சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை!

ரியாத் (13 நவ 2021): சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. பருவநிலை மாற்றத்தின் ஒரு பகுதியாக பெய்து வரும் இந்த மழை சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. ஜித்தாவில் நாளை வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தாயிஃப் நகரில் உள்ள ஹடா கணவாய் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மக்கா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே மழை பெய்யத் தொடங்கியது….

மேலும்...

சவூதியில் தனியார் துறையில் அதிகரிக்கும் சவூதி தொழிலாளர்கள் – வேலை இழக்கும் வெளிநாட்டினர்!

ரியாத் (05 நவ 2021): சவூதியில் தனியார் நிறுவனங்களில் சென்ற ஆண்டை விட அதிக அளவில் சவூதி தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். சவூதியில் உள்நாட்டு தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையிலும் வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கும் வகையிலும், பல முனைப்புகளை சவூதி அரசு செய்து வருகிறது. அதன்படி கடந்த மூன்று மாதங்களில் அறுபதாயிரம் சவூதியர்கள் தனியார் துறை நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தப்படுள்ளனர். இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மட்டும் தனியார் துறையில் உள்நாட்டுமயமாக்கல் 23 சதவீதமாக உயர்ந்துள்ளது. சவூதியில்…

மேலும்...

சவூதியில் இக்காமாவை தவணை முறையில் புதுப்பிக்கும் வசதி அமல்!

ரியாத் (04 நவ 2021): சவூதி அரேபியாவில் தவணை முறையில் இக்காமாவை புதுப்பிக்கும் முறை அமலுக்கு வந்தது. இதன் மூலம் சவூதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டினர், இக்காமா உள்ளிட்ட ஆவணங்களை மூன்று மாதங்கள் அல்லது ஆறு மாதங்களுக்கு புதுப்பிக்க முடியும். மேலும் தொழிலாளியின் ஸ்பான்சர்ஷிப்பை மாற்றுவதற்கான அனுமதி உட்பட பல்வேறு சேவைகள் அப்ஷர் இணையதளத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. சவூதி அரேபியாவில் தற்போது நடைமுறையில் உள்ளது என்னவென்றால், ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்களின் லெவியை மாதம் 800 ரியால் வீதம்…

மேலும்...

சவூதியிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணத்தின் சதவீதம் அதிகரிப்பு!

ரியாத் (03 நவ 2021): சவுதி அரேபியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் சதவீதம் சென்ற ஆண்டை விட அதிகரித்துள்ளது. சவூதி மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான முதல் ஒன்பது மாதங்களில், சவூதி வாழ் வெளிநாட்டினர் 110.23 பில்லியன் ரியால்களை அனுப்பியுள்ளனர். ஆனால் இந்த ஆண்டு அது ஆறு சதவீதம் உயர்ந்து 116.32 பில்லியன் ரியால்களாக உள்ளது. அதே சமயம், வெளிநாடுகளில் இருந்து வரும் பணம் கடந்த…

மேலும்...

அனுமதியின்றி மரங்களை வெட்டினால் ரூ. 4 லட்சம் வரை அபராதம்!

ரியாத் (28 அக் 2021): சவூதி அரேபியாவில் அனுமதியின்றி மரங்களை வெட்டினால் 20 ஆயிரம் ரியால் (இந்திய ரூபாயில் 4 லட்சம் வரை) அபராதம் விதிக்கப்படும். பசுமை சவுதி திட்டத்தின் ஒரு பகுதியாக, முதற்கட்டமாக நாடு முழுவதும் 50 கோடி மரங்கள் நடப்படும் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையில், சவூதி தாயிஃப் நகரில் அனுமதியின்றி மரங்களை வெட்டிய மூன்று பேருக்கு அபராதம் விதிக்கப்படுள்ளது. . புவி வெப்பமடைதல் மற்றும் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் சுற்றுச்சூழல் சட்டத்தை சவுதி…

மேலும்...

சவூதிக்கு வரமுடியாமல் தவிப்பவர்களின் விசா காலம் மேலும் நீட்டிப்பு!

ரியாத் (25 அக் 2021): சவூதிக்கு பயணத் தடை உள்ள நாடுகளை சேர்ந்தவர்களின் வருகை (விசிட்) விசாவின் செல்லுபடியாகும் காலம் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்படும் என்று சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்மூலம் பயணத் தடை உள்ள ​​இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, எகிப்து, துருக்கி, பிரேசில், எத்தியோப்பியா, வியட்நாம், ஆப்கானிஸ்தான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் பயனடைவார்கள். . கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவியதைத் தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின்படி…

மேலும்...

இந்தியா சவூதி அரேபியா இடையேயான சார்ட்டட் விமான சேவை நிறுத்தம்!

புதுடெல்லி (18 செப் 2021): இந்தியா சவூதி அரேபியா இடையேயான சார்ட்டட் விமான சேவை நிறுத்தப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்தியா சவூதி அரேபியா இடையே வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சார்ட்டட் விமான சேவை மட்டுமே இயங்கி வந்தன. ஆனால் தற்போது UAE கத்தார், பஹ்ரைன், ஓமன் மற்றும் இலங்கை போன்ற நாடுகளின் மூலம் இணைப்பு விமான சேவைகள் இப்போது இலகுவாக கிடைக்கின்றன. இதனால் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் இந்தியா ஆகியவை சவுதி அரேபியாவிலிருந்து…

மேலும்...

துபாய் வழியாக சவூதி செல்ல இந்தியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

ரியாத் (10 செப் 2021): சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே மீண்டும் விமான சேவை இயக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் தினசரி புக்கிங்குகளை தொடங்கியுள்ளது. கோவிட் பரவலை தடுக்கும் விதமாக சவூதி அரேபியா கடும் விமான போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்நிலையில் தற்போது கட்டம் கட்டமாக விமான போக்குவரத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சவூதி துபாய் விமான போக்குவரத்து தடை நீக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சவூதிக்கு…

மேலும்...

சவூதியில் 200 க்கு கீழே குறைந்த கொரோனா பாதிப்பு!

ரியாத் (01 செப் 2021): சவூதியில் புதன்கிழமை மாலை நிலவரப்படி 185 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சவூதி சுகாதார அமைசகத்தின் அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 185 புதிய நோய்த்தொற்றுகள் பதிவு செய்யப்பட்டன மேலும் 7 பேர் வைரஸால் உயிரிழந்துள்ளனர். இது சவூதியில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 544,634 ஆகவும், வைரஸ் தொடர்பான மரணம் 8,552 ஆகவும் உள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 301 பேர் குணமடைந்துள்ளனர், இதனால்…

மேலும்...

கோவிட் நடைமுறை சில தளர்வுகளை அடுத்து இந்தியாவிலிருந்து சவூதிக்கு இந்தியர்கள் வருகை!

ஜித்தா (30 ஆக 2021): சவுதியில் இரண்டு கோவிட் தடுப்பூசி பெற்றவர்கள் வேறு நாட்டில் தனிமைப்படுத்தல் இன்றி சவூதி திரும்பலாம் என்ற உத்தரவை அடுத்து இந்தியர்கள் சவூதி அரேபியா வர தொடங்கியுள்ளனர். கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து 395 பயணிகளுடன் ஜித்தா வந்த சவூதி அரேபின் ஏர்லைன்ஸ் சார்ட்டட் விமானத்தில், வந்த பயணிகள் ஏஜெண்டுகள் அரை லட்சத்திற்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக கூறினர். ஏற்கனவே சுகாதார பணியாளர்கள் வருவதற்கு சவூதி அரேபியா தடை விதிக்கவில்லை என்கிற போதிலும், புதிய…

மேலும்...