பிளாஸ்மா தானம் மூலம் கொரோனா சிகிச்சை வெற்றி – அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்!
சென்னை (23 ஜூலை 2020): தமிழகத்தில் பிளாஸ்மா தானம் மூலம் கொரோனா சிகிச்சை வெற்றி அடைந்திருப்பதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிளாஸ்மா வங்கியை தொடங்கி வைத்து பேசிய விஜயபாஸ்கர், “பிளாஸ்மா நன்கொடையாளர்கள் 2 பேர் இன்று பிளாஸ்மா தானம் அளித்து தொடங்கியிருக்கிறார்கள். ஒரே நேரத்தில் இந்த பிளாஸ்மா வங்கியில் 7 பேர் தானம் அளிக்கக் கூடிய வகையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன….