ஹோலி பண்டிகையையொட்டி வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தை மாற்ற வலியுறுத்தல்!

Share this News:

லக்னோ (17 மார்ச் 2022): ஹோலி பண்டிகை வெள்ளிக்கிழமை அன்று இருப்பதால் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தை மாற்றி அமைக்க இந்திய இஸ்லாமிய மையம் வலியுறுத்தியுள்ளது.

அமைதி மற்றும் ஒழுங்கை நிலைநாட்ட, ஹோலி பண்டிகை அதே நாளில் கொண்டாடப்படும் என்பதால், வெள்ளிக்கிழமை தொழுகையின் நேரத்தை மாற்றுமாறு மசூதிகளை இந்திய இஸ்லாமிய மையம் வலியுறுத்தியுள்ளது.

நாட்டின் ஒருங்கிணைந்த கலாச்சாரத்திற்கு ஏற்ப அமைதி மற்றும் ஒழுங்கை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று லக்னோ இஸ்லாமிய மையத்தின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெள்ளிக்கிழமை தொழுகையின் நேரத்தை மாற்றுவதைத் தவிர, உள்ளூர் மசூதிகளில் பிரார்த்தனை செய்ய முஸ்லிம்களை அவர் வலியுறுத்தினார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோன்ற நிலை இருந்தது, பின்னர் மதகுருமார்கள் வெள்ளிக்கிழமை தொழுகையின் நேரத்தை மாற்றியது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply