அங்கேயும் ஐடி ரெயிடாமே என்ன திடீர்னு இப்படி?

Share this News:

சென்னை (18 மார்ச் 2021): தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அதிமுக பிரமுகர்கள் வீட்டில் ஐடி ரெய்டு நடத்தி வருகின்றனர்..

கடலூரில் அதிமுக பிரமுகர்கள் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. கடலூரில் மொத்தம் 6 இடங்களில் 7 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. கடலூரில் அதிமுக சார்பில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் போட்டியிடும் நிலையில், அவரின் ஆதரவாளர்களான சரவணன், மதியழகன், பாலகிருஷ்ணன், சுரேஷ், தமிழ்செல்வன் ஆகியோரது வீடுகளில் காலை 10 மணி முதலே சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதிகாரப்பூர்வமாக வருமான வரித்துறை சார்பில் எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல் புகாரின் அடிப்படையில்தான் இந்த சோதனை நடைபெற்றதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply