த பிறகு நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கடலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நபர்கள் அச்சப்பட வேண்டாம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாதபோதும்…

மேலும்...

கல்லூரிகளில் அரியர்ஸ் தேர்வுகள் ரத்து – முதல்வர் அதிரடிஉத்தரவு!

சென்னை (26 ஆக 2020): கல்லூரிகளில் அரியர்ஸ் வைத்திருக்கும் மாணவர்கள் அனைவரும் பாஸானதாக அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் கல்லூரி இறுதியாண்டின் இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர பிற தேர்வுகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக உயர்கல்வித்துறை…

மேலும்...

திமுகவுக்கு ஆதரவான நீதிமன்ற தீர்ப்பு!எடப்பாடி அதிர்ச்சி..!!

சென்னை (25 ஆக 2020): திமுக மீது உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்வதாக சென்னை உயா்நீதிமன்றம் இன்று தீா்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்டப் பொருள்களை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்து, சட்டப்பேரவைக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக்கூறி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு சட்டமன்ற உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இதனை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி, திமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த…

மேலும்...

தோப்புக்கரணம் போட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

சேலம் (22 ஆக 2020): விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தோப்புக்கரணம் போட்டு விநாயகனை தரிசித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் சிறிய அளவிலான விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதூர்த்தியை கொண்டாடியுள்ளார். மேலும் பய பக்தியோடு விநாயகர் முன்பு தோப்புக்கரணம் போட்டு தரிசனம் செய்துள்ளார். இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்….

மேலும்...