இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் 946 பேர் மரணம் – அதிர்ச்சித் தகவல்!

புதுடெல்லி (08 டிச 2021): இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் 946 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை ராஜாங்க அமைச்சர் பாரதி பிரவின் பவார் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கிய கொரோனா வைரசின் கொடும் பயணத்தில் பல லட்சம் உயிர்கள் பறிபோயிருக்கின்றன. நேற்று முன்தினம் நிலவரப்படி நம் நாட்டில் 4,73,537 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர். நேற்று காலை வரை, 128.76 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை ராஜாங்க அமைச்சர் பாரதி…

மேலும்...

இந்தியாவில் மூன்றாவது அலை பிப்ரவரியில் உச்சத்தை தொடும் – விஞ்ஞானிகள் கருத்து!

கான்பூர் (07 டிச 2021): இந்தியாவில் பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தை தொடும் என்று ஐஐடி விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விஞ்ஞானி மனிந்திர அகர்வால் தெரிவிக்கையில், இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில், தினமும் ஒன்று முதல் ஒன்றரை லட்சம் கொரோனா வழக்குகள் பதிவாகலாம். ஆனால் மூன்றாவது அலை இரண்டாவது அலையை விட குறைவாக இருக்கும் என்று கூறினார். மேலும் ஓமிக்ரான், டெல்டாவை விட அதிக சக்தி வாய்ந்தது, ஆனால் குறைவான தீவிரம் கொண்டது என்று அகர்வால் தெரிவித்தார்….

மேலும்...

இந்தியாவில் அதிகரிக்கும் ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (05 டிச 2021): இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த சூழலில், உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமிக்ரான், பரவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கடந்த 24-ந் தேதி கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் 10 நாட்களில் 38-க்கும் மேற்பட்ட நாடுகளில் கால் பதித்து உலகை அதிர வைத்து வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் தோன்றியுள்ள தகவல் வெளியானதும் இந்தியா உஷாரானது. எனினும் இந்தியாவையும் ஒமைக்ரான் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கர்நாடகா, குஜாரத், டெல்லி மற்றும்…

மேலும்...

இந்தியாவில் இரண்டு கோவிட் தடுப்பூசி போட்டவர்கள் சவூதியில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளலாம்!

ரியாத் (04 டிச 2021): இந்தியாவில் இருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டு சவுதி அரேபியாவுக்கு வந்தவர்களுக்கு சவூதி அரேபியாவில் பூஸ்டர் டோஸ் போடப்பட்டு வருகிறது. சவூதியில் தடுப்பூசியைப் பெற்ற ஆறு மாதங்களுக்குப் பிறகு, பூஸ்டர் டோஸ் இப்போது பெற்றுக் கொள்ளலாம். இதற்கு செஹாத்தி செயலி மூலம் முன்பதிவு செய்யலாம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல இந்தியாவிலிருந்து இரண்டு டோஸ் கோவ்ஷீல்டுகளைப் பெற்று தடுப்பூசி சான்றிதழுக்காக சவுதி சுகாதார அமைச்சகத்தில் பதிவு செய்துள்ள அனைவரும் செஹாத்தி செயலி…

மேலும்...

இந்தியாவில் இருவருக்கு ஒமிக்றான் தொற்று!

பெங்களூரு (02 டிச2021): இந்தியாவில் இருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனாவைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் தற்போது ஒமிக்ரான் என்ற சொல்லைக் கேட்டாலே அச்சமடைந்து வருகின்றன. தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை மற்றும் வீரியமிக்க வைரசுக்கு ஒமிக்ரான் என்று விஞ்ஞானிகள் பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில் கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இருவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேவேளை மக்கள்…

மேலும்...

துபாய் மற்றும் சவூதி அரேபியாவிற்குள் நுழைந்த ஒமிக்ரான் வைரஸ்!

துபாய் (02 டிச 2021): கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரான் வைரஸ் நுழைந்ததை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் உறுதிபடுத்தியுள்ளன. கொரோனாவைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் தற்போது ஒமிக்ரான் என்ற சொல்லைக் கேட்டாலே அச்சமடைந்து வருகின்றன. தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை மற்றும் வீரியமிக்க வைரசுக்கு ஒமிக்ரான் என்று விஞ்ஞானிகள் பெயர் வைத்துள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் இது அதி வேகமாக பரவி வரும் நிலையில், சவூதி அரேபியா மற்றும்…

மேலும்...

ஒமிக்ரான் வைரஸ் குறித்து ஃபைஸர் நிறுவனம் சொல்வது என்ன?

நியூயார்க் (01 டிச 2021): தங்கள் நிறுவனத்தின் தற்போதைய தடுப்பூசி ஒமிக்ரானுக்கு எதிராக செயல்படாமல் போகலாம் என்பதால், அதற்கு எதிரான ஒரு தடுப்பூசி வெர்சனை உருவாக்கும் பணியை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்கா நாட்டில் 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளுடன் பி.1.1.529 என்ற புதிய கரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இந்த 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளில், 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் வைரஸின் ஸ்பைக் ப்ரோட்டினில் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் என உலக சுகாதார நிறுவனத்தால் பெயரிடப்பட்டுள்ள இந்தப்…

மேலும்...

சவூதி அரேபியாவின் புதிய உத்தரவு இந்தியர்களுக்கும் பொருந்தும்!

ரியாத் (30 நவ 2021): சவூதி அரேபியாவில் இருந்து விடுமுறையில் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்ற வெளிநாட்டினரின் விசா மற்றும் குடியுரிமை அட்டை (இக்காமா) காலாவதி காலம் வரும் ஜனவரி 31, 2022 வரை இலவசமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இது இந்தியர்களுக்கும் பொருந்தும். ஏற்கனவே அறிவித்தபடி நவம்பர் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் விசாக்கள் ஜனவரி 31, 2022 வரை நீட்டிக்கப்படும். சவூதிக்கு வர முடியாமல் நாட்டில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்களுக்கு இந்த முடிவு பயனுள்ளதாக இருக்கும். சவூதி…

மேலும்...

12 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு 7 நாள் தனிமைபப்டுத்தல் அவசியம் -தமிழக சுகாதாரத்துறை!

சென்னை (28 நவ 2021): கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஓமிக்ரான், பல்வேறு நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, தமிழகத்திற்கு 12 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு 7 நாள் தனிமைபப்டுத்தல் தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆபத்தான நாடுகளின் பட்டியலில் 12 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில், பங்களாதேஷ், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து, சிங்கப்பூர், ஜிம்பாப்வே, ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இதில் வளைகுடா நாடுகள் இடம்பெறவில்லை. 12 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு…

மேலும்...

குவைத்தில் பல்வேறு நாடுகளுக்கு மீண்டும் விமான தடை!

குவைத் (28 நவ 2021): குவைத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து நுழைய தடை விதிக்கும் வகையில் முன்பு நடைமுறையில் இருந்த சிவப்பு பட்டியல் முறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் புதிய வேரியன்ட் (ஒமிக்ரான்) பற்றிய அறிக்கைகளைத் தொடர்ந்து ஒன்பது ஆப்பிரிக்க நாடுகள் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, மொசாம்பிக், லெசோதோ, ஸ்வதானி, ஜாம்பியா மற்றும் மலாவி ஆகிய நாடுகளுக்கு விமானப் போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது. இந்த நாடுகளில் இருந்து வரும்…

மேலும்...