பிடிவாதத்தை கைவிடுகிறாரா சீமான்? – அதீத பரபரப்பில் நாம் தமிழர் தொண்டர்கள்!

திமுகவுடன் கடும் எதிர்ப்பை காட்டி வந்த சீமானின் சமீபத்திய நடவடிக்கைகள் பல்வேறு யூகங்களுக்கும், அனுமானங்களுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளன. முதல்வர் ஸ்டாலினை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துவிட்டு வந்ததில் இருந்தே பல்வேறு யூகங்களும், அனுமானங்களும் தமிழக அரசியலில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன. சீமானை பொறுத்தவரை திமுக என்றாலே அலர்ஜி.. ஸ்டாலின் என்றாலே ஆகாது. திமுக எதிர் கட்சியாக இருந்தபோதுகூட அதிமுகவை விட்டு, மேடைக்கு மேடை ஸ்டாலினை மட்டுமே சீமான் விமர்சித்து கொண்டே இருப்பார். ஆனால் ஸ்டாலின்…

மேலும்...

பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்த குஷ்பூ!

சென்னை (03 ஜூன் 2021): கருணாநிதி பிறந்தநாளை ஒட்டி நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பூ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பாஜகவினர் கருணாநிதியையும், திமுகவையும் சாடியே பதிவிடுவார். இந்நிலையில் குஷ்பூ வெளியிட்டுள்ள பதிவில், நீங்கள் எனக்கொரு சிறந்த ஆசான் என்று கலைஞர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி பாஜக நிர்வாகி குஷ்பு ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். குரு என்பவர் கடவுளுக்கும் மேலானவர். உங்கள் அருள் எனக்கு எப்போதும் இருக்கும் என்று அவர்தெரிவித்துள்ளார். இது பாஜகவினரை அதிர்ச்சி அடைய…

மேலும்...

திமுக அரசுக்கு ஐஸ் வைக்கும் குஷ்பூ!

சென்னை (08 மே 2021): “திமுக அரசின் உத்தரவுகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும்” என்று நடிகையும் பாஜகவில் சமீபத்தில் இணைந்தவருமான குஷ்பூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள தகவலில் கூறி இருப்பதாவது:- “தமிழக மக்கள் அனைவரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து இணைந்து செயல்பட வேண்டும். கொரோனோவுக்கு எதிரான போரில் அரசால் மட்டும் எல்லாவற்றையும் செய்ய முடியாது. மக்களின் பங்கும் முக்கியமானது. நம்மால் முடிந்த ஒத்துழைப்பை நாம் அளிப்போம். சிறு துளி பெருவெள்ளமாகும்!” என்று…

மேலும்...

தேர்தல் 2021 – தமிழகம் முன்னணி நிலவரம்!

கட்சி/தொகுதிகள் வெற்றி தோல்வி முன்னணி மொத்தம் திமுக கூட்டணி 136 136 அதிமுக கூட்டணி 92 92 அமமுக கூட்டணி மக்கள் நீ மய்யம் 1 1 நாம் தமிழர் கட்சி மற்றவை

மேலும்...

அலறும் தொண்டர்கள் – பதறும் அதிமுக தலைமை!

சென்னை (30 ஏப் 2021): ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்புகளை நம்ப வேண்டாம் என அதிமுகவினருக்கு தலைமை தெரிவித்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் முடிவுகள் இன்னும் ஒரு நாள் இடைவெளிக்குப் பின்னர், ஞாயிற்றுக் கிழமை அன்று வெளியாக இருக்கும் சூழ்நிலையில், “வாக்குக் கணிப்பு”-“எக்சிட் போல்” என்ற பெயரில் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கும் செய்தித்…

மேலும்...

தடுப்பூசி தட்டுப்பாடு விவகாரத்தில் அதிரடியில் இறங்கிய திமுக எம்.எல்.ஏ – குவியும் பாராட்டுக்கள்!

மன்னார்குடி (14 மன்னார்குடி அரசு மருத்துவமனையில் தடுப்பூசிக்கு கட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வந்ததை அடுத்து தி.மு.க எம்.எல். ஏ. டி.ஆர்.பி ராஜா அதிகாரிகளிடம் தெரிவித்து 5 மணி நேரத்தில் தடுப்பூசி கொண்டு வரச் செய்து வரவேற்பை பெற்றுள்ளார். . தஞ்சாவூர் மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் தடுப்பூசி பற்றாக்குறைக்கு உடனடியாக தீர்வு காணும்படியும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா 2-வது அலை மிகக் கடுமையாக வீசி வருகிறது. இதனால் இரவு நேர லாக் டவுன், பகல்…

மேலும்...

ஸ்டாலின் ராகுல் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் கொரோனாவால் மரணம்!

சேலம் (02 ஏப் 2021): சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயபிரகாஷ் கொரானா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 4 நாட்களாக, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். முன்னதாக சேலத்தில் கடந்த வாரம் திமுக தலைவர் ஸ்டாலின், ராகுல் காந்தி, மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் ஜெயபிரகாஷும்…

மேலும்...

ஆ.ராசாவுக்கு தடை!

சென்னை (01 ஏப் 2021): சட்டப்பேரவை தேர்தலில் 2 நாட்கள் பிரசாரம் செய்ய ஆ.ராசாவுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும் திமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து ஆ.ராசாவின் பெயரையும் நீக்கி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், பெண்களை அவமதிக்கும் வகையில் இனி எதிர்காலத்தில் பேசக்கூடாது என்றும், முதலமைச்சர் பழனிசாமி குறித்த விமர்சனத்துக்கு ஆ.ராசா அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்றும் இந்திய தலைமை…

மேலும்...

ஆ.ராசா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை?

சென்னை (31 மார்ச் 2021): திமுக எம்.பி ஆ.ராசா முதல்வர் எடப்பாடி குறித்து பேசிய நிலையில் அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. தனிமனித விமர்சனம் என்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் இது தொடர்பான அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திற்குத் தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு அனுப்பியிருந்தார். இந்த நிலையில், இது தொடர்பாக ஆ ராசாவுக்கு தேர்தல் ஆணையம் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக உரிய விளக்கத்தை இன்று மாலை 6…

மேலும்...

திமுகவுக்கு வாக்கு சேகரித்த காடுவெட்டி குருவின் மகளிடம் பாமகவினர் வாக்குவாதம்!

அரக்கோணம் (29 மார்ச் 2021): அரக்கோணம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்ட காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகையை பாமகவினர் சிலர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரச்சாரத்தை நிறுத்தி பலத்த காவல்துறை பாதுகாப்புடன் திரும்பிச் சென்றார். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இன்பசேகரன் பென்னாகரம் தொகுதியில் கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இன்று அவர் சின்னகொல்லப்பட்டி, பெரியகொல்லப்பட்டி, சோமனஅள்ளி, பூதிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். மேல்கொல்லபட்டி கிராமத்தில்…

மேலும்...