இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு அதிர வைக்கும்வகையில் அதிகரிப்பு!

புதுடெல்லி (05 ஜூலை 2020): இந்தியாவில் நேற்று மட்டும் ஒரே நாளில் 24,850 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவில் அதி வேகத்தில் பரவி வருகிறது. நாளுக்கு நாள் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளன. இந்நிலையில் நேற்று(ஜூலை 4) ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவாக 24,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 6,73,165 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 613 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கையும் 19,268 ஆக…

மேலும்...

இந்தியர்களைத் திரும்ப அனுப்பியது சீனா!

புதுடெல்லி (01 ஜூலை 2020): இந்தியா-சீனா இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்தியாவில் இருந்து கடந்த 21-ம் தேதி சீனா சென்ற சிறப்பு விமானத்தில் 2 இந்தியர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டதால், இந்தியர்களை அனுமதிக்க அந்நாடு மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்நிலையில், “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் இயக்கப்படும் ஏர் இந்தியா விமானம் டெல்லியில் இருந்து சீனாவின் குவாங்சோ நகருக்கு பயணிகள் இன்றி காலியாக சென்றது. இதில் பயணிக்க இருந்த இந்திய தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினர் உள்பட…

மேலும்...

டிக்டாக் உள்ளிட்ட 55 செயலிகளுக்கு இந்தியாவில் தடை – மத்திய அரசு அதிரடி உத்தரவு!

புதுடெல்லி (29 ஜூன் 2020): டிக்டாக் உள்ளிட்ட 55 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. டிக்டாக், யுசி பிரவுசர் உள்ளிட்ட 55 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, நாட்டின் கட்டமைப்பு ஆகிவற்றுக்கு எதிராக செயல்படுவதாக கூறி இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்திய மத்திய அரசின் 69A சட்டம் ( Information Technology Act ) மூலமாக இந்த தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில்…

மேலும்...

சீன ஒப்பந்தம் ரத்து – பீகார் அரசு அதிரடி உத்தரவு!

பாட்னா(29 ஜூன் 2020): சீன நிறுவனங்களுடன் செய்யப்பட்ட ரூ.2,900 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பீகார் மாநில அரசு ரத்து செய்து அறிவித்துள்ளது. எல்லையில் வாலாட்டிக்கொண்டிருக்கும் சீன ராணுவம், சமீபத்தில் பெரும் மோதலை நடத்தியது. 20 இந்திய வீரர்கள் இறந்தனர்; பதிலடியில் 30 சீன ஜவான்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் மக்களை கொந்தளிக்க செய்தது. இதனையடுத்து, சீனப் பொருட்களை புறக்கணிக்குமாறு பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். மத்திய அமைச்சர்கள் சிலர் நோ சீனா பொருட்கள் ஆதரவாக கருத்து…

மேலும்...

இந்திய எல்லையில் மீண்டும் படைகளை குவிக்கும் சீனா!

லடாக் (29 ஜூன் 2020): கல்வான் பள்ளத்தாக்கு எல்லையில் மீண்டும் சீனா படைகளை குவிப்பது செயற்கைகோள் படங்கள் மூலம் தெளிவாகியுள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் ஆற்று பள்ளத்தாக்கில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்து வருகிறது. இதன் காரணமாக இந்திய படைகளுக்கும் சீன படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலில் இந்திய வீரர்கள் நடத்திய தாக்குதலில் 35 முதல் 40 சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த…

மேலும்...

மணிப்பூர் மற்றும் மேகாலயாவில் நிலநடுக்கம்!

மணிப்பூர் (28 ஜூன் 2020): மணிப்பூர் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் டிக்லிபூரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.1 அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. முன்னதாக ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஹான்லே நகரில் இருந்து வடகிழக்கே 332 கி.மீ. தொலைவில் நேற்று மதியம் 12.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.4 ஆக பதிவானது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. மேலும் . லடாக்கின் கார்கில் பகுதியில் இருந்து வடமேற்கே…

மேலும்...

இந்தியாவில் ஒரே நாளில் 18 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று!

புதுடெல்லி (27 ஜூன் 2020): இந்தியாவில் ஒரே நாளில், 18 ஆயிரத்து, 552 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: நாட்டில் ஒரே நாளில், நாடு முழுதும், 18 ஆயிரத்து, 552 பேரிடம், கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஐந்து லட்சத்து, 08 ஆயிரத்து 953 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரு லட்சத்து, 97 ஆயிரத்து 387 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

மேலும்...

சீன தூதுவருடன் ராகுல் காந்தி ரகசிய சந்திப்பு – பாஜக பகீர் குற்றச்சாட்டு!

புதுடெல்லி (26 ஜூன் 2020): கடந்த 2017 ஆம் ஆண்டு டெல்லியில், இந்தியாவிற்கான சீன தூதரை, ராகுல் காந்தி ரகசியமாக சந்தித்து பேசியதாக பாஜக, தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார் இது தொடர்பாக வீடியோ கான்பரன்ஸ் முறையில் நட்டா பேசியதாவது: கடந்த 2017 ம் ஆண்டில், டோக்லாமில் இந்தியா – சீனா படைகள் நேருக்கு நேர் சந்தித்து கொண்டன. அப்போது, டெல்லியில், இந்தியாவிற்கான சீன தூதரை, ராகுல் ரகசியமாக சந்தித்தார். மேலும் கடந்த 2005 – 06…

மேலும்...

இந்திய தாக்குதலில் சீன படையினர் உயிரிழந்தது உண்மையா? – சீனா விளக்கம்!

பீஜிங் (25 ஜூன் 2020): இந்திய சீனா மோதலில் இந்திய படையினர் 20 பேர் உயிரிழந்த நிலையில் சீன படையினர் 40 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதனை சீனா மறுத்துள்ளது. கிழக்கு லடாக் எல்லை பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த 5 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 76 பேர் காயம் அடைந்தனர். சீன தரப்பில் 40 பேர் வரை உயிரிழந்ததாக தகவல் வெளியானது….

மேலும்...

இந்திய சீனா ராணுவ வீரர்களுக்கிடையேயான மோதல் – பரபரப்பு வீடியோ!

லடாக் (13 ஜூன் 2020): இந்திய சீன படையினர் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. சிக்கிமில் இந்திய மற்றும் சீன படை வீரர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிட்டதட்ட ஐந்து நிமிடம் ஓடும் அந்த வீடியோ காட்சிகளில், பனியால் சூழப்பட்ட அந்த மலைப்பகுதியில் இந்தியா – சீனா வீரர்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். திரும்பி செல்லுங்கள், சண்டையிட வேண்டாம் என்று இரு தரப்பிலிருந்தும் வீரர்கள்…

மேலும்...