டாக்டர் கஃபீல்கானை உடனே விடுவியுங்கள்!- அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Share this News:

லக்னோ (01 செப் 2020): டாக்டர் கஃபீல்கானை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த கூட்டமொன்றில் அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் பேசியதாக அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.”அவரின் பேச்சு வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டும் நோக்கில் இல்லை, தேசிய ஒற்றுமைக்கு அழைப்பு விடுக்கும் வகையிலேயே இருந்தது,” என்று கூறி நீதிமன்றம் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.

முன்னதாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசினார் என்று குற்றம் சாட்டப்பட்ட அவர் கைது செய்யப்பட்டு மதுரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

2017இல் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல குழந்தைகள் உயிரிழந்த கோரக்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக இருந்த கஃபீல் கான் உதவியின் பேரில் பல குழந்தைகளின் உயிர்கள் காப்பாற்றப் பட்டது. எனினும் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார், போதாதற்கு அவர் மீதே குற்றம் சாட்டி சிறையிலடைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply