மத்திய பட்ஜெட்டுக்கு முதல்வர் எடப்பாடியின் கருத்து!
சென்னை (01 பிப் 2020): மத்திய அரசின் பட்ஜெட் எதிர்கால வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் அமைந்துள்ளதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், நாட்டு மக்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ள 2020-21 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததற்காக மத்திய நிதியமைச்சரை நான் பாராட்டுகிறேன். இந்த நிதி நிலை அறிக்கை உள்கட்டமைப்பு, விவசாயம், பாசன வசதி மற்றும்…