சவுதியின் முதல் சொகுசு தீவு திட்டம்!

ரியாத் (06 டிச 2022): சவுதி அரேபியாவின் கனவுத் திட்டமான நியோமில் உள்ள முதல் சொகுசு தீவான சிந்தாலாவின் வளர்ச்சி குறித்து சவுதி பட்டத்து இளவரசர் அறிவித்தார். இத்திட்டத்தின் மாஸ்டர் பிளானும் வெளியிடப்பட்டுள்ளது. சிந்தாலா திட்டம் தங்குமிடம், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு ஆகியவை இடம்பெறும். சிந்தாலாவிற்கு 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து விருந்தினர்கள் வரத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் 3,500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். நியோமில் உள்ள சிந்தாலா தீவுகளின் குழு சுமார் 8,40,000…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

துபாய் (03 டிச 2022): ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மூடுபனியும் கூடும் என மதிப்பிடப் பட்டுள்ளது. மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கிழக்கு மற்றும் கடலோரப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பனிமூட்டம் காரணமாக, வாகனங்களை மெதுவாகச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். பின்வரும் சாலைகளில் வேகக் குறைப்பு அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது: Al Saad – Sweihan road: 80 km/h Trucks…

மேலும்...

உலக கால்பந்தாட்ட ரசிகர்களை சிலிர்க்க வைக்கும் கத்தார் சிறுமிகள்!

தோஹா (02 டிச 2022): தோஹாவின் மெட்ரோ ரயில் நிலையங்களில் உலகக் கோப்பை ரசிகர்களை அன்பால் போர்த்தி இனிப்புகளுடன் வரவேற்கும் கத்தார் சிறுவர் சிறுமிகளைப் பார்த்து கால்பந்தாட்ட ரசிகர்கள் சிலிர்த்துப் போகின்றனர். அரபு நாடுகள் மற்றும் கத்தாரின் விருந்தோம்பலை இந்த குழந்தைகள் உலகிற்கு காட்டி ஆச்சர்யப்படுத்துகின்றனர். உலகக் கோப்பை கால்பந்துக்கு வரும் ரசிகர்களின் முக்கிய பயண பாதை தோஹா மெட்ரோ ஆகும். போட்டி நேரத்தில் மெட்ரோ நிரம்பியிருக்கும். ஒவ்வொரு நிலையமும் வெவ்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்களின் கலவையாகும்….

மேலும்...

சவூதி அரேபியாவில் மீண்டும் கனமழை – பொதுமக்களுக்கு சிவில் பாதுகாப்பு பிரிவு எச்சரிக்கை!

ரியாத் (30 நவ 2022): சவுதியில் மேற்கு பகுதியில் பெய்த கனமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இன்றும் மழை தொடரும் எனவும், மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் சிவில் பாதுகாப்பு பிரிவினர் எச்சரித்துள்ளனர். தபூக் பகுதி, துபா அல்-வாஜ், உம்லுஜ், மதீனா மற்றும் யாம்பு ஆகிய இடங்களில் நேற்று கனமழை பெய்தது. தபூக் பகுதியில் சில தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின….

மேலும்...

கத்தார் உலகக்கோப்பை தொடக்க விழா நட்சத்திரம் கானிம் அல் முஃப்தா இந்தியா வர அழைப்பு!

தோஹா (28 நவ 2022): கத்தார் உலகக்கோப்பை தொடக்க விழா நட்சத்திரம் கானிம் அல் முஃப்தாவை இந்தியாவிற்கு வருமாறு அழைத்துள்ளார், கேரள மாநிலத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி அசிம் வெலிமன்னா. அசிம் வெலிமன்னா உலகக்கோப்பை போட்டியை காண்பதற்காக கத்தார் வந்துள்ளார். அவரை கானிம் அல் முஃப்தா மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டுக்கு அழைத்து விருந்தளித்தனர். இந்நிலையில் கானிம் அல் முஃப்தாவை இந்தியாவிற்கு அழைத்துள்ளார் அசிம் வெலிமன்னா. மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்கான போராட்டங்களில் குறிப்பிடத் தக்கவர் ஆசிம் என்பது…

மேலும்...

சவூதியில் பினாமி பரிவர்த்தனை நிறுவனங்களுக்கு வர்த்தக அமைச்சகம் எச்சரிக்கை!

ரியாத் (28 நவ 2022): சவூதியில் பினாமி பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்றரை லட்சம் நிறுவனங்கள் தங்கள் நிலையை சரி செய்யுமாறு வர்த்தக அமைச்சகத்தின் அறிக்கை கேட்டுக் கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு உதவியுடன் நடத்தப்பட்ட ஆய்வுகளின் போது பினாமி பரிவர்த்தனைக்கான அறிகுறிகளைக் கண்டறிந்த நிறுவனங்களுக்கு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் பினாமி பரிவர்த்தனைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் புதிய அறிக்கை வெளியாகியுள்ளது. வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள், 3.5 லட்சம் நிறுவனங்கள் தங்கள்…

மேலும்...

ஒட்டகக் காய்ச்சல் – கத்தார் உலகக் கோப்பை கால்பந்துக்கு ஆபத்தா? உண்மை நிலவரம்!

தோஹா (27 நவ 2022): வளைகுடா நாடான கத்தாரில் 2022 ஃபிஃபா உலகக் கோப்பை போட்டி நடைபெற்று சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதே வேளையில், பிற மேற்கத்திய நாடுகளில் இதுவரை நடந்த உலகக் கோப்பை போல் அல்லாமல் பல கட்டுப்பாடுகளை கத்தார் அரசு விதித்துள்ளது. குறிப்பாக மதுபானம், ஓரினச் சேர்க்கை, விபச்சாரம், ஆடைக் குறைப்பு உள்ளிட்டவைகளில் கத்தார் அரசு எந்தவித சமரசமும் செய்து கொள்ளவில்லை. இதனால் மேற்கத்திய நாடுகள், கத்தார் அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி…

மேலும்...

ஜித்தா பெருமழையில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களுக்கும் இழப்பீடு!

ஜித்தா (27 நவ 2022): ஜித்தா மழையில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களின் வாகனங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜித்தாவில் கடந்த வியாழன் அன்று ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தில் சேதம் அடைந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு அந்நாட்டு சட்டப்படி இழப்பீடு வழங்கப்படும் என சட்ட நிபுணர் முஹம்மது அல் வுஹைபி தெரிவித்துள்ளார். சொத்துக்கள், கட்டிடங்கள், வாகனங்கள் போன்றவற்றுக்கு ஏற்படும் சேதங்கள் இழப்பீடு பெற தகுதியானவை. விரிவான காப்பீட்டுக் கொள்கைகளைக் கொண்ட வாகனங்களுக்கு காப்பீட்டு நிறுவனங்களால் இழப்பீடு வழங்கப்பட…

மேலும்...

பிரமாண்டமாகத் துவங்கியது கத்தார் உலகக் கால்பந்து போட்டி!

கத்தார் (தோஹா): உலகக் கோப்பை கால்பந்து போட்டி (FIFA World Cup 2022) கத்தாரில் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் நேற்று இரவு (21-11-2022) தொடங்கியது. துவக்க நிகழ்ச்சியாக கே-பாப் இசைக்குழு BTS இன் ஜங் குக் மற்றும் பிரபல நடிகர் மோர்கன் ஃப்ரீமேன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். கத்தார் மற்றும் எக்வடோர் நாட்டிற்கு இடையிலான குரூப் ஏ-வின் முதல் போட்டிக்கு முன்பாக கத்தார் ரசிகர்கள், அல் கோரில் அமைந்திருக்கும் அல் பைத் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்வுகளைக் கண்டு…

மேலும்...

சவுதி விசாவிற்கு இந்தியர்களுக்கு இனி போலீஸ் கிளியரன்ஸ் தேவையில்லை!

ரியாத் (17 நவ 2022): சவூதி அரேபியாவுக்கு புதிய வேலைவாய்ப்பு விசாக்களை முத்திரை குத்துவதற்கு டெல்லியில் உள்ள சவுதி தூதரகம் விதித்த போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ் இனி அவசியமில்லை. முந்தைய இந்த உத்தரவை இந்தியாவில் உள்ள சவூதி தூதரகம் திரும்பப் பெற்றுள்ளது. சவுதி அரேபியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக புதுதில்லியில் உள்ள சவுதி தூதரகம் ட்வீட் செய்துள்ளது. மேலும் சவூதி அரேபியாவில் மகிழ்ச்சியுடன் வாழும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான…

மேலும்...