தமிழகத்தில் கொரோனாவிலிருந்து விடுபட்டு வீடு சென்றவர்கள் எத்தனை தெரியுமா?

Share this News:

சென்னை (07 ஏப் 2020): தமிழகத்தில் இதுவரை 19 பேர் குணமாகி வீட்டுக்கு சென்றுள்ளனர். என்று தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று வரை 621 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் சற்று முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, “கொரோனா தொற்றில் இருந்து தமிழகத்தில் 19 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை பரிசோதனை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை : 5,305. கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மேலும் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது.

எல்லோரையும் பரிசோதனை செய்வது இயலாத காரியம். எனவேதான் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், வீட்டில் இருக்கவும் வலியுறுத்துகிறோம்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 64 வயது பெண்மணி பலியாகியுள்ளார். இதனால், கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்


Share this News:

Leave a Reply