முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மரணம்!

புதுடெல்லி (31 ஆக 2020): முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். 84 வது வயதில் அவரது உயிர் பிரிந்தது. பிரணாப் முகர்ஜி கடந்த 9-ந்தேதி தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்தார். எனவே அவர் மறுநாள் டெல்லி ஆர்.ஆர்.ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அவரது மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே டாக்டர்கள் 5 மணி நேரம் ஆபரேஷன் செய்து அதை அகற்றினர். ஆனால் ஆபரேஷனுக்குப்…

மேலும்...

தமிழக அமைச்சரின் மனைவி மரணம்!

சென்னை (28 ஆக 2020): தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மனைவி கலைச் செல்வி சென்னையில் காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார். அவரது உடலை அமைச்சரின் சொந்த ஊருக்குச் சென்று இரவு இறுதி சடங்கு நடத்தப்படவுள்ளது.

மேலும்...

சட்டமன்ற கதாநாயகன் என்று போற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் ரஹ்மான்கான் மரணம்!

சென்னை (20 ஆக 2020): சட்டமன்ற கதாநாயகன் என்று போற்றப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் ரஹ்மான்கான் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். கொரோனா தொற்றுக்கு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை ரஹ்மான்கானுக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ரஹ்மான்கான் திமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ரகுமான்கான். திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராகவும் ரகுமான் கான் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஹ்மான்கான் மறைவையொட்டி திமுக…

மேலும்...

வீட்டுக்குள் வந்த இறந்த மனைவி – மகிழ்ச்சிக் கடலில் கணவர்!

பெங்களூரு (11 ஆக 2020): விபத்தில் இறந்த மனைவி தத்ரூபமாக அதே வடிவில் வீட்டுக்குள் இருக்க, குடும்பமே மகிழ்ச்சிக் கடலில் உள்ளது. இதுகுறித்த சுவாரஸ்ய சம்பவம் இதோ: கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் அப்பகுதியில் வணிக வளாகம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் பலியானார். இதனை அடுத்து கிருஷ்ணன் தன்னுடைய இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். அவர் தற்போது புதிதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். இந்நிலையில்…

மேலும்...

மனித நேய மக்கள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ அஸ்லம் பாஷா காலமானார்!

சென்னை (21 ஜூலை 2020): மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும், ஆம்பூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா இன்று அதிகாலை 5 மணியளவில் மரணமடைந்தார். இதுகுறித்து மமக தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அஸ்லம் பாஷாவின் மரணம் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். தனிப்பட்ட முறையில் எனது உடன் பிறவா சகோதரனை எனது மாணவராக வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் எனது வகுப்பில் 30 ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்து இனிமையாகப்…

மேலும்...

பிரபல திரைப்பட இயக்குநர் மரணம்!

மும்பை (21 ஜூலை 2020): பிரபல பாலிவுட் இயக்குநர் ரஜத் முகர்ஜி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். ரஜத் முகர்ஜிக்கு சில மாதங்களாக உடல் நல பாதிப்பு இருந்தது. சிறுநீரக பிரச்சினையாலும் அவதிப்பட்டார். இரண்டு வாரங்களுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. பின்னர் குணமடைந்து வீடு திரும்பி ஓய்வில் இருந்தார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்….

மேலும்...

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் காவல் உதவி ஆய்வாளர் மரணம்!

சென்னை (14 ஜூலை 2020): சென்னையில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒரு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தார். கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்த காவல்துறையினர் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த குருமூர்த்தி என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஏற்கனவே அத்துறையை சேர்ந்த மூன்று பேர்,…

மேலும்...

மணமகன் மரணம் – திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 95 பேருக்கு கொரோனா தொற்று!

பாட்னா (30 ஜூன் 2020): பீகாரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பீஹாரில் திருமணம் முடிந்த இரண்டே நாட்களில் கொரோனா அறிகுறியுடன் இருந்த புது மாப்பிள்ளை உயிரிழந்தார். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பீஹார் தலைநகர் பாட்னா அடுத்த பாலிகஞ்ச் பகுதியை சேர்ந்த 30 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் ஜூன் 15ம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த இரண்டு…

மேலும்...

பீகார் மின்னல் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 116 ஆக உயர்வு!

பாட்னா (26 ஜூன் 2020): பீகாரில் மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 116 பேர் உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலத்தில் பல பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது, வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் பலர் மின்னல் தாக்கி இறந்தனர். மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 83 பேர் மின்னல் தாக்கி இறந்திருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்தது. 30 பேர் இந்நிலையில் மின்னல் தாக்கியதில் பலியானோர் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.

மேலும்...

ஜெலட்டின் குண்டு வெடித்து சிறுவன் பலி – திருச்சி அருகே பயங்கரம்!

திருச்சி (11 ஜூன் 2020): திருச்சி அருகே ஜெலட்டின் குச்சியை தின்பண்டம் என நினைத்து கடித்த சிறுவன் அது வெடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே அலகரைப் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி மகன் விஷ்னுதேவ்(6). பூபதியின் அண்ணன் கங்காதரன். இந்நிலையில் கங்காதரன் வீட்டுக்கு பூபதி மற்றும் விஷ்னுதேவ் ஆகியோர் சென்றுள்ளனர். அங்கு ஜெலட்டின் குச்சி இருந்ததை பார்த்த விஷ்னு தேவ் அதனை ஏதோ தின்பண்டம் என நினைத்து கடித்துள்ளார். அது வெடித்து வாய் சிதறி…

மேலும்...