18 வயதிற்குட்பட்டவர்களுக்கு கூகிள் புதிய கொள்கை!

புதுடெல்லி (11 ஆக 2021): 18 வயதிற்குட்பட இளம் பயனர்களுக்கு இணையத்தை பாதுகாப்பான இடமாக மாற்ற கூகுள் தனது கொள்கைகளை விரிவுபடுத்தி வருகிறது.

தேடல் நிறுவனமான கூகிள்18 வயதிற்குட்பட்ட பயனர்களை கூகிள் தேடல் முடிவுகளிலிருந்து தங்கள் படங்களை அகற்றக் கோரும். விண்ணப்பத்தை தாக்கல் செய்யலாம். அவ்வாறு தாக்கல் செய்ய முடியாவிட்டால், அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அவர்கள் சார்பாக கூகிளை கோரலாம்.இது விரைவில் அறிமுகபப்டுத்தப்படும் என்று கூகிள் கூறியுள்ளது.

13 வயதிற்குட்பட்ட குழந்தைகளை கூகுளில் கணக்கை உருவாக்க கூகுள் அனுமதிக்கவில்லை. இருப்பினும், வயதை போலியாக பதிவு செய்து பலர் கணக்கு வைத்துள்ளனர். இதனை மனதில் கொண்டு, ஜிமெயில், யூடியூப், கூகுள் சர்ச் என பலவற்றை உள்ளடக்கிய கூகுள் அதன் பயன்பாடுகளில் மாற்றங்களைச் செய்யவுள்ளது.

அதேபோல கூகுள் பிளே ஸ்டோரிலும் ஒரு புதிய பாதுகாப்பு பிரிவை கூகிள் தொடங்குகிறது, அதன்படி குழந்தைகள் ஆப்ஸ்களில் எதனை தேடுகிறாரக்ள்.மற்றும் அவர்கள் சேகரிக்கும் தரவை எவ்வாறு விரிவாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை பெற்றோர்களுக்கு தெளிவுபடுத்தும். இது குழந்தைகளை பெற்றோர்கள் பாதுகாக்க உதவும்.

மேலும் அவசியமற்ற வலைப்பக்கங்களுக்கு குழந்தைகள் செல்வதையும் புதிய வழிமுறைகள் மூலம் கூகிள் தடுக்கிறது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *