கொரோனா வைரஸ் : பிளாஸ்மா சிகிச்சைக்கு உதவ முன்வந்துள்ள தமிழக முஸ்லிம்கள்!
திருச்சி (26 ஏப் 2020): கொரோனா பாதிக்கப்பட்டு பலரும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வைரஸின் பிளாஸ்மா சிகிச்சைக்கு உதவ நோயிலிருந்து நிவாரணம் பெற்ற முஸ்லிம்கள் முன்வந்துள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிக அளவில் பரவி வருகிறது. ஜாதி மத பேதமின்றை அனைவரையும் கொரோனா தாக்கி வருகிறது. இந்நிலையில் டெல்லி தப்லீக் ஆலோசனை கூட்டத்துக்கு சென்று திரும்பிய தமிழகத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் அரசின் உத்தரவை அடுத்து தானாகவே முன் வந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு…