பாகிஸ்தான் அதிரடி கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி உட்பட மூன்று வீரர்களுக்கு கொரோனா பாஸிட்டிவ்!

இஸ்லாமாபாத் (13 ஜூன் 2020): பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஷாஹித் அஃப்ரிடி உட்பட மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அஃப்ரிடி அவரது ட்விட்டரில் இட்டுள்ள பதிவில், “வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. என் உடலில் வலி அதிகரிப்பதை உணர்ந்தேன். நான் பரிசோதிக்கப்பட்டேன், துரதிர்ஷ்வசமாக எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தனை தேவை“ என்று பதிவிட்டுள்ளார். I’ve been feeling unwell since…

மேலும்...

காயமடைந்த பறவையை காப்பாற்றிய தோனி – தோனியின் மகளின் நெகிழ வைக்கும் பதிவு!

ராஞ்சி (09 ஜூன் 2020): காயமடைந்த அழகிய பறவை ஒன்றை தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி காப்பாற்றி மீண்டும் அதனை பறக்கவிட்ட தகவலை தோனியின் மகள் ஜிவா சமூக வலைதலத்தில் பதிவாக இட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. தோனியின் மகள் ஷிவா செவ்வாயன்று வெளியிட்டுள்ள பதிவில் ‘பாப்பா’ மற்றும் ‘மம்மா’ ‘காயமடைந்து மயக்கத்தில் கிடந்த ஒரு பறவையை காப்பாற்றி எங்கள் வீட்டில் வைத்து அது சரியானதும் மீண்டும் பறக்கவிட்டார். ‘காயமடைந்த பறவை புல்வெளியின் மீது…

மேலும்...

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முஹம்மது அசாருதீனின் பெருநாள் வாழ்த்து!

ஐதராபாத் (26 மே 2020): முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முஹம்மது அசாருதீன் தனது ரம்ஜான் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நேற்று இந்தியா முழுவதும் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப் பட்டது. கொரோனா பரவலை தடுக்க நான்காவது கட்ட லாக்டவுன் அமலில் இருப்பதால் ரம்ஜான் நோன்பு காலங்களிலேயே முஸ்லிம்கள் தொழுகையை வீட்டிலேயே தொழுது கொண்டனர். இந்நிலையில் நேற்றைய பெருநாள் கொண்டாட்டமும் வீடுகளிலேயே கொண்டாடப் பட்டது. மேலும் பெருநாள் தொழுகையையும் வீட்டிலேயே தொழுது கொண்டனர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பல…

மேலும்...

இந்து கோவிலில் ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய முஸ்லிம் கிரிக்கெட் வீரர்!

இஸ்லாமாபாத் (15 மே 2020): பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி லாக்டவுன் காலத்தில் இந்து கோவில்களில் ஏழைகளுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை விநியோகித்தார். தனது நிவாரணப் பணிகளின் புகைப்படங்களைப் சமூக வலைதலங்களில் பகிர்ந்து கொண்டுள்ள அப்ரிடி, , “நாங்கள் கொரோனாவை ஒழிப்பதில் ஒன்றாக இருக்கிறோம், அதேபோலை இதில் ஒன்றாகவே வெற்றி பெறுவோம். ஒற்றுமை எங்கள் பலம். அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்காக ஸ்ரீ லட்சுமி நரேன் கோவிலுக்குச் சென்று உதவினேன்” என்று தெரிவித்துள்ளார். அப்ரிடியின்…

மேலும்...

முன்வந்த அசாருதீன் – பின் வாங்கும் முன்னணி கிரிக்கெட் வீரர்கள்!

புதுடெல்லி (03 மே 2020): நலிந்த நிலையில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு உதவிட தொடங்கப்பட்டுள்ள நலநிதிக்கு முன்னாள் கேப்டன் அசாருதீன் உள்ளிட்டோர் நிதி அளிக்க முன்வந்துள்ளனர். ‘கொரோனா பாதிப்பு காரணமாக பலர் தங்கள் வாழ்வாதரங்களை இழந்துள்ளனர். அந்தப் பட்டியலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் உள்ளனர். இவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் (ஐசிஏ) சார்பில் நலிந்த நிலையில் உள்ள முன்னாள் வீரர்களுக்கு நிதி உதவி செய்ய முடிவு செய்யப்பட்டது. ஐசிஏ சார்பில் 10 லட்ச ரூபாய்…

மேலும்...

இந்திய கிரிக்கெட் வீரர்களை சீண்டிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாமுல் ஹக்!

இஸ்லாமாபாத் (23 ஏப் 2020): இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவுக்காக விளையாடவில்லை, அவர்களின் சாதனைக்காக விளையாடினார்கள் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களை சீண்டியுள்ளார். பாகிஸ்தானின் அதிரடி வீரராக இருந்தவர் இன்ஸமாமுல் ஹக், தற்போது பாகிஸ்தான் தேர்வுக் குழு தலைவராக உள்ளார். இவரும் முன்னாள் விரர் ரமீஸ் ராஜாவும் பாகிஸ்தானின் யூடுப் சேனல் ஒன்றின் டாக்‌ஷோவில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய இன்சமாமுல் ஹக், “தற்போதைய பாகிஸ்தான் அணி வீரர்கள் இயல்பாகவே திறன் பெற்றிருந்தாலும் சில சமயம்…

மேலும்...

கொரோனா தொற்று காரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்!

பெஷாவர் (15 ஏப் 2020): கொரோனா தொற்று காரணமாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாஃபர் சர்ஃபராஸ் (50) உயிரிழந்தார். கொரோனா தொற்று காரணமாக ஜாஃபர் சர்ஃபராஸ் கடந்த 3 நாட்களாக பெஷாவரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டரில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அவர் உயிரிழந்ததை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். பாகிஸ்தானில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் கிரிகெட் வீரர் சர்ஃபராஸ். இவர் 1988 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில்…

மேலும்...

மனித நேயத்தை மிஞ்சியது எதுவும் இல்லை – ஹர்பஜனுக்கு நன்றி தெரிவித்த ஷஹித் அஃப்ரிடி!

இஸ்லாமாபாத் (25 மார்ச் 2020): கொரோனா எதிரொலியாக உணவின்றி பாதிக்கப் பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹிர் அஃப்ரிடி பலருக்கு உதவி வருகிறார். இந்நிலையில் அஃப்ரிடியின் உதவியை மெச்சிய இந்திய சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், அஃரிடியை பாராட்டும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில்” உண்மையில் மிக உண்ணதமான சேவையை செய்கிறீர்கள் அஃப்ரிடி. மனிதநேயமிக்க உங்கள் செயல் மிகவும் பாராட்டுக்குரியது. உங்களுக்கு இறைவனின் அருள் என்றென்றும் கிடைக்கட்டும். உலகில் அனைவருக்காகவும் நாம் பிரார்த்திப்போம்”…

மேலும்...

கொரோனா எதிரொலி – இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் ரத்து!

புதுடெல்லி (13 மார்ச் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக இந்தியா- தென்னாப்ரிக்கா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. 64 இந்தியர்கள், 16 இத்தாலியர்கள், கனடாவை சேர்ந்த ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கரோனா அச்சம் காரணமாக பல்வேறு மாநில அரசுகளும் பள்ளிகள், மால்கள், தியேட்டர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்தியா- தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல்…

மேலும்...

அதெல்லாம் நாங்க பார்த்துக் கொள்கிறோம் – கங்குலி திட்டவட்டம்!

கொல்கத்தா (07 மார்ச் 2020): கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு பாதிப்பு இல்லை. திட்டமிட்டபடி நடைபெறும் என்று சவுரவ் கங்குலி கூறியுள்ளார். இந்தியாவில் பிரபலமான 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 29-ந்தேதி தொடங்கி மே 24-ந்தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் இந்திய வீரர்கள் மட்டுமின்றி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொள்கிறார்கள். பெரும்பாலான அணிகளுக்கு அயல்நாட்டு பயிற்சியாளர்களே உள்ளனர்….

மேலும்...