சலூன் கடைக்காரருக்கு கொரோனா – முடி வெட்டியவர்களுக்கு கொரோனா சோதனை!

Share this News:

சென்னை (29 ஏப் 2020): சென்னை கோயம்பேடு சலூன் கடைக்காரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் முடி வெட்டியவர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த 36 வயது வாலிபர், சென்னை நெற்குன்றத்தில் தங்கி, கோயம்பேடு காளியம்மன் கோயில் தெரு, கோயம்பேடு மார்க்கெட் ரோடு என 2 இடங்களில் சலூன் கடை நடத்தி வருகிறார்.

இவர், கடந்த மாதம் தனது சொந்த ஊருக்கு சென்றபோது அவரை ஒரு நாய் கடித்துள்ளது. அதனால், அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கடந்த 16ம் தேதி சென்னை திரும்பினார். பின்னர், வழக்கம் போல் சலூன் கடையில் முடிவெட்டும் வேலையில் ஈடுபட்டார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி இவருக்கு கடுமையான காய்ச்சல், இருமல் ஏற்பட்டது. உடனே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை செய்தார். இதன் முடிவு கடந்த 25ம் தேதி வந்தது. அதில், அந்த வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

உடனே அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில், இவர் தனது கடையில் சமீபத்தில் 42 பேருக்கு முடிவெட்டியது தெரிந்தது. இதனால், மேற்கண்ட அனைவரையும் தேடி பிடித்து, அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவில்தான் எத்தனை பேருக்கு நோய் தொற்று உள்ளது என்பது தெரியவரும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Share this News: