ஹிஜாப் விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி (16 மார்ச் 2022): ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய அனைத்து மனுக்களையும் கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. மேலும் இஸ்லாத்தில் ஹிஜாப் அவசியமான ஒன்று அல்ல என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நிதிமன்றத்தில் மாணவிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மனுதாரர்கள் சார்பில்…

மேலும்...

மீடியா ஒன் தொலைக்காட்சி மீதான தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (16 மார்ச் 2022): பிரபல மலையாள தொலைக்காட்சி சேனலான மீடியா ஒன் மீதான ஒன்றிய அரசின் தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீடியா ஒன் தொலைக்காட்சி கடந்த ஜனவரி மாதம் ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்டது. இதனை எதிர்த்து அத்தொலைக்காட்சி நிறுவனம் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஆனால் கேரள நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இதனை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான…

மேலும்...

ஹிஜாப் மத அடிப்படையில் அவசியமில்லையா? – உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு!

புதுடெல்லி (15 மார்ச் 2022): ஹிஜாப் தொடர்பான கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, “அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது” என்று கூறி முஸ்லிம் மாணவிகள் நிபா நாஸ் மற்றும் மணன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இருவர் சார்பிலும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அனஸ் தன்வீர் சிறப்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்த மனுவில், மத சுதந்திரம் மற்றும் மனசாட்சி சுதந்திரம் என்ற இரு வேறுபாட்டை உருவாக்குவதில் உயர்நீதிமன்றம் தவறிழைத்துள்ளதாக மனுதாரர்கள் மிகவும் தாழ்மையுடன் சமர்ப்பிப்பதாக…

மேலும்...

ஹிஜாப் விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி (11 பிப் 2022): ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர முஸ்லீம் பெண்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் ஹிஜாப் அணிய தடை…

மேலும்...

ஹிஜாப் விவகாரம் – முஸ்லிம் மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு!

புதுடெல்லி (11 பிப் 2022): மத அடையாளங்களுடன் பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்கள் வர தடை வழங்கி கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர முஸ்லீம் பெண்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப்…

மேலும்...

விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் விவகாரம் – உச்ச நீதிமன்றத்தில் கபில் சிபல் அவரசர மனு!

புதுடெல்லி (10 பிப் 2022): ஹிஜாப் தொடர்பான வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இருந்து தனக்கு மாற்றுவதற்கான மனுவை பட்டியலிட மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கோரிக்கை வைத்துள்ளார். இதனை பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான பெஞ்ச் இதுகுறித்த உத்தரவில், இந்த வழக்கை உயர்நீதிமன்றம் கைப்பற்றியுள்ளதாகவும், விசாரணையைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியது. வழக்கை மாற்றக் கோரியும், உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கும் கோரி,…

மேலும்...

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ளவர்களுக்கு சலுகைகள் கூடாது – தமிழக அரசு!

புதுடெல்லி (09 பிப் 2022): கோவை குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களுக்கு ஜாமீன் உள்ளிட்ட எந்த சலுகைகளும் வழங்கக்கூடாது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 1998 ஆம் ஆண்டு கோவையில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி மூஸா மொய்தீன் உள்ளிட்ட 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அவர் அடைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் உச்சநீதிமன்றத்தில், தாங்கள் அனைவரும் 24 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருவதாகவும், தங்களுக்கு…

மேலும்...
Supreme court of India

மின்னணு வாக்கு எந்திரங்களை பயன்படுத்துவதை ரத்து செய்யும் மனு – உச்ச நீதிமன்றம் விசாரிக்க முடிவு!

புதுடெல்லி (20 ஜன 2022): தேர்தலில் வாக்குச் சீட்டுக்குப் பதிலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (இவிஎம்) பயன்படுத்தும் முடிவை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதிகளின் அரசியலமைப்பு செல்லுபடியை கேள்விக்குள்ளாக்கிய மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான அமர்வு இந்த மனுவை பரிசீலிக்கும். உத்தரபிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தேர்தல்களை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும்…

மேலும்...
Supreme court of India

ஒன்றிய அரசு இயற்றும் சட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி அதிருப்தி!

புதுடெல்லி (15 ஆக 2021): இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்ற வளாகத்தில் நடந்த 75வது சுதந்திர தின விழா நிகழ்ச்சியின் போது தலைமை நீதிபதி என்.வி.ரமணா உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ”விவாதங்கள் இல்லாமல் நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்கள் இயற்றுவது வருத்தமளிக்கிறது. போதுமான விவாதங்கள் இன்றி சட்டங்கள் இயற்றப்படுவதால் அதிக வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. அதேபோல் விவாதங்கள் நடக்காததால் சட்டத்தின் நோக்கத்தை புரிந்து கொள்ள…

மேலும்...
Supreme court of India

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (29 ஜூன் 2021): ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் மத்திய அரசு மானிய விலையில் மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான ரேஷன் கார்டுகள் நடைமுறையில் உள்ளன. இவற்றை மாற்றி ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வற்புறுத்தப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கார்டு இருந்தால் ஒருவர் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் உணவுப் பொருட்களை பெற்றுக்…

மேலும்...