பெங்களூரு (16 பிப் 2022): கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் ஷிவமோகா கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வர தடை விதிக்கப்பட்டதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 30 மாணவிகள் வகுப்பறையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு நாடெங்கும் விவாத பொருளாகியுள்ளது. இந்திய அரசின் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைக்கு சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே உயர் நீதிமன்ற உத்தரவின்படி முக்காட்டை கழற்றுமாறு ஷிவமோகா கல்லூரி நிர்வாகம் கேட்டுக் கொண்டதையடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 30 மாணவிகள் வகுப்பறையை விட்டு வெளிநடப்பு செய்தனர். முந்தைய காலங்களில் வகுப்பறையில் ஹிஜாப் அணிய அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.