மத்திய கிழக்கில் மிகப்பெரிய பிளாஸ்டிக் ஆலையை நிறுவுகிறது கத்தார்!

Share this News:

தோஹா (09 ஜன 2023): மத்திய கிழக்கின் மிகப்பெரிய பிளாஸ்டிக் ஆலை கத்தாரில் அமைக்கப்படவுள்ளது.

கத்தார் எனர்ஜி மற்றும் செவ்ரான் பிலிப்ஸ் கெமிக்கல் இணைந்து இந்த ஆலையை அமைக்கிறது. 6 பில்லியன் டாலர் செலவில் பிளாஸ்டிக் ஆலை அமைக்கப்படும்.

இந்த ஆலை இயற்கை எரிவாயுவை பாலிதீன் மற்றும் இதர பிளாஸ்டிக் பொருட்களாக மாற்றி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இந்த ஆலை 2026ல் செயல்படத் தொடங்கும்.

கத்தார் எரிசக்தி நிறுவனமும், டெக்சாஸைச் சேர்ந்த செவ்ரான் நிறுவனமும் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இதன் மூலம் கத்தாரின் பிளாஸ்டிக் உற்பத்தி இரட்டிப்பாகும். ஆண்டுக்கு 14 மில்லியன் டன் உற்பத்தி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share this News:

Leave a Reply