சென்னை (18 ஆக 2020): கொரோனா பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்பி பாலசுப்ரமணியம் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு இரு தினங்களுக்கு முன்பு உடல் நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது அவரது உடல் நிலை குறித்து அவரது மகன் வெளியிட்டுள்ள தகவலில், “அப்பா நேற்று எந்த நிலையில் இருந்தாரோ அப்படித்தான் இருக்கிறார். தீவிர சிகிச்சையில் இருந்தாலும் சீராக இருக்கிறார். வேறெந்த சிக்கல்களும் இல்லை. இது நல்ல அறிகுறி என்று மருத்துவர்கள் நினைக்கின்றனர். பிரார்த்தனைகள், வாழ்த்துகள், அக்கறை, அன்பு செலுத்தும் உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றி கூற விரும்புகிறேன். கண்டிப்பாக அப்பா மீண்டு வருவார், நன்றி” என கூறியுள்ளார்.