பில்கிஸ் பானு வழக்கு – திரிணாமுல் காங்கிரஸ் 48 மணி நேர தர்ணா!

கொல்கத்தா (06 செப் 2022): பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கில் 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் மகளிர் பிரிவு 48 மணி நேர தர்ணாவில் ஈடுபட்டது.

தர்ணாவின்போது மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாக்தாவில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களால் பெண் ஒருவர் சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்தது உட்பட, பெண்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பைக் கையாள்வதில் மத்திய அரசின் மெத்தனமான அணுகுமுறைக்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

கற்பழிப்பு மற்றும் கடத்தல் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டவர்களுக்கு விடுதலையை பரிசீலிக்கக் கூடாது என்று நாட்டின் சட்டம் கூறுகிறது. ஆனால் பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்றவர்கள் எப்படி விடுவிக்கப்பட்டனர் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது வெட்கக்கேடானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று டிஎம்சி மூத்த தலைவரும், மாநில தொழில்துறை அமைச்சருமான ஷஷி பஞ்சா கூறினார்.

2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது பில்கிஸ் பானு கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகளையும் குஜராத் அரசு விடுதலை செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *