இமாச்சல பிரதேச முதல்வராக சுக்விந்தர்சிங் சுக்கு நாளை பதவியேற்பு!

Share this News:

புதுடெல்லி (10 டிச 2022): இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் குழுவுக்கு தலைமை தாங்கிய நடத்திய சுக்விந்தர்சிங் சுக்கு, மாநில முதல்வராக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இமாசலப் பிரதேசத்தின் முதல்வராக 58 வயதாகும் சுக்விந்தர்சிங் சுக்குவின் பெயரை தேர்வு செய்துவிட்டதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தௌன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுக்விந்தரை, முதல்வராக கட்சித் தலைமை விரைவில் அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.

சுக்விந்தர்சிங் சுக்கு, கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் நான்கு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர், ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில், சிம்லாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களின் கூட்டத்தில் , சுக்விந்தர் சிங் முதல்வராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். நாளை காலை 11 மணிக்கு பதவியேற்க உள்ளார். துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரியும் நாளை பதவியேற்கிறார்.


Share this News:

Leave a Reply