தமிழக எம்.பி முஹம்மது ஜான் மாரடைப்பால் மரணம்!

சென்னை (23 மார்ச் 2021): அதிமுக மாநிலங்களவை எம்.பி முஹம்மது ஜான் மாரடைப்பால் காலமானார். சட்டமன்றதேர்தலையொட்டி வாலாஜா அருகே பிரசாரத்தில் ஈடுபட வந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முகமது ஜானின் உயிர் பிரிந்தது. முகமது ஜான்.2019 ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவைக்கு முகமது ஜான் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. .

மேலும்...

திருமணமாகி 10 நாட்களில் சோகம் – புது மண தம்பதிகள் சாலை விபத்தில் மரணம்!

கோழிக்கோடு (14 நவ 2020): திருமணமாகி பத்தே நாட்கள் ஆன புதுமணத் தம்பதிகள் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த சலாவுதீன் (25), அவரது மனைவி பாத்திமா ஜுமனா (19) ஆகிய இருவரும் புல்லட்டில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கக்கஞ்சேரி ஸ்பின்னிங் மில் அருகே சென்று கொண்டிருந்தபோது, புல்லட்டின் மீது டேங்கர் லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே சலாவுதீன் இறந்தார். பாத்திமா ஜுமனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்…

மேலும்...

புருணை நாட்டு இளவரசர் அஜீம் திடீர் மரணம்!

புருணை (28 அக் 2020): புருணை நாட்டு இளவரசர் அஜீம் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புருணை நாட்டு சுல்தானின் வாரிசு இளவரசர் அஜிம். இவருக்கு 38 வயதாகிறது. இவர் கடந்த சில வருடங்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் இப்போது சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து அந்நாட்டில் 7 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த இளவரசர் பிரின்ஸ் புரொடக்சன்ஸ்…

மேலும்...

சாம்சங் நிறுவன சேர்மன் உயிரிழந்தார்!

ஸ்மார்ட் போன்களின் அரசன் என வர்ணிக்கப்படும் சாம்சங் நிறுவனத்தின் சேர்மன் லீ குன் ஹீ அவரது 78 வது வயதில் உயிரிழந்தார். உலக அளவில் சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள், தொலைக்காட்சிகள், எலக்ரானிக்ஸ் பொருள்களுக்கு மிகப் பெரிய வர்த்தகம் உள்ளது. அந்தப் பொருள்களின் தரத்தின் காரணமாகவே மக்களிடம் சாம்சாங்குக்கு அத்தனை மதிப்பு இருந்துவருகிறது. தந்தையின் இறப்புக்குப் பிறகு 1987-ம் ஆண்டு சாம்சங் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றார் லீ குன் ஹீ. அதுவரையில் மேற்குலக நாடுகள், குறைந்த விலையில் தொலைக்காட்சியை…

மேலும்...

முதல்வர் எடப்பாடியின் தாயார் மரணம்!

சேலம் (13 அக் 2020): முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவசாயி அம்மாள் (93) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் தவசாயி அம்மாள் கடந்த வெள்ளிக்கிழமையன்று முதுகு தண்டுவடம் பாதிப்பு காரணமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அதிகாலை 1.30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இதனையடுத்து அவரது உடல் சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. தாயாரின் மறைவு செய்தியறிந்து முதலமைச்சர்…

மேலும்...

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் கொரோனா பாதிப்பால் காலமானார்!

சென்னை (30 செப் 2020):இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் (94) கொரோனா பாதிப்பால் காலமானார். ராமகோபாலனுக்கு ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட போது போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார். இதையடுத்து, கடந்த 27-ம் தேதி மீண்டும் ராம கோபாலன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த 28-ம் தேதி வெளியான பரிசோதனை…

மேலும்...

புகழ் பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் மும்பையில் திடீர் மரணம்

மும்பை (24 செப் 2020): ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் மும்பையில் உயிரிழந்தார். ஜோன்ஸ் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2020 க்கான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனைக் குழுவில் இடம்பெற்று இருந்தார்.மேலும் மும்பையில் உள்ள ஏழு நட்சத்தி ஓட்டலில் தங்கி இருந்தார்.அங்கு அவர் மாரடைப்பால் காலமானார். ஜோன்ஸ் 1984 மற்றும் 1994 க்கு இடையில் ஆஸ்திரேலியாவுக்காக 52 டெஸ்ட் மற்றும் 164 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

மேலும்...

கொரோனா பாதிப்பால் மத்திய அமைச்சர் மரணம்!

புதுடெல்லி (24 செப் 2020): கொரோனா பாதிப்பால் மத்திய ரெயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி (வயது 65) உயிரிழந்துள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் அங்காடி, சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். சுரேஷ் அங்காடி கர்நாடகாவைச் சேர்ந்தவர். கர்நாடகாவின் பெலகாவி தொகுதியில் இருந்து 4 முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். டெல்லியில் இருந்து சுரேஷ் அங்காடியின்…

மேலும்...

விஜய் பட இயக்குநர் திடீர் மரணம்!

சென்னை (17 செப் 2020): நடிகர் விஜய் படத்தை இயக்கிய இயக்குநர் பாபு சிவன் (55) இன்று காலமானார். விஜய்-அனுஷ்கா நடித்த ‘வேட்டைக்காரன்’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பாபு சிவன். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ராசாத்தி என்ற நாடகத்தையும் இயக்கியுள்ளார். மேலும் தரணி இயக்கிய ‘குருவி’, பரதன் இயக்கிய பைரவா படங்களுக்கு வசனகர்த்தாவாகவும் இருந்த இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்…

மேலும்...

விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி திடீர் மரணம்!

சென்னை (10 செப் 2020): விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 45. நடிகர் வடிவேலு போன்றே தோற்றம் கொண்ட வடிவேலு பாலாஜிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மரணம் திரையுலகினரையும், டிவி நடிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வடிவேல் பாலாஜிக்கு, மனைவி, ஒரு…

மேலும்...