கடலூர் (16 ஏப் 2020): கொரோனா பாதிக்கப்பட்டதாக தனிமைப் படுத்தப்பட்டிருந்த கடலூர் மாவட்ட அனைத்து தப்லீக் ஜமாத்தினரும் வீடு திரும்பினர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இந்தியாவில் கடந்த ஜனவரியின் இறுதியிலேயே கொரோனா பரவ தொடங்கியபோதும் அதனை அரசு சரிவர கவனத்தில் கொள்ளவில்லை. ராகுல் காந்தியும் இதனை அப்போதே சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்நிலையில் டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் ஆலோசனை கூட்டம்தான் இந்தியாவில் கொரோனா பரவ காரணம் என்பதாக ஊடகங்கள் அவதூறு பரப்பி வந்தன. இது இப்படியிருக்க கொரோனா சந்தேகத்தின் பேரில் தனிமைப் படுத்தப்பட்ட தப்லீக் ஜமாத்தினர் பல மாவட்டங்களில் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
இதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்காக தனிமைப்படுத்தப்பட்ட, மேலும் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்ற அனைத்து தப்லீக் ஜமாத்தினரும் இன்று வீடு திரும்பினர்.