துபாய் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

துபாய் (04 ஆக 2021): ஹிஜ்ரா (முஹர்ரம் 1) புத்தாண்டை முன்னிட்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “(முஹர்ரம் 1) புத்தாண்டை முன்னிட்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி பொது விடுமுறையாகும். இது பொது மற்றும் தனியார் துறைகளுக்கும் பொருந்தும். தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஒரே நாளில் ஊதியத்துடன் கூடிய விடுப்பை அனுமதிக்க வேண்டும்.” என்று அமைச்சகம்…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு சவூதி வரும் இந்தியர்களுக்கு உதவலாம்!

துபாய் (04 ஆக 2021): ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான தடை நீக்கம் சவூதி வர காத்திருக்கும் இந்தியர்களுக்கு உதவக்கூடும். இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை ஐக்கிய அரபு அமீரகம் நேற்று நீக்கி உத்தரவிட்டது. இதனால் இந்தியாவிலிருந்து துபாய் வராமல் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். துபாயின் இந்த அறிவிப்பு சவூதி வரும் இந்தியர்களுக்கு உதவக்கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஏற்கனவே கத்தர் வழியாக வரும் இந்தியர்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு ஹோட்டல் கிடைக்காததால் பலர் சிக்கித்தவித்துள்ளனர்….

மேலும்...

இந்தியாவிலிருந்து துபாய் செல்ல விமானங்களுக்கு டிக்கெட் புக்கிங் தொடக்கம்!

துபாய் (03 ஆக 2021): இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை ஐக்கிய அரபு அமீரகம் நீக்கியுள்ள நிலையில், விமான நிறுவனங்கள் ஆன்லைன் புக்கிங்கை தொடங்கியுள்ளன. கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக விமானப் பயணத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்திருந்தது. இத் தடையை நீக்கியுள்ள அமீரகம், இரண்டு முறை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை எடுத்துக் கொண்ட இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்புவதற்கான விசா வைத்திருப்பவர்கள் துபாய்க்கு திரும்பலாம் என அறிவிக்கப்…

மேலும்...

துபாய், இந்தியா இடையேயான பயணத் தடை நீக்கம்!

துபாய் (03 ஆக 2021): இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை ஐக்கிய அரபு அமீரகம் நீக்குகிறது. கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக விமானப் பயணத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்திருந்தது. இந்த தடையை நீக்கியுள்ள அமீரகம் , இரண்டு முறை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை எடுத்துக் கொண்ட ஐக்கிய அரபு அமீரக விசா வைத்திருப்பவர்கள் துபாய்க்கு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5 முதல் இது அமலுக்கு வருகிறது. கோவிட் பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து இந்தியா,…

மேலும்...

இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கான பயணத்தடை ஆகஸ்ட் 7 வரை நீட்டிப்பு!

துபாய் (28 ஜுலை 2021): இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஆகஸ்ட் 7 வரை விமானங்களை இயக்கப்போவதில்லை என்று எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பயணிகளின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, எமிரேட்ஸ் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோவிட் பரவலைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 25 முதல் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் விடுமுறையில் இந்தியாவுக்குச் சென்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு…

மேலும்...

துபாய் வாழ் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!

துபாய் (27 ஜூலை 2021): ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்தியர்களுக்கு துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு 17 வகையான வழிமுறைகளை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொழிலாளர் சட்டம் குறித்து அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அந்த வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது. மேலும் பணிபுரியும் இந்தியர்கள் அனைவருக்கும் அவசரத் தொலைபேசி எண்கள் இருக்க வேண்டும். பணியிடத்தில் மன மற்றும்…

மேலும்...

வளைகுடா நாடுகளுக்காக துபாயில் நீட் தேர்வு மையம்!

துபாய் (24 ஜூலை 2021): வளைகுடா நாட்டு மாணவர்களுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குவைத்தில் நீட் தேர்வு மையம் உள்ள நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தை தவிர, பிற வளைகுடா நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்காக துபாயில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. துபாயில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் வெள்ளிக்கிழமை முதல் துபாயில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . சவூதி…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் பக்ரீத் பெருநாள் தொழுகை நேரங்கள் பட்டியல்!

துபாய் (18 ஜூலை 2021): வளைகுடா நாடுகளில் பக்ரீத் பெருநாள் வரும் ஜூலை 20 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஜூலை 20 ஆம் தேதி பக்ரீத் பெருநாள் தொழுகை எந்தெந்த பகுதிகளில் எப்போது நடைபெறும் என்பது குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முழு பட்டியல் : –அபுதாபி: காலை 6.02 -அல் ஐன்: காலை 5.56 -மதினத் சயீத்: காலை 6.07 -துபாய்: காலை 5.57 -ஷார்ஜா: காலை 5.54 –…

மேலும்...

துபாய் – இந்தியா விமான சேவை தொடங்கப்படுமா? – எதிஹாத் ஏர்வேஸ் பதில்!

அபுதாபி (17 ஜூலை 2021): வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை இந்தியாவிலிருந்து விமான சேவை இல்லை என்று எதிஹாத் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. கோவிட் பரவழைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கான பயணத் தடை ஏப்ரல் 24 முதல் நடைமுறைக்கு வந்தது. பின்னர் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்தியாவில் கோவிட் குறைந்து வருவதால் ஜூலை 21 க்கு பிறகு விமான சேவை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தடை நீடிக்கிறது….

மேலும்...

துபாயில் பக்ரீத் பண்டிகைக்குப் பிறகு கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு!

துபாய் (14 ஜூலை 2021): ஐக்கிய அரபு அமீரகத்தில் கோவிட் வழக்குகள் மற்றும் இறப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரக சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. கடந்த பண்டிகை விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறை நாட்களின் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த எச்சரிக்கை. ஐக்கிய அரபு அமீரக சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் டாக்டர்ஃபரீதா அல்-ஹுஸ்னி எச்சரித்துள்ளார். கடந்த பத்து நாட்களாக தினசரி கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை 1600 க்கு…

மேலும்...