தர்பார் திரைப்பட விவகாரம் தொடர்பாக ஒருவர் கைது!

மதுரை (16 ஜன 2020): தர்பார் திரைப்படத்தை கேபிள் டிவியில் ஒளிபரப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு இரு வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் மதுரையில் நேற்று முன்தினம் தர்பார் திரைப்படம் கேபிள் டிவியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பிய தகவல்கள் வெளிவந்தது. இதனை அடுத்து ரஜினி மக்கள் மன்றத்தினர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில்…

மேலும்...

ஆல்யா மானஸா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தகவல்!

சென்னை (16 ஜன 2020): ராஜா ராணி சீரியல் நடிகை ஆல்யா மானசா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ராஜா ராணி’ தொடருக்கு ரசிகா்களிடம் நல்ல வரவேற்புள்ளது. இந்தத் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவா்களில் சஞ்சீவ், ஆல்யா மானஷாவும் அடங்குவா். இத்தொடரில் கணவன் மனைவியாக நடித்த இவா்கள், நிஜத்திலும் காதலா்களாகி கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனா். தற்போது, ஆல்யா மானஷா கா்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த…

மேலும்...

பட்டாஸ் – சினிமா விமர்சனம்!

தனுஷ் அசுரன் என்ற அசுர வெற்றிக்குப் பிறகு என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தை கொடுத்து சுட்டுக் கொண்டார். எனவே பட்டாஸ் நல்லவிதத்தில் அமையும் என்ற நினைப்பில் சென்ற ரசிகர்களுக்கு எவ்வாறு அமைந்தது என்று பார்ப்போம். தனுஷ் பட்டாஸாக ஒரு திருடனாக ஊரில் ஜாலியாக தன் நண்பர் கலக்கப்போவது யாரு சதீஷுடன் சுற்றி வருகிறார். அவ்வப்போது சின்னச்சின்ன திருட்டு வேலைகளில் ஈடுப்பட்டு வருகிறார். அவரை எதிர்வீட்டு பெண்ணாக கண்களை ஈர்க்கிறார் ஹீரோயின் மெஹ்ரீன். மறுபக்கம் சினேகா…

மேலும்...

ஊடகங்கள் குறித்து நடிகர் ரஜினி விமர்சனம்!

சென்னை (14 ஜன 2020): ஊடகங்கள் தண்ணீரையும் பாலையும் பிரிப்பதைப் போல் இருக்க வேண்டும் என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். துக்ளக் பத்திரிகையின் 50-ஆவது ஆண்டு விழா சென்னையில் செவ்வாயன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு சிறப்பு மலரை வெளியிட்டார். இதனை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். பின்னர் ரஜினிகாந்த் பேசும்போது கூறியதாவது: குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு முன்பாக வெங்கய்ய நாயுடு இன்னும்…

மேலும்...

பணிந்தது தர்பார் திரைப்படக் குழு!

சென்னை (13 ஜன 2020): தர்பார் படத்தில் சசிகலா குறித்து இருந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப் பட்டுள்ளன. ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் உலகமெங்கும் 7 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இப்படத்தின் ஒரு காட்சியில், சிறை அதிகாரி ஒருவர் ரஜினியிடம் ”இப்ப எல்லாம் சிறைக் கைதிகள் ஜாலியா ஷாப்பிங் போயிட்டு வர்றாங்க சார்…” என்று கூறுவதாக வசனம் உள்ளது. பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை வைத்தே இந்த வசனம் வைக்கப்பட்டுள்ளது என்று…

மேலும்...

விபச்சார வழக்கில் பிக்பாஸ் நடிகை கைது – திரையுலகில் பரபரப்பு!

மும்பை (12 ஜன 2020): பாலியல் தொழிலில் ஈடுபட்ட, பிக்பாஸ் 13 போட்டியாளரும் பிரபல பாலிவுட் நடிகையுமான அம்ரிதா தனாவோவை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மேற்கு புறநகரப் பகுதியான கோரேகாவ்ன் (கிழக்கு) பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் சிலர் போலி வாடிக்கையாளர்கள் போல் உள்ளே நுழைந்து, அங்கு பாலியல் தொழில் நடப்பதை உறுதி செய்தனர்….

மேலும்...

பிரபல நடிகையை முத்தமிட ரசிகர் முயன்றதால் பரபரப்பு!

மும்பை (12 ஜன 2020): பிரபல பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கானின் மகளும் பாலிவுட் நடிகையுமான சாரா அலி கானின் கையில் ரசிகர் ஒருவர் முத்தமிட முயன்றுள்ளார். மும்பையின் பிரபல புகைப்படக் கலைஞர் வைரல் பயானி தன் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் இச்சம்பவத்தின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். ரசிகர்களுடன் இணைந்து சாரா அலி கான் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது ரசிகர் ஒருவர் திடீரென சாராவின் கையில் முத்தமிட முயன்றுள்ளார். உடனே அவர் பாதுகாவலர்களால் அப்புறப் படுத்தப்பட்டார். இதனால் அப்பகுதியில்…

மேலும்...

ஐயோ பாவம் தர்பார் சினிமா டீம்!

சென்னை (09 ஜன 2020): தர்பார் படம் வெளியான ஒரு மணி நேரத்தில் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) திரையரங்குகளில் வெளியான நிலையில், அப்படத்தின் தியேட்டர் பிரிண்ட் “தமிழ் கன்” மற்றும் “தமிழ் ராக்கர்ஸ்” போன்ற தளங்களில் வெளியாகியுள்ளது. முன்பு, விஜய்யின் “சர்கார்” திரைப்படத்தை படம் வெளியாகும் நாளன்றே எங்களது இணையதளத்தில் வெளியிடுவோம் என்று தாங்கள் கூறியதை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் செய்து காட்டியுள்ளது. சர்கார்…

மேலும்...

மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்ததற்காக பழி வாங்கப்படுகிறாரா தீபிகா படுகோன்?

மும்பை (09 ஜன 2020): தீபிகா படுகோன் நடித்த சபாக் படத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 2005-ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஆசிட் வீச்சு சம்பவம் தொடர்பான உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் சபாக். ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பிய லக்ஷ்மி அகர்வாலின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இப்படம் சமீபத்தில் தனது ட்ரைலரினை வெளியிட்டது. மேலும் இத்திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு எதிராக…

மேலும்...

தர்பார் – சினிமா விமர்சனம்!

ரஜினிகாந்த் வருடத்திற்கு ஒரு படம் நடித்து வந்த நிலையி சமீபகாலமாக தொடர்ந்து படங்களில் நடித்து வருவது ஆச்சர்யம்தான். அந்த வகையில் பேட்ட படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வந்திருக்கும் படம் தர்பார். டெல்லியில் யாருக்கும் அஞ்சாது பல என்கவுண்டர்களை செய்து ரவுடிகளை அழித்து வரும் ரஜினிக்கு மும்பைக்கு ட்ரான்ஃஸ்பர் ஆகிறது. மும்பையில் போலிஸ் பயமின்றி அனைவரும் இருக்க, சார்ஜ் எடுத்த இரண்டே நாளில் ரஜினி மும்பையில் ட்ரக் விற்பவர்களை, பெண் பிள்ளைகளை கடத்துபவர்கள் என அனைவரையும் பிடித்து…

மேலும்...