ஒன்றிய பட்ஜெட்டில் வருமான வரி வரம்பு அதிகரிப்பு!

புதுடெல்லி (01 பிப் 2023): 2023-2024 நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதில், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், புதிய வரி முறையில் வருடத்திற்கு ரூ. 7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது. ஏற்கனவே ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது என இருந்த நிலையில், தற்போதைய பட்ஜெட்டில் அது ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பழைய வரி…

மேலும்...

நிர்மலா சீதாராமன் நீக்கம்? – மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?

புதுடெல்லி (31 மே 2020): மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனை நீக்கிவிட்டு தேசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் பதவியை நேற்று ராஜினாமா செய்த கே.வி.காமத், புதிய நிதியமைச்சராக நியமிக்கப்படலாம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மத்திய நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாரமன் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார். நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியை அவரால் சரிவர சரிசெய்ய முடியவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. இந்நிலையில் பிரிக்ஸ் எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய…

மேலும்...

குழப்படியான கணக்கு – மத்திய அமைச்சர்கள் மீது ப.சிதம்பரம் சாடல்!

சென்னை (15 மே 2020): மத்திய அமைச்சர்கள், நிர்மலா சீதாராமனும், நிதின் கட்கரியும், முதலில், தங்கள் கணக்குகளை சரி செய்யட்டும்,’ என, முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, சிதம்பரம் கூறியுள்ளார். ‘ இதுகுறித்து ப.சிதம்பரம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது “நிதின் கட்கரி ஒரு பேட்டியில், ‘அரசுகளும், பொதுத்துறை நிறுவனங்களும் சேர்ந்து சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு, 5 லட்சம் கோடி ரூபாயை செலுத்தாமல், நிலுவை வைத்துள்ளன’ என, கூறியுள்ளார். ஆனால், நிதியமைச்சர், நிர்மலா சீதராமன்,…

மேலும்...

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் புதிய அறிவிப்புகள்!

புதுடெல்லி (14 மே 2020): கடன் பெறும் விவசாயிகள் முதல் 3 மாதங்களுக்கு தவணை செலுத்த தேவையில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த, ரூபாய் 20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதார திட்டங்களில், ரூபாய் 3.60 லட்சம் கோடிக்கான திட்டங்களை நேற்று அறிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், கடன் பெறும் விவசாயிகள் முதல் 3…

மேலும்...

கொரோனா பரவலை அடுத்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகள் வெளியீடு!

புதுடெல்லி (26 மார்ச் 2020): கொரோனா தொற்று இந்தியா முழுவதும் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதில் மருத்துவர்கள் மற்றும் தொழிலாளர் நலனுக்காக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். ► மத்திய அரசின் ‘கிஷன் சம்மான் நிதி’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், 2000 ரூபாய் தற்போது உடனடியாக வழங்கப்படும். இதன் மூலம், 8.69 கோடி விவசாயிகள்…

மேலும்...

தீவிர சிகிச்சைப் பிரிவில் இந்திய பொருளாதாரம் – ப.சிதம்பரம் தாக்கு!

புதுடெல்லி (10 பிப் 2020): இந்திய பொருளாதாரம் தீவிர சிகிச்சப் பிரிவில் உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் இன்று பேசிய சிதம்பரம், இந்திய பொருளாதாரம் குறித்து கடும் கவலை கொண்டார். மேலும் பொருளாதாரம் பாதிக்கப்படுவதை தடுக்க மோடி தலைமையிலான அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்க தவறி விட்டது. மிகவும் திறமையற்ற, தகுதியற்ற டாக்டர்களால் பொருளாதாரம் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குள் தள்ளப்பட்டுள்ளது. அதனை வெளியில் கொண்டு வர தெரியாத தகுதியற்ற டாக்டர்கள், தங்களுக்கு…

மேலும்...

வெளிநாட்டில் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி விதிப்பு உண்டா? நிர்மலா சீதாராமன் விளக்கம்!

புதுடெல்லி (02 பிப் 2020): “வெளிநாட்டில் வருமானம் ஈட்டி, அதன் மூலம் இந்தியாவில் சொத்துக்கள் வாங்கியிருந்தால் வரி விதிக்கப்படும்!” என்று புதிய விளக்கத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், “வெளிநாடுகளில் பணியாற்றுபவர்களின் வருமானம் மற்றும் சொந்தமாக தொழில் நடத்தி அங்கேயே வாழும் இந்தியர்களின் வருமானம் மீதான வரிவிதிப்பு தொடர்பாக தெளிவான விளக்கம் இடம்பெறவில்லை!” என்ற சர்ச்சை எழுந்தது. சர்வதேச ஊடகங்களும், இந்தியாவின் முக்கிய ஊடகங்களும் “வெளிநாட்டு…

மேலும்...

ஒன்றும் புரியவில்லை – பட்ஜெட் குறித்து மன்மோகன் சிங் கருத்து!

புதுடெல்லி (02 பிப் 2020): நீண்ட நேரம் பட்ஜெட் வாசித்ததால் ஒன்றும் புரியவில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மல சீதாராமனால் சமர்ப்பிக்கப் பட்டது. இந்நிலையில் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள மன்மோகன் சிங், மிக நீண்ட பட்ஜெட். அதனால் என்னால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. புரிந்து கொள்ள வெக நேரம் தேவைப்படுகிறது என்றார். இதுதவிர காங்கிரஸ் தலைவர்கள் பலரும் மத்திய பட்ஜெட் வெற்று…

மேலும்...

இந்திய பட்ஜெட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வரி – அதிர்ச்சி தகவல்!

புதுடெல்லி (02 பிப் 2020): வெளிநாடு வாழ் இந்தியர்களும் வரி செலுத்தும் வகையில் இந்திய பட்ஜெட்டில் வரி விதிப்பு முறை மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. 2020-21 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நேற்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது தனிநபர் வருமான வரியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இதுகுறித்து நிருபர்களிடம் தெரிவித்த வருவாய்த் துறைச் செயலாளர் அஜய் பூஷன் பாண்டே., “வெளிநாடு வாழ் இந்தியர்களும் வரி செலுத்தும் வகையில் வரி செலுத்தும் முறையில்…

மேலும்...

மத்திய பட்ஜெட் திருப்தியில்லை – ஸ்டாலின் அறிக்கை!

மத்திய அரசின் பட்ஜெட்டில் திருப்தியில்லை என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு: மத்திய பா.ஜ.க அரசின் 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை ”பொருளாதார தேக்க நிலைமை”, “கிராமப்புறப் பொருளாதார வீழ்ச்சி”, “கிராமப்புற மக்களின் வருவாய்”, “வேலைவாய்ப்பின்மை” உள்ளிட்ட மிக முக்கியப் பிரச்சினைகள் குறித்துக் கிஞ்சித்தும் கவலை இல்லாமல், பா.ஜ.க விரும்பும் கலாச்சாரத் திணிப்பைச் செய்யும் ஒரு நிதிநிலை அறிக்கையாக இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது….

மேலும்...