கொரோனா பரவல் காரணமாக குறைவாக இயக்கப்படும் பேருந்துகள்!

நீலகிரி (25 ஜூன் 2020): கொரோனா பரவல் காரணமாக நீலகிரியில் , 30 சதவீதம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

நீலகிரியில், பொது போக்குவரத்து ஜூன், 1ம் தேதி முதல் துவங்கியது. 50 சதவீத பஸ்கள், 60 சதவீத பயணிகளுடன் இயங்க அரசு அனுமதித்தது. அதன்படி, ஊட்டி, குன்னுார், கோத்தகிரி மற்றும் கூடலுார் கிளைகளில், 160 பேருந்துகள் இயக்கப்பட்டன. எனினும் மக்கள் மத்தியில் பேருந்தில் பயணிக்க அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, குறைவான பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் , ஊட்டி கிளை 20, குன்னுார் 20, கோத்தகிரி 20, கூடலுார் 15 என, தற்போது 75 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

– ஆசாத் காமில்

இச்செய்தியைப் பகிருங்கள்: